onsdag den 9. januar 2008

இளைய அப்துல்லாஹ்: சில வரிகள் எஸ்.கௌந்தி

இலங்கைத் தமிழர்களில் சிலர் எமது போர்க்கேள்வியை ஓர் கொடிய கேள்வியாகப் பார்த்துள்ளனர். அவர்களுள் எங்கள் கவனத்திற்குத் தப்பிப்போகாத ஒருவராக இளைய அப்துல்லாஹ் உள்ளார்.

அண்மையிலே இவரது 'பிணம் செய்யும் தேசம்" கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இவர் பற்றி இந்தப் புத்தகத்தின் பின்பக்கத்தில் சில குறிப்புகள் உள்ளன. 'லண்டன் தீபம் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற தொகுப்பாளராகத் திகழும் எம்.என்.எம் அனஸ் பத்திரிகை, வானொலி போன்ற ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் பரிச்சயம் கொண்டவர்.

இளைய அப்துல்லாஹ், மானுட புத்ரன், ஹரீரா அனஸ் ஆகிய புனைபெயர்களில் இவர் இலங்கையின் இலக்கிய தொகுதிக்கு வளம் சோத்திருக்கின்றார். 'எங்கள் தாயகமும் வடக்கே" என்ற இவரது ஒலிப்பதிவுக் கவிதை (ஒலி;பேழை) ஈழத்துக் கவிதை உலகிலும் அரசியல் உலகிலும் இவர் மீதான கவன ஈர்ப்பைத் தேடிக்கொடுத்திருக்கிறது. புலம்பெயர் சஞ்சிகைகளில் தனித்துவம்மிக்க இவரது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன." கவிஞர் தனது தொகுப்பிற்குக் கொடுத்திருக்கும் தலைப்பு எங்கள் தேசத்தின் யதார்த்தத்தை உண்மையிலேயே காட்டுகின்ற ஒன்றா?

கவிஞர் தலைப்புள் 'தேசம்" எனும் பதம் பாவிக்கப்பட்ட விதம் ஓர் தேசத்தைச் சுடுகாடாகக் காட்டுகின்றது. ஆம்! கவிஞர் மொழி பொய்மொழியல்ல. எங்கள் தேசத்தில் புலிகள் தொடக்கிய பயங்கரவாதத்தின்பின் பின்னர் ஏற்பட்ட அனுபவங்களின் தடங்களை இவரது கவிதைகளில் பல உள்ளடக்கியுள்ளன.

தெளிவும், பிரிவாற்றாமையின் தடங்களையும் கொண்ட இவரது கவிதைகள் ஏன் இலங்கை சீரழிந்து கொண்டுள்ளது என்பதைக் காட்டுவதற்கான இலக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதக்கூடியது.

நன்றி தாயகம்

lørdag den 5. januar 2008

"ரீமிக்ஸ்' வன்முறை!

அண்மைக்காலமாக பழைய தமிழ்த் திரைப்பாடல்கள் வேறுவிதமான இசை வடிவங்களில் மிகப் பரவலான முறையில் தமிழ் மக்களின் காதுகளைக் கிழித்துக் கொண்டிருக்கின்றன.

பழைய பாடல்களின் இனிமையைக் குலைத்து நிதானத்தை வேகப்படுத்தி இடையிடையே நகைப்புக்குரிய முறையில் ராக் இசையைத் திணிக்கும் வன்முறைக்கு நமது தமிழ்த் திரையுலகினர் "ரீமிக்ஸ்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

மேல்நாட்டு ராக் இசைப்பாடலின் நடுவிலே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி என்று நிதானமான தமிழில் இரண்டு வரிகளை யாராவது சேர்த்து ரீமிக்ஸ் முயற்சி சேர்க்கிறார்களா!

தனது வரலாற்றைத் தானே சிதைத்துக் கொள்கிற தமிழ்த் திரையுலகின் அதிகப்பிரசங்கித்தனத்தைக் கண்டித்து திரையுலகின் தரப்பில் இருந்தே முதல் கண்டனக்குரல் எழுந்திருக்க வேண்டும். அவ்வாறெல்லாம் எதுவும் நிகழவில்லை; அது ஏன் என்றும் தெரியவில்லை.

மனிதகுல வரலாற்றில் நாம் பார்க்கிற, படிக்கிற, கேட்கிற யாவுமே ஆவணங்களாகும். அவ்வகையில் நமது பழைய தமிழ்த் திரைப் பாடல்களும் நமக்கான ஆவணங்களாகவே திகழ்கின்றன. எனவே, அவற்றைக் குழப்பி அதில் மீன் பிடித்துப் பிழைக்கிற அவல நிலைக்கு இன்றைய நமது இளைய தலைமுறை இசைப் படைப்பாளிகள் போய்விடக்கூடாது. சந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டித்தேரு என்கிற ஒரு வரியில் தேனி வீரபாண்டிக் கோயிலின் தேர்த் திருவிழா குறித்து ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. வரலாற்றின் போக்கில் நாளை தேர் மாறினாலும், இந்தத் திரையிசை ஆவணம் மாறாது. இந்தப் பாடலை, மார்க்கட்ல நின்னாலும் நீ விரபாண்டி காரு' என்று ரீமிக்ஸ் செய்து பாடினால், அது நமது ஆவணத்துக்கெதிரான துரோகமேயன்றி வேறென்ன?

""பழைய பாடல்களின் வரிகளுக்கு வேறுவிதமான மியூசிக்கை கம்போசிங் செய்வது ஒன்றும் குற்றமல்ல. இப்படிப்பட்ட "மாடிஃபிகேஷனை' தற்போது மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஒவ்வொரு படத்திலும் ஒரு ரீமிக்ஸ் பாடலைப் போட வேண்டும் என்பது எங்கள் விருப்பமல்ல. அது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் விருப்பமாக இருக்கிறது. மற்றபடி இந்தப் போக்கு தவறானது எனும் கருத்திலும் உண்மையில்லாமலில்லை'' என்று ரீமிக்ஸ் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.
""தமது காலத்தில் திரைப்பாடல்களுக்கு இசையமைத்து அதைப் படைப்பாக்கி, மக்களின் மாபெரும் வரவேற்புடன் அவற்றை நிலைநிறுத்தியிருக்கும் மூத்த இசையமைப்பாளர்களுக்குச் செய்யும் துரோகமல்லவா இது? எனும் பேராசிரியர் நிர்மலா இராஜேந்திரனின் கேள்விக்கான விடையை இன்னும் எவரும் சொல்லவில்லை.

உலகின் மூத்த இசை தமிழ் இசைதான். இதை நுõற்றுக்கணக்கான இசை ஆய்வாளர்கள் உறுதி செய்திருப்பதோடு, திரும்பிய திசையெல்லாம் தமிழ் இசை ஒலிக்க வேண்டும் என்றும் விரும்பி, அதற்கு ஆதரவாக இயக்கத்தையே தொடங்கி நடத்தினார்கள். நமது தொன்மையான அந்த இசையை அடிப்படையாக வைத்தே தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கு அக்கால இசையமைப்பாளர்கள் இசையமைக்கத் தொடங்கினார்கள். அத்தகைய மரபுப் பெருமைமிக்க நமது திரையிசைப் பாடல்களை, மாடிஃபிகேஷன் செய்வது கடைந்தெடுத்த அதிகப்பிரசங்கித் தனமல்லவா?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நீர்த்தேக்கமான கல்லனை தொடர்ந்து பயன்படவேண்டும் என்பதற்காக அதன் உறுதிக்கு மேலும் உறுதி சேர்க்கும் விதமாக கட்டுமானத்தை பலப்படுத்துவது சீரிய பராமரிப்பு பழைய பாடல்களுக்கு அத்தகைய பராமரிப்பு அவசியமில்லை. அவை ஒவ்வொன்றும் தேயாத நிலவு.

19ஆம் நுõற்றாண்டில் ஸ்காட் என்ற ஐரோப்பிய பாதிரியார் தமிழின் யாப்பிலக்கணத்தில் வல்லவராகி, திருக்குறளை தம் விருப்பத்தக்குத் திருத்தி எழுதி, பால், இயல், அதிகாரங்களையம் மாற்றி (அதாவது மாடிஃபிகேஷன் செய்து கொண்டு) மதுரைக்குச் சென்று நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட வள்ளல் பாண்டித்துரைத் தேவரிடம் காட்டினார். அதிர்ச்சியடைந்த பாண்டித்துரை தேவர் அவரிடமிருந்து அந்த (திருத்தப்பட்ட) திருக்குறள்படிகள் மொத்தத்தையும் விலைகொடுத்து வாங்கி, தீ வைத்துக் கொளுத்தி, திருக்குறளைக் காப்பாற்றினார். அதுபோல ரீமிக்ஸ் பாடல்களுக்கு ஒரு முடிவு கட்டினால் இப்பிரச்னைக்குத் தீர்வு கிட்டும்.

நன்றி கல்கி

fredag den 4. januar 2008

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.

தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.

சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.

மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும்.

காது நன்கு கேட்க!காதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( விஜுற்ஐதீழி ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!மனம் மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா?

அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.

இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.

கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.

காய்ச்சல் குணமாக லிங் முத்திரை!இரண்டு உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக் கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங்( யிஷ்ஐஆ ) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.

நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரைநெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு(ழிஸ்ரீழிஐ ஸழிதீற்) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.

மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.

இரத்தக் கொதிப்பா? வியான முத்திரைஇரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான( ஸதீழிஐழி ) முத்திரை என்று இதற்குப் பெயர்.எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.

tirsdag den 1. januar 2008