tirsdag den 15. september 2009

மைக்கேல் ஜாக்ஸன் :கிருஷ்ணா டாவின்ஸி

அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து சுமாராக ஹாலோ கிடார் வாசிக்கத் தெரிந்த இருவர், (ஒருவர் ‘லீட்’ மற்றொருவர் ‘ரிதம்’ என்று பந்தா விடுவோம் ), ஒரு டபுள் பேஸ் வாசிப்பவன், சாதாரண காஸியோ கீபோர்ட் வாசிப்பவன் மற்றும் இரண்டு உள்ளூர் பாடகர்களை வைத்துக் கொண்டு நாங்கள் அடித்த அமெசுர் இசைக்குழு லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது இரண்டு விஷயங்கள்தான் பேசுவதற்கு விருப்பமானதாக இருந்தன. ஒன்று கிரிக்கெட், இரண்டாவது இசை.

பொதுவாகவே இந்தியத் திரை இசையில் அப்போது ஒரு தேக்கம் நிலவியது. இந்திப் பாடல்கள் எல்லாம் அலுத்து விட்டன. தமிழ்ப்பாடல்களிலும் ஒருமுகத்தன்மை வந்திருந்தது. அப்போதுதான் நாங்கள் மெதுவாக மேற்கத்திய இசையிடம் தாவினோம். அதற்கு முக்கியமான காரணம் மைக்கேல் ஜாக்ஸனின் “திரில்லர்’’ இசை ஆல்பம். போனி எம், அபா, டிஸ்கோ ஜூரம் எல்லாம் ஓய்ந்து போயிருந்த நேரத்தில் ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ( மெலிதான சோக இசை) மற்றும் ‘soul’ இசையில் பிளந்து கட்டிய ஜாக்ஸனின் அதிரடி இசை கேட்டு நாங்கள் ஆடிப்போயிருந்தோம். காஸட் நாடா அறுந்து போகும் வரை தொடர்ந்து சோறு தண்ணியில்லாமல் ‘திரில்லர்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தோம்.

திரில்லர் ஆல்பத்துக்காக ஏகப்பட்ட கிராமி அவார்டுகளை அள்ளி, உலகெங்கும் நாற்பது மில்லியன் காஸெட்டுகளுக்கு மேல் விற்ற மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் பைத்தியமாகி, அவரின் ஏனைய பாடல்களெல்லாம் எங்கே சல்லிசாகக் கிடைக்கும் என்று எங்கள் இளைஞர் அணிப் பட்டாளமே சென்னையை அலசியது. கடைசியில் பாரிஸ் கார்னர், பர்மா பஜாரின் கடைசி பகுதியில் ஒளிந்திருந்த இதயத்துல்லா என்பவரின் காஸட் கடையைக் கண்டுபிடித்தோம். மிகச் சிறிய கடைதான், ஆனால் அங்கே பல பொக்கிஷங்களை காஸட் வடிவத்தில் அடுக்கியிருந்தார். வெறும் ஒரு காஸட் கடைக்காரராக மட்டுமே அல்லாமல் மேற்கத்திய இசை மற்றும் உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த மிகப்பெரும் கலாரசிகராகவும் அவர் இருந்தார். மைக்கேல் ஜாக்ஸனின் சிறு வயது ஆல்பமான “ஆப் தி வால்’’ ஐக் கொடுத்து “இதைப் பாடும் போது அவருக்கு 11 வயசு’’ என்றது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆல்பத்தைக் கேட்டபோது இத்தனை சின்னச் சிறுவன் இவ்வளவு அற்புதமாகப் பாடுவானா என்று மலைப்பாகவும் இருந்தது. “ப்ராடிஜி’’ ( இளம் மேதை ) என்கிற சொல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது.

மைக்கேல் ஜாக்ஸன் ஓர் ஆரம்பம்தான். அதற்குப் பிறகு இதயத்துல்லாவின் கடையில் ( இப்போது அது இல்லை ) டினா டர்னர், தி போலீஸ், டேவிட் போவி, டுரான் டுரான், லயனல் ரிச்சி, பில்லி ஓஷன், ப்ரூஸ் ஹார்ன்ஸ்பி, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயின், சிம்ப்ளி ரெட், எரித்மிக்ஸ், டிரேஸி சாப்மென், டான் சீல்ஸ் என்று ஏகப்பட்ட அற்புத இசைக்கலைஞர்களையும் குழுக்களையும் கண்டுபிடித்தோம். மேற்கத்திய இசையில் இருந்த பாப், ரகே, ரிதம் அண்ட் ப்ளூஸ், ஜாஸ், ராக், ராப், ஆப்ரிக்கா, லாட்டினோ, சாப்ட் ராக், ஹெவி மெட்டல், கண்ட்ரி போன்ற ஏகப்பட்ட இசை வகைகள் எங்களை ஒரு போதை உலகத்துக்கே அழைத்துச் சென்றன. ‘ஸ்டிங்’ போன்ற இசைக்கலைஞர்கள் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருந்த அரபி சுபி இசையும் மலைக்க வைத்தது. அடடா இப்படி ஒரு பிருமாண்டமான இசை உலகம் இருக்கிறதா என்று பிரமிப்பாக இருந்தது.

இதற்கெல்லாம் ஓர் ஆரம்பமாக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவருடைய இசை இழுத்த இழுப்புக்குத்தான் நாங்கள் ஓடினோம். முதலில் திரில்லர் ஆல்பத்தில் இருந்த “பீட் இட்’’ “பில்லி ஜீன்’’ “வான பி ஸ்டார்ட்டிங் சம்திங்’’ மற்றும் “திரில்லர்’’ இந்த நான்கு பாட்டுக்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல்கள் எல்லாமே அதிரடி இசையாலும் அசர வைக்கும் வீடியோக்களாலும் பிரபலமானவை. அதுநாள் வரை சட்டை செய்யாமலே இருந்த திரில்லர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை மெதுவாகக் கேட்டபோதுதான், அடடா எத்தனை பெரிய இசைப் புதையலை இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாகியது. “pretty young thing” , “lady in my life” “humen nature”, “the girl is mine” போன்ற அந்தப் பாடல்களில் இருந்த மென்மையும் பாவமும் உயிரையே உருக்கியது. மைக்கேல் ஜாக்ஸன் வெறும் அதிரடிப் பாடகர் மட்டும் அல்ல அவர் ஒரு மெலடி கிங்கும்தான் என்பது தெரிய வந்தது.

மைக்கேல் ஜாக்ஸன் வார்த்தைகளே கொஞ்சமும் புரியாதபடி பாடுவதில் பெரிய கில்லாடி.

“anne, are you ok?” என்கிற வார்த்தையை அவர் எப்படிப் பாடுவார் என்பதை “smooth criminal” பாடலில் கேட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். வார்த்தைகளை வளைத்து, இழுத்து, பிசைந்து ஒரு வழி ஆக்கி விடுவார். பல பாடல்களின் அர்த்தம் புரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஒரு நண்பனின் வீட்டில் மைக்கேல் ஜாக்ஸனின் பல பாடல்களின் கவிதைவரிகளின் தொகுப்பு திடீரென்று கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டு (பெரும்பாலான பாடல்களை எழுதியது அவர்தான்) அந்தப் பாடல்களைக் கேட்ட போது ஏற்பட்ட பரவசநிலை சொல்லில் விளங்காதது. பாடல் வரிகளைத் தன் குரல் என்னும் முரட்டுக் குதிரையில் ஏற்றி அவர் பாடும் முறை யாராலும் காப்பி அடிக்க முடியாத ஒன்று. ஸ்பீல்பர்க் சொன்னார். “பாப் இசையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் மைக்கேல் ஜாக்ஸனும் இருக்கிறார்”. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. “பாப் இசையில் எத்தனையோ குரல்கள் இருக்கின்றன. மைக்கேல் ஜாக்ஸனின் குரலும் இருக்கின்றது.”

சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை ஒரு புத்தகமாக “மூன்வாக்கர்’’ என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஜாக்ஸன். ஓர் இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பற்றிய அற்புதப் படைப்பு அது.

மைக்கேல் ஜாக்ஸனின் பெரும்பாலான பாடல்கள் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவையே. பல பாடல்களை அவரே எழுதினார். அதில் மிகப் பிரபலமான பாட்டு “வி ஆர் தி வேர்ல்ட்”. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் இறந்த போது அவர்களுக்கான நிதி திரட்ட இசை ஆல்பத்தில் ஜாக்ஸன் அந்தப் பாட்டை இயற்றி சக இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். நிறவெறி, யுத்த வெறிக்கான எதிர்ப்பு, உலக அமைதிக்கான கோரிக்கைகள், கறுப்பின மக்களின் துயர்கள், காடுகளை அழிப்பதை எதிர்ப்பது, போன்றவை மட்டுமில்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புகள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது. உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் (சுமார் 39 நிறுவனங்கள்) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது.

“நான் என்றென்றும் இருப்பேன்’’ என்பது அவருடைய இன்னொரு பாடலின் பெயர். உண்மைதான். அவர் இசை என்றைக்கும் மரணமடையாது. அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து சுமாராக ஹாலோ கிடார் வாசிக்கத் தெரிந்த இருவர், (ஒருவர் ‘லீட்’ மற்றொருவர் ‘ரிதம்’ என்று பந்தா விடுவோம் ), ஒரு டபுள் பேஸ் வாசிப்பவன், சாதாரண காஸியோ கீபோர்ட் வாசிப்பவன் மற்றும் இரண்டு உள்ளூர் பாடகர்களை வைத்துக் கொண்டு நாங்கள் அடித்த அமெசுர் இசைக்குழு லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது இரண்டு விஷயங்கள்தான் பேசுவதற்கு விருப்பமானதாக இருந்தன. ஒன்று கிரிக்கெட், இரண்டாவது இசை.

பொதுவாகவே இந்தியத் திரை இசையில் அப்போது ஒரு தேக்கம் நிலவியது. இந்திப் பாடல்கள் எல்லாம் அலுத்து விட்டன. தமிழ்ப்பாடல்களிலும் ஒருமுகத்தன்மை வந்திருந்தது. அப்போதுதான் நாங்கள் மெதுவாக மேற்கத்திய இசையிடம் தாவினோம். அதற்கு முக்கியமான காரணம் மைக்கேல் ஜாக்ஸனின் “திரில்லர்’’ இசை ஆல்பம். போனி எம், அபா, டிஸ்கோ ஜூரம் எல்லாம் ஓய்ந்து போயிருந்த நேரத்தில் ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ( மெலிதான சோக இசை) மற்றும் ‘soul’ இசையில் பிளந்து கட்டிய ஜாக்ஸனின் அதிரடி இசை கேட்டு நாங்கள் ஆடிப்போயிருந்தோம். காஸட் நாடா அறுந்து போகும் வரை தொடர்ந்து சோறு தண்ணியில்லாமல் ‘திரில்லர்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தோம்.

திரில்லர் ஆல்பத்துக்காக ஏகப்பட்ட கிராமி அவார்டுகளை அள்ளி, உலகெங்கும் நாற்பது மில்லியன் காஸெட்டுகளுக்கு மேல் விற்ற மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் பைத்தியமாகி, அவரின் ஏனைய பாடல்களெல்லாம் எங்கே சல்லிசாகக் கிடைக்கும் என்று எங்கள் இளைஞர் அணிப் பட்டாளமே சென்னையை அலசியது. கடைசியில் பாரிஸ் கார்னர், பர்மா பஜாரின் கடைசி பகுதியில் ஒளிந்திருந்த இதயத்துல்லா என்பவரின் காஸட் கடையைக் கண்டுபிடித்தோம். மிகச் சிறிய கடைதான், ஆனால் அங்கே பல பொக்கிஷங்களை காஸட் வடிவத்தில் அடுக்கியிருந்தார். வெறும் ஒரு காஸட் கடைக்காரராக மட்டுமே அல்லாமல் மேற்கத்திய இசை மற்றும் உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த மிகப்பெரும் கலாரசிகராகவும் அவர் இருந்தார். மைக்கேல் ஜாக்ஸனின் சிறு வயது ஆல்பமான “ஆப் தி வால்’’ ஐக் கொடுத்து “இதைப் பாடும் போது அவருக்கு 11 வயசு’’ என்றது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆல்பத்தைக் கேட்டபோது இத்தனை சின்னச் சிறுவன் இவ்வளவு அற்புதமாகப் பாடுவானா என்று மலைப்பாகவும் இருந்தது. “ப்ராடிஜி’’ ( இளம் மேதை ) என்கிற சொல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது.

மைக்கேல் ஜாக்ஸன் ஓர் ஆரம்பம்தான். அதற்குப் பிறகு இதயத்துல்லாவின் கடையில் ( இப்போது அது இல்லை ) டினா டர்னர், தி போலீஸ், டேவிட் போவி, டுரான் டுரான், லயனல் ரிச்சி, பில்லி ஓஷன், ப்ரூஸ் ஹார்ன்ஸ்பி, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயின், சிம்ப்ளி ரெட், எரித்மிக்ஸ், டிரேஸி சாப்மென், டான் சீல்ஸ் என்று ஏகப்பட்ட அற்புத இசைக்கலைஞர்களையும் குழுக்களையும் கண்டுபிடித்தோம். மேற்கத்திய இசையில் இருந்த பாப், ரகே, ரிதம் அண்ட் ப்ளூஸ், ஜாஸ், ராக், ராப், ஆப்ரிக்கா, லாட்டினோ, சாப்ட் ராக், ஹெவி மெட்டல், கண்ட்ரி போன்ற ஏகப்பட்ட இசை வகைகள் எங்களை ஒரு போதை உலகத்துக்கே அழைத்துச் சென்றன. ‘ஸ்டிங்’ போன்ற இசைக்கலைஞர்கள் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருந்த அரபி சுபி இசையும் மலைக்க வைத்தது. அடடா இப்படி ஒரு பிருமாண்டமான இசை உலகம் இருக்கிறதா என்று பிரமிப்பாக இருந்தது.

இதற்கெல்லாம் ஓர் ஆரம்பமாக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவருடைய இசை இழுத்த இழுப்புக்குத்தான் நாங்கள் ஓடினோம். முதலில் திரில்லர் ஆல்பத்தில் இருந்த “பீட் இட்’’ “பில்லி ஜீன்’’ “வான பி ஸ்டார்ட்டிங் சம்திங்’’ மற்றும் “திரில்லர்’’ இந்த நான்கு பாட்டுக்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல்கள் எல்லாமே அதிரடி இசையாலும் அசர வைக்கும் வீடியோக்களாலும் பிரபலமானவை. அதுநாள் வரை சட்டை செய்யாமலே இருந்த திரில்லர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை மெதுவாகக் கேட்டபோதுதான், அடடா எத்தனை பெரிய இசைப் புதையலை இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாகியது. “pretty young thing” , “lady in my life” “humen nature”, “the girl is mine” போன்ற அந்தப் பாடல்களில் இருந்த மென்மையும் பாவமும் உயிரையே உருக்கியது. மைக்கேல் ஜாக்ஸன் வெறும் அதிரடிப் பாடகர் மட்டும் அல்ல அவர் ஒரு மெலடி கிங்கும்தான் என்பது தெரிய வந்தது.

மைக்கேல் ஜாக்ஸன் வார்த்தைகளே கொஞ்சமும் புரியாதபடி பாடுவதில் பெரிய கில்லாடி.

“anne, are you ok?” என்கிற வார்த்தையை அவர் எப்படிப் பாடுவார் என்பதை “smooth criminal” பாடலில் கேட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். வார்த்தைகளை வளைத்து, இழுத்து, பிசைந்து ஒரு வழி ஆக்கி விடுவார். பல பாடல்களின் அர்த்தம் புரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஒரு நண்பனின் வீட்டில் மைக்கேல் ஜாக்ஸனின் பல பாடல்களின் கவிதைவரிகளின் தொகுப்பு திடீரென்று கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டு (பெரும்பாலான பாடல்களை எழுதியது அவர்தான்) அந்தப் பாடல்களைக் கேட்ட போது ஏற்பட்ட பரவசநிலை சொல்லில் விளங்காதது. பாடல் வரிகளைத் தன் குரல் என்னும் முரட்டுக் குதிரையில் ஏற்றி அவர் பாடும் முறை யாராலும் காப்பி அடிக்க முடியாத ஒன்று. ஸ்பீல்பர்க் சொன்னார். “பாப் இசையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் மைக்கேல் ஜாக்ஸனும் இருக்கிறார்”. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. “பாப் இசையில் எத்தனையோ குரல்கள் இருக்கின்றன. மைக்கேல் ஜாக்ஸனின் குரலும் இருக்கின்றது.”

சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை ஒரு புத்தகமாக “மூன்வாக்கர்’’ என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஜாக்ஸன். ஓர் இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பற்றிய அற்புதப் படைப்பு அது.

மைக்கேல் ஜாக்ஸனின் பெரும்பாலான பாடல்கள் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவையே. பல பாடல்களை அவரே எழுதினார். அதில் மிகப் பிரபலமான பாட்டு “வி ஆர் தி வேர்ல்ட்”. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் இறந்த போது அவர்களுக்கான நிதி திரட்ட இசை ஆல்பத்தில் ஜாக்ஸன் அந்தப் பாட்டை இயற்றி சக இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். நிறவெறி, யுத்த வெறிக்கான எதிர்ப்பு, உலக அமைதிக்கான கோரிக்கைகள், கறுப்பின மக்களின் துயர்கள், காடுகளை அழிப்பதை எதிர்ப்பது, போன்றவை மட்டுமில்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புகள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது. உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் (சுமார் 39 நிறுவனங்கள்) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது.

“நான் என்றென்றும் இருப்பேன்’’ என்பது அவருடைய இன்னொரு பாடலின் பெயர். உண்மைதான். அவர் இசை என்றைக்கும் மரணமடையாது.

நன்றி: ஒரு புத்தகம் பேசுது