<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354</id><updated>2011-08-29T05:51:13.932-07:00</updated><category term='Kavithai'/><category term='நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்'/><title type='text'>வித்தியகங்கைக்கலாப்பிரியா</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>46</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-2947826051532583471</id><published>2011-06-18T07:16:00.000-07:00</published><updated>2011-06-18T07:17:43.848-07:00</updated><title type='text'>சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும்</title><content type='html'>மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.  இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான். &lt;br /&gt;&lt;br /&gt;உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு.  அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும். &lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்:  யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது. சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகத்தைக் காக்க: &lt;br /&gt;*  உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;*  புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;*  அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;*   எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;*   தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;*   வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;-உஸ்மான்-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-2947826051532583471?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/2947826051532583471/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=2947826051532583471' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/2947826051532583471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/2947826051532583471'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2011/06/blog-post_18.html' title='சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-6168560092454519950</id><published>2011-06-18T07:13:00.000-07:00</published><updated>2011-06-18T07:14:05.643-07:00</updated><title type='text'>வெங்காயம் சாப்பிடுங்கள்</title><content type='html'>சர்க்கரை நோயா பெரிய வெங்காயம் சாப்பிடுங்கள்!! &lt;br /&gt;இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அவுஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட சோதனை நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரை நோய் பாதிப்புகளை குறைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர கல்லீரல் பாதிக்கப்படாமலும் காக்கிறது. இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பெரிய வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ தினமும் சாப்பிடுவது மிகமிக நல்லது. பல்வேறு நோய்கள் வராமல் அது தடுக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-6168560092454519950?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/6168560092454519950/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=6168560092454519950' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/6168560092454519950'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/6168560092454519950'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2011/06/blog-post.html' title='வெங்காயம் சாப்பிடுங்கள்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-78504771194293799</id><published>2011-03-03T00:37:00.000-08:00</published><updated>2011-03-03T00:40:20.596-08:00</updated><title type='text'>சங்கடஹர சதுர்த்தி</title><content type='html'>சங்கடங்கள் நீக்கிடும் "சங்கடஹர சதுர்த்தி" விரதம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தையும், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். &lt;br /&gt; &lt;br /&gt;ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடைவது நிச்சயம். "ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். &lt;br /&gt; &lt;br /&gt;அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.  &lt;br /&gt; &lt;br /&gt;விரதத்தின் பலன்கள்::&lt;br /&gt; &lt;br /&gt;இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள்,பிரச்சினைகள் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு ஆளானவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய இந்த விரதம் மேற்கொண்டால் நலன் பெறலாம். &lt;br /&gt; &lt;br /&gt;மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், குழந்தைபேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும். &lt;br /&gt; &lt;br /&gt;விரதம் இருப்பது எப்படி? &lt;br /&gt; &lt;br /&gt;சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகர்  நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். &lt;br /&gt; &lt;br /&gt;சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய, "ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்" எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு. &lt;br /&gt; &lt;br /&gt;நன்றி - மாலைமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-78504771194293799?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/78504771194293799/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=78504771194293799' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/78504771194293799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/78504771194293799'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2011/03/blog-post.html' title='சங்கடஹர சதுர்த்தி'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-6555444472661141798</id><published>2010-12-01T12:03:00.000-08:00</published><updated>2010-12-01T12:07:11.703-08:00</updated><title type='text'>.நல்லதோர்  வீணை.- பாரதியார்</title><content type='html'>நல்லதோர்  வீணைசெய்தே - அதை&lt;br /&gt;     நலங்கெடப்  புழுதியில்  எறிவதுண்டோ&lt;br /&gt;சொல்லடி  சிவசக்தி - எனைச்&lt;br /&gt;     சுடர்மிகும்  அறிவுடன்  படைத்துவிட்டாய்&lt;br /&gt;வல்லமை  தாராயோ - இந்த&lt;br /&gt;     மாநிலம் பயனுற வாழ்வதற்கே?&lt;br /&gt;சொல்லடி  சிவசக்தி? - நிலச்&lt;br /&gt;     சுமையென வாழ்ந்திடப்  புரிகுவையோ?&lt;br /&gt;விசையுறு  பந்தினைப்போல் - உள்ளம்&lt;br /&gt;    வேண்டிய  படிசெலும்  உடல்கேட்டேன்&lt;br /&gt;நசையறு  மனங்கேட்டேன் -நித்தம்&lt;br /&gt;     நவமெனச்  சுடர்தரும்  உயிர்கேட்டேன்&lt;br /&gt;தசையினத்  தீசுடினும் - சிவ&lt;br /&gt;     சக்தியைப்  பாடும்நல்  அகங்கேட்டேன்&lt;br /&gt;அசைவறு  மதிகேட்டேன் - இவை&lt;br /&gt;     அருள்வதில்  உனக்கெதுந்  தடையுளதோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-6555444472661141798?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/6555444472661141798/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=6555444472661141798' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/6555444472661141798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/6555444472661141798'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2010/12/blog-post.html' title='.நல்லதோர்  வீணை.- பாரதியார்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-8566452532067896789</id><published>2010-06-02T06:55:00.000-07:00</published><updated>2010-06-02T06:58:35.217-07:00</updated><title type='text'>சீரழிக்கும் சீரியல்கள்</title><content type='html'>ஒரு பக்கம் ‘குஷ்புஇ சுஹாசினி பேச்சு தமிழ்ப் பெண்களின் கலாசாரத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டது. ஒருத்தனுக்கு ஒருத்திதான் இந்த மண்ணின் மாண்பு.&lt;br /&gt;&lt;br /&gt;உயிரே போனாலும் கற்பு தான் முக்கியம்’ என்று ஆவேசத் தலைவர்கள் ரோட்டுக்கு வந்து கொடும்பாவி கொளுத்துகிறார்கள். இன்னொருபுறம் ஓசைப்படாமல் நம் படுக்கையறைக்குள்ளேயே கலாச்சாரத்தை கொத்து பரோட்டா போடும் அநியாயத்தை வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவலம்!&lt;br /&gt;&lt;br /&gt;தரணி என்கிற பையன் காதலிப்பது பூஜாவை. கல்யாணம் செய்து கொள்வதோ கல்கியை. ‘வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே’ என்று கவுண்டமணி பாணியில் இன்னமும் தமிழ்நாட்டில் டி.வி. சீரியல்கள் அதிகம் பார்க்காத ஆத்மாவாக நீங்கள் அவசரப்பட்டால் ஸாரி. தரணியை பழி வாங்க பூஜா புறப்படுகிறாள். எப்படி? தரணியின் சொந்த சித்தப்பாவையே திருமணம் செய்து கொள்கிறாள். சரிஇ அத்தோடு இவர்கள் ‘புரட்சி’ முடிந்துவிட்டதா என்றால்இ அதுதான் இல்லை. தரணியிடம் பூஜா சொல்வது... ‘‘இப்பவும் எனக்கு குழந்தை பிறந்தால் அது உன் மூலமாகத்தான் பிறக்கணும்.’’ எப்படியிருக்கு ‘கல்கி’ தொடரின் மூல முடிச்சு?&lt;br /&gt;&lt;br /&gt;‘கணவருக்காக’ சீரியலில் இன்னும் விபரீதம்... இன்னும் அபத்தம்... உயிருக்கு உயிரான இரண்டு தோழிகள். நட்புக்காக செய்யும் எத்தனையோ வித தியாகங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்இ இங்கே ஒருத்தியின் கணவரை இன்னொருத்தி திருமணம் செய்து கொண்டு தோழிக்கே துரோகம் செய்ய நினைக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை. நம் டி.வி. சீரியல்களின் கதாசிரியர்கள் பேப்பரை எடுத்து இரண்டு என்ற போட்டு ஆரம்பிப்பது பிள்ளை சுழி என்று நீங்கள் நினைக்கலாம். அவர்களைப் பொறுத்தவரை அதற்கு அர்த்தம். இரண்டு பெண்டாட்டி சப்ஜெக்ட். எந்த சீரியலை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சந்தர்ப்பம்இ சூழ்நிலை என்று புருடா விட்டுஇ இரண்டு பெண்களை நாயகனுடன் சேர்த்துஇ கூடவே கொடுமைக்கார அத்தையையும் கொண்டு வந்துவிட்டால் வேலை முடிந்தது! ஒரு மகாமகத்திற்கு இழுக்கலாம்_ ஒரு கட்டத்தில் கதாசிரியருக்கே எங்கே ஆரம்பித்தோம் என்று மறந்துபோகும்வரை!&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி சீரியலில் அரசு என்கிற அரசியல்வாதி ஒரு பெண்ணைக் காதலித்துஇ ஏமாற்றி அவள் தற்கொலை செய்து கொண்டதும்இ வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறான். அந்தப் பெண் தன்னம்பிக்கை உள்ளவளாம். போராடுகிற குணமுள்ளவளாம். ‘நீ போடா டுபாக்கூர்’ என்று வேறொருவனுக்கு கழுத்தை நீட்டுகிறாள். அவளையும் விடாமல் தொடர்ந்து டார்ச்சர் தருகிறான் அரசு. அப்பவும் ஒரு நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். நடிகை அரசை சைக்கோதனமாக காதலிக்கஇ இவளை வச்சு பணம் சம்பாதிக்க முடியாது என்கிற ஆதங்கத்தில் அம்மாக்காரியோ இவர்களை பிரிக்க நினைக்கிறாள். ‘அரசு ஆம்பிளையே இல்லை’ என்று அவள் புது கரடிவிடஇ ‘என் முதல் மனைவிக்கு பிறந்தது என் குழந்தை’ என்று அரசு வரிந்து கட்டிக்கொண்டு வருகிறான். உடனே நடிகை தன் கணவர் அரசுவின் முதன் மனைவியின் லேட்டஸ்ட் புருஷனிடம் படையெடுத்து இது என் அரசுவுக்கு பிறந்தது. எனக்கே சொந்தம்’’ என்று கூச்சல்போட.. ஐயோ கடவுளே.. வெள்ளைக்காரன்கூட இவ்வளவு ‘முற்போக்காக’ சிந்திப்பானா என்று பிரிட்டிஷ் கதாசிரியர்களிடம் கேட்க வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;‘செல்வி’யில் இரண்டாவது கல்யாணத்திற்காகவே தாமரையை கோமாவில் தள்ளுகிறார்கள். தாமரையின் அப்பாவும்இ அம்மாவுமே செல்வியின் காலில் விழுந்து ‘நீதான் என் மாப்பிள்ளை ஜி.ஜே.வின் இரண்டாவது மனைவியாக வேண்டும்’ என்று கதறுகிறார்கள். செல்வி ஒப்புக்கொண்டு மாலை மாற்றிக்கொண்டு ஜி.ஜே.யின் கருவை சுமக்கஇ இப்போது... தாமரை கோமாவிலிருந்து வழித்தெழ வேண்டாமா? இரண்டு பெண்டாட்டிகள் தவிக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;அதே சீரியலில் பிரமாண்டமான முதுகுடன்இ வில்லத்தனம் செய்துகொண்டு பிரச்னைக்கு அலையும் ரஞ்சனி கேரக்டரை பாருங்கள். நல்ல புருஷனை உதாசீனம் செய்துவிட்டுஇ தவறான உறவில் தாய்மை அடைந்துவிட்டுஇ அதையும் மறைத்து கணவனோடு உறவாடுகிறாள். இன்னும் மோசம். மாயா கேரக்டர். தன் மனதுக்குப் பிடித்தவனை திருமணத்திற்கு முன்பு ஹோட்டல் ரூமிற்கு அழைக்கும் அளவுக்கு பாரதி காணாத புரட்சிப் பெண்ணாகச் சித்திரிக்கப்படுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘கோலங்கள்’ கதையும் என்ன வாழ்கிறது? ஏகப்பட்ட தவறான உறவுகள்... அபி அவளது தங்கைகள் மற்றும் தம்பியும் ஆதித்யாவின் அப்பாவிற்குப் பிறந்தவர்கள். அவர் அபியின் அம்மாவை முதல் தாரமாக மணந்துவிட்டுஇ பிறகு அவர்களை அம்போ என விட்டுவிட்டு மும்பைக்கு ஓடி ஆதித்யாவின் அம்மா கல்பனாவை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டவராம். ‘பாதை’ சீரியலில் மோகன் என்கிற பாத்திரம் வரிசையாக நான்கு பெண்களை ஏமாற்றுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இவர்களது ‘பண்பாட்டு’ கதைகளைச் சொல்லிக்கொண்டே போனால்இ ஒருநாள் போதாது. ஒரு குமுதம் போதாது. பெரும்பாலான டி.வி. சீரியல்களில் தாய்மை சிதைக்கப்படுகிறது. காதல் கொச்சைப்படுத்தப்படுகிறது. நட்பு கேவலப்படுத்தப்படுகிறது. இல்லற வாழ்க்கை அசிங்கப்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணை நார்மலாக காட்ட இவர்கள் அத்தனை பேரையும் அழைத்து சிறப்பு வகுப்பு எடுத்தால் நல்லதோ என்று தோன்றுகிறது. ஒன்று அவளை வீர வில்லியாக காட்டுகிறார்கள். அதாவது மாமியாரை கணவனைப் பழி வாங்கவேண்டும். அதற்கு அவள் யாரோடு வேண்டுமானாலும் படுக்கலாம். கூட்டு சேரலாம். கொலையும் செய்யலாம். அல்லது தீயாகச் சுடராக எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொண்டுஇ மூக்கைச் சிந்திக்கொண்டே ஒருநாள் உயிரை விடவேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;முறைகேடான உறவுகள் ஒருபுறமிருக்கஇ சினிமாவைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. வேடிக்கைஇ இவை எல்லாமே குடும்ப சீரியல்கள் _ மர்ம சீரியல்கள் அல்ல. பாம் வைப்பது எப்படி என்பதை ரொம்ப நுணுக்கமாக அறிவியல்பூர்வமாக காட்டுகிறார்கள். ‘ஆசிட் முட்டையால் அடித்துவிட்டார்கள்’ என்று கேள்விப்பட்டிருக்கிறோமே தவிரஇ ஆசிடை முட்டையில் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? _பிளேடு பக்கிரிகளைத் தவிர! செல்வியில் ரொம்ப நேர்த்தியாக அதைக் காட்டியதோடுஇ அதை எதில் மறைத்து எடுத்துவரவேண்டும் என்கிற அளவுக்கு தெளிவாகஇ தமிழ் பேசும் மக்களுக்குப் பாடம் எடுத்தார்கள். மனைவி சீரியலில் தன் கணவர் அரசுவை உடனே பார்க்க வேண்டும் என்கிற வெறியில்இ சைக்கோதனமான நடிகைஇ பாத்ரூமிற்கு சென்று பொறுமையாக பிளேடால் கையைக் கீறிக்கொள்கிறாள். நம் உடம்பு சிலிர்க்கிறது. ரத்தம் குபு குபுவென்று கொட்டஇ வாஷ்பேசின் முழுக்க ரத்தத் தண்ணீர்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தறிகெட்டு காட்டப்படும் வன்முறைக் காட்சிகளையும்இ முறைகேடான உறவுகளையும் பச்சையான வசனங்களையும் ஏதாவது ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த வேண்டாமா? இதற்கெல்லாம் சென்சார் என்று ஒன்று வேண்டாமா? இரண்டு பெண்டாட்டி கதைகளும் போரடிக்கும்பட்சத்தில் புதுமை என்கிற பெயரில் அடுத்த விபரீதம் என்ன நடக்கப் போகிறது? சமூக அக்கறையுள்ள எத்தனையோ பெற்றோர்கள் இப்படி நிறைய கேள்விகளுடன் கவலையோடு பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் ஆதங்கம் நியாயமானது. ‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்ற தைரியம் கொடுக்கும் சீரியல்கள் பலரதுஇ குறிப்பாக பெண்களது மனதை நிச்சயமாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சீரியல் பெண்களோடு வாழ ஆரம்பித்துவிட்டார்கள். கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றுஇ தன் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்ததாக அண்மையில் ஒரு செய்தி. ‘‘சீரியல்தான் எனக்கு அந்த துணிச்சலைக் கொடுத்தது’’ என்கிறார் படு காஷ§வலாக. நமது கலாசாரத்தில் ஊறிப்போன விருந்தோம்பலுக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் வேட்டு வைத்துவிட்டன. எத்தனையோ வருடங்களுக்குப்பிறகு வீட்டுக்கு வரும் விருந்தாளியும்இ சீரியல் நேரத்தில் வந்தால் அவர் வேண்டாத விருந்தாளியாக நெஞ்சு முழுக்க எரிச்சலுடன் வரவேற்கப்படுகிறார். அவ்வளவு ஏன்இ பல வீடுகளில் அலுவலகத்திலிருந்து தாமதமாக வரும் கணவன்இ மனைவியோடு மனம் விட்டு பேசிக்கொள்வதுகூட முடியாமல் போகிறது. பல தாய்மார்களுக்கு குழந்தைகள் படிப்பைக் கவனிப்பதுகூட இரண்டாம்பட்சமாகி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சீரியல் பிசாசுகளையும்இ அதனால் ஏற்பட்டுள்ள மதிமயக்கத்தைப் பற்றியும் சீரியஸாக ஆராய வேண்டிய நேரம் இது! இந்த விபரீதப் போக்கு சீக்கிரமாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:குமுதம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-8566452532067896789?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/8566452532067896789/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=8566452532067896789' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/8566452532067896789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/8566452532067896789'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2010/06/blog-post.html' title='சீரழிக்கும் சீரியல்கள்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-9052688831490401268</id><published>2010-04-02T07:28:00.000-07:00</published><updated>2010-04-02T07:33:46.458-07:00</updated><title type='text'>மடமும் சிறுவனும் - ஸென் கதை</title><content type='html'>&lt;a name="112083900973190462"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பழங்காலத்தில் சைனாவில் கிராமப்புறங்களிலும் சிறு நகரத்திலும் வாழந்தவர்கள் மிகவும் வறியவர்களாய் இருந்தனர். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உணவு, உடை, உறங்கும் இடம் கொடுத்து பாதுகாப்பதே மிகவும் கடினமான காரியமாக இருந்தது. சில இடங்களிலில் இருந்த ஸென் மடத்தில் வசித்த பிக்ஷுக்கள் தாங்களாகவே உணவு தரும் பயிர்களை பயிரிட்டு அவற்றை அறுவடை செய்து உணவிற்காகப் பயன்படுத்தினர். பருத்திகளை பறித்து நூல் தயாரித்து ஆடையாக அணிந்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் தாங்களாகவே கடும் முயற்சியுடன் தயாரித்து மற்றவர்களை நம்பி இல்லாமல் தன்னிறைவு பெற்று இருந்தனர். பிக்ஷுக்கள் தத்துவம் தவிர உடற்பயிற்சியிலும், தற்காப்புக் கலைகளிலும் சிறந்து விளங்கினர். நல்லொழுக்கம், நன்னடத்தை, நற்பண்பு கொண்டவர்களாக இந்த பிக்ஷுக்கள் இருந்தனர்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒரு கிராமத்தில் இருந்த ஏழைக் குடும்பத்தில் பல பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்தவர், அவர்களுக்கு தகுந்த உணவு கொடுக்க முடியாமல் மிகவும் அவதிப் பட்டார். அதனால் தன்னுடைய குழந்தைகளில் சிறுவனான ஒருவனைத் தேர்ந்தெடுத்து மடத்தில் சேர்த்து விடுவது என முடிவெடுத்தார். ஆனால் மடத்தில் வெகு சில சிறுவர்களையே உதவியாளனாக சேர்த்துக் கொள்வார்கள். தன்னுடைய பையனுடன் சென்ற தந்தை மடத்தின் தலைமைக் குருவைச் சந்தித்து, "நீங்கள் என்னுடைய பையனை உங்களுடைய உதவிக்காக மடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள், அதற்கு கைமாறாக என்னுடைய பையன் கடினமான வேலைகளை செய்வான், பிக்ஷுக்கள் அனைவரையும் மதித்து நடப்பான், அதனால் தயவுசெய்து அவனை உங்கள் மடத்தில் சேர்த்துக் கொண்டு அடைக்கலம் தரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். பல ஏழைக் குடும்பங்கள் இருந்ததால் அனைவரும் தங்களுடைய குழந்தையை மடத்தில் சேர்ப்பதற்கு விரும்புவார்கள். ஆனால் அனைவரையும் ஏற்றுக் கொண்டு மடத்தில் தங்க வைப்பதோ, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதோ சிரமமான காரியம் என்பதால், பல சிறுவர்களை ஏற்றுக் கொள்ள மடத்தில் மறுத்து விடுவார்கள். ஆனால் அதிர்ஷ்ட வசமாக இந்தச் சிறுவனை சேர்த்துக் கொள்ள தலைமைக் குரு அனுமதி கொடுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பிக்ஷுக்கள் பையனிடம் ஒரு மேலங்கியைக் கொடுத்தனர். பையன் தன்னுடைய தந்தையையும், கிராமத்தில் தன்னுடைய குடும்பத்தையும், நண்பர்களையும் விட்டு விட்டு மடத்தில் சேர்ந்தான். சிவந்த மேலங்கியைத் தவிர அவனுக்கென்று வேறு எந்தப் பொருளும் அங்கு இல்லை. ஒரு முதிய துறவி பையனிடம் வந்து, தண்ணீர் கொதிக்க வைக்கும் பெரிய அண்டாவினைக் காட்டி, "அங்கே இருக்கும் அண்டாவினை எடுத்துக் கொள், அதில் தண்ணீரை நிரப்பி அருகில் இருக்கும் பெரிய பாறையின் மேல் வை" என்று அவனுக்கு வேலையை கொடுத்து விட்டு சென்று விட்டார். பையனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது, எதற்காக தண்ணீரை நிரப்பி பாறையின் மீது வைக்கச் சொல்லுகிறார். வேலையை செய்ய மாட்டேன் என்று சொன்னால் என்ன செய்வார்கள். சுற்றி எங்கேயும் தண்ணீரை கொதிக்க வைக்கும் அடுப்பும் இல்லை. இத்தனை குழப்பமான சிந்தனைகளுக்கு இடையேயும் துறவி சொன்னது போல் செய்து முடித்தான்.கொஞ்சம் நேரத்தில் அந்தப் பக்கம் வந்த முதிய துறவி, தன்னுடைய கைகளால் தண்ணீரை வெட்டி வெளியே தெரிப்பது போல் செய்து காட்டி விட்டு, "நான் செய்தது போல் தண்ணீரை வெளியே உனது கைகளால் தெளி" என்று கூறிவிட்டு சென்று விட்டார். விநோதமான செயலாக சிறுவனுக்கு பட்டாலும் துறவி கூறியது போல் செய்து முடித்தான். பாறை முழுவதும் தண்ணீரில் நனைந்திருந்தது, அண்டா தண்ணீர் இல்லாத வெற்று அண்டாவாகியது, அவனுடைய கைகளோ தண்ணீரைத் தெளித்து தெளித்து விறைத்துப் போய் இருந்தது. கொஞ்சம் நேரம் சென்றிருக்கும் முதிய துறவி அவனிடம் வந்து, "அண்டாவினை முன்பு போல் நிரப்பு" என்று சொல்லி விட்டு சென்று விட்டார். ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீரை நிரப்புவதும், அதனை கைகளால் வெட்டி தெரிப்பதுமாக இருந்தான். இது போல் ஒரு மாதம் முடிந்தது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தன்னுடைய தந்தை மிகவும் தவறான முடிவெடுத்து விட்டார். இங்கு நான் எதையும் கற்கவும் இல்லை. ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்கிறேன். துறவிகளுக்கு பின்னால் அவர்களைப் பற்றி குறை சொல்லுவதும் நல்லதில்லை என்று எண்ணி மனம் வருந்தினான்.மூன்று மாதங்கள் சென்றிருக்கும், பையனுக்கு விருப்பம் இருந்தால் தன்னுடைய ஊருக்கு சென்று வரலாம் என்று அனுமதி கொடுக்கப் பட்டது. அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்காவது இந்த அண்டாவினையும், தண்ணீர் தெளிப்பதினையும் விட்டு விட்டு ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றான்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வீட்டிற்கு சென்றதும் எல்லாரும் அவனை கேள்விக் கணைகளால் துளைக்க ஆரம்பித்தனர். "உனக்குப் பிடித்திருந்ததா?, மிகவும் கடினமான வேலை கொடுத்தார்களா?, உன்னுடைய கைகளால் மரப் பலகைகளை உடைத்தாயா?, தியானம் பற்றி எதாவது சொன்னார்களா?". பதில் சொல்லுவதற்கு அவனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவன் செய்ததெல்லாம் அண்டாவினை நிரப்புவது, அதனைத் தெளித்து அண்டாவினை வெறுமையாக்குவது. வேறு ஒன்றும் செய்தானில்லை.ஒருவழியாக "இன்னும் நான் எதையும் கற்க வில்லை, இனிமேல் தான் ஆரம்பிப்பார்கள்" என்று கூறினான். ஆனால் அனைவரும், "கண்டிப்பாக எதாவது சொல்லிக் கொடுத்து இருப்பார்கள், அதில் ஒன்றினை எங்களுக்கு செய்து காட்டு" என்றார்கள்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சிறுவனுக்கோ வருத்தமாகவும், கோபமாகவும் இருந்தது. கொஞ்சம் எரிச்சலுடன், "நான் எதையும் கற்கவில்லை" என்று பதில் கூறிவிட்டு பக்கத்திலிருந்த அடுப்பங்கரைக்கு சென்று விட்டான்.கொஞ்சம் நேரம் சென்றிருக்கும் பையனின் உறவினர் ஒருவர் அவனிடம் சென்று, "நீ எல்லாரிடம் சொல்ல முடியாது, அதனால் என்னிடம் மட்டும் சொல்லு" என்று அவனை பதில் கூற வற்புறுத்தினார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அவ்வளவு தான் மிகவும் கோபம் அடைந்த சிறுவன் சத்தமாக "நான் எதையுமே கற்கவில்லை!" என்று கத்திவிட்டு, தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு குதித்து எழுந்தவன், எதிரே இருந்த மரத்தினால் செய்த பலகையில் (பெஞ்சில்) தன்னுடைய கைகளால் வேகமாக கோபத்துடன் ஒங்கி வேகமாக வெட்டினான். அந்த கனத்த மரப்பலகை கனப்பொழுதில் இரண்டாக பிளந்தது.அப்பொழுதுதான் பையனுக்கு தான் என்ன கற்றோம் என்பது புரிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-9052688831490401268?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/9052688831490401268/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=9052688831490401268' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/9052688831490401268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/9052688831490401268'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2010/04/blog-post.html' title='மடமும் சிறுவனும் - ஸென் கதை'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-1059120284335865058</id><published>2010-01-15T05:28:00.000-08:00</published><updated>2010-01-15T05:31:35.093-08:00</updated><title type='text'>திருவிளக்கு பூஜை எப்படிச் செய்வது?</title><content type='html'>வழிபாட்டின் விளக்கங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவிளக்கு வழிபாட்டில் 19 பகுதிகள் உள்ளன. அவற்றை விவரமாக பார்ப்போம்.&lt;br /&gt;1. திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு&lt;br /&gt;2. தேவையான பொருட்கள்&lt;br /&gt;3. பூஜைக்குத் தயாராகுதல்&lt;br /&gt;4. கணபதி வாழ்த்து&lt;br /&gt;5. தீபம் ஏற்றி ஆவாஹனம் செய்தல்&lt;br /&gt;6. தேவி வாழ்த்து&lt;br /&gt;7. திருவிளக்கு அகவல்&lt;br /&gt;8. திருவிளக்குப் பாடல்&lt;br /&gt;9. கலசபூஜை&lt;br /&gt;10. அர்ச்சனை செய்யும் முறை&lt;br /&gt;11. அர்ச்சனை 108&lt;br /&gt;12. போற்றுதல் முறை&lt;br /&gt;13. போற்றுதல் 108&lt;br /&gt;14. நிவேத்யம்&lt;br /&gt;15. பாட்டு&lt;br /&gt;16. தீபாராதனை&lt;br /&gt;17. வலம்வருதல்&lt;br /&gt;18. மங்களம்&lt;br /&gt;19. பிராரத்தஆனை&lt;br /&gt;1. திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு&lt;br /&gt;திருவிளக்கு வழிபாடு பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுகிறது. கன்னியரும் சுமங்கலிகளும் மாலைப்பொழுது திருவிளக்கேற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால் அஷ்டலட்சுமிகளும் அங்கே குடிகொண்டு எல்லா நன்மைகளும் அருள்வர். வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும். சஞ்சலமும் வறுமையும் நீங்கும். சக்தியும் வளமையும் நிறையும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் அணுகாது.&lt;br /&gt;ஊர்கள் தோறும் ஆலயங்களில் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் ஆன்மீக ஒருமைப்பாடும் அன்புணர்வும் வளரும். ஆலயத்தின் அருள் அலைகள் ஊரெங்கும் பரவும். அவ்வூரிலிருந்து தீயவை அனைத்தும் அகலும். அன்பும், அறனும், அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து எல்லா நலன்களும் பெறுவர்.&lt;br /&gt;2. தேவையான பொருடகள்&lt;br /&gt;திருவிளக்கு, வாழை இலை, வெற்றிலை, பாக்கு, நிவேதனப்பொருட்களான பழம், அவல், பொரி, கற்கண்டு முதலியன. திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரி பூ, ஊதுபத்தி, துளசி, கற்பூரம், ஊதுபத்தி வைக்கும் தட்டு, கற்பூரத்தட்டு, எண்ணெய் திரி, தீப்பெட்டி, ஒரு செம்பு தீர்த்தம் (கலசம்), அரிசி, மஞ்சள் முதலியன.&lt;br /&gt;3. பூஜைக்குத் தயாராகுதல்&lt;br /&gt;(i) திருவிளக்கை சுத்தம் செய்தல்&lt;br /&gt;திருவிளக்கைச் சுத்தமான உமியால் விளக்கி, தூயநீரால் திருமுழுக்காட்டி சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். திருவிளக்கைச் சுத்தம் செய்யும்போது தெய்வநாமங்களை மனதில் ஜெயித்துக்கொண்டே செய்யவேண்டும்.&lt;br /&gt;(ii) பீடம் அமைத்தல்&lt;br /&gt;திருவிளக்கை வைக்கவேண்டிய பீடத்தை அல்லது இடத்தை சாணத்தால் மெழுகி மாக்கோலம் இட்டு தூய்மையாக அமைக்கவேண்டும். திருவிளக்குகளை எல்லோரும் வலம்வர வசதியாக இடம் விட்டு ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும்.&lt;br /&gt;(iii) அலங்காரம் செய்தல்&lt;br /&gt;திருவிளக்கை அதற்கென அமைக்கப்பட்ட பீடத்தில் அல்லது இடத்தில் வைத்து தூயநீரில் திருநீற்றைக் குழைத்து முறையாகப் பூசி சந்தனத்தாலும் குங்குமத்தாலும் பொட்டுகள் இட்டு மலர்ச் சரங்களால் அலங்காரம் செய்ய வேண்டும் கலசத்துக்கும் சந்தனம், குங்குமத்தால் பொட்டுகள் இடவேண்டும்.&lt;br /&gt;(iv) பூஜைக்கு அமருதல்&lt;br /&gt;திருவிளக்கில் எண்ணெய்விட்டு, குறைந்தபட்சம் இரண்டு திரிகள் போடவேண்டும். திருவிளக்கருகில் வாழையிலை இட்டு அதில் நிவேதனப் பொருட்களைப் படைக்க வேண்டும். ஊது பத்திகளை அதற்குரிய தட்டில் வைக்க வேண்டும். நிவேதனம் செய்யும் பழத்தில் குத்தி வைக்கக்கூடாது. கற்பூரத் தட்டில் சிறிதளவு திருநீறு வைத்து அதன்மேல் கற்பூரம் வைத்து அருகில் வைக்க வேண்டும். கற்பூரத் தட்டு இல்லாதவர்கள் வெற்றிலை அல்லது வாழையிலையைப் பயன்படுத்தலாம். ஆனால் நிவேதனம் செய்யும் வெற்றிலையைப் பயன்படுத்தலாகாது.&lt;br /&gt;பூஜை செய்பவர் முதலில் திருவிளக்கிற்கு நமஸ்காரம் செய்து அமரவேண்டும். திருவிளக்கு வழிபாட்டினை நடத்துபவர் முதல் விளக்கருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;எல்லோரும் சொல்லுக : ஓம்.&lt;br /&gt;ஸர்வே பவந்து ஸ¥கின :&lt;br /&gt;ஸர்வே ஸந்து நிராமயா :&lt;br /&gt;ஸர்வே பத்ராணி பஸ்யந்து&lt;br /&gt;மா கச்சித் துக்கபாக் பவேத்&lt;br /&gt;4. கணபதி வாழ்த்து&lt;br /&gt; (i) ஐந்து கரத்தினை ஆனை முகத்தனை&lt;br /&gt;இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை&lt;br /&gt;நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை&lt;br /&gt;புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.&lt;br /&gt;(ii) கஜானனம் பூதகணாதி ஸேவிதம்&lt;br /&gt;கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ¢தம்&lt;br /&gt;உமாஸ¤தம் சோக விநாச காரணம்&lt;br /&gt;நமாமி, விக்னேஸ்வர பாதபங்கஜம்&lt;br /&gt;ஓம் ஸ¤முகாய நம:&lt;br /&gt;ஓம் கபிலாய நம:&lt;br /&gt;ஓம் லம்போதராய நம:&lt;br /&gt;ஓம் விக்ன ராஜாய நம:&lt;br /&gt;ஓம் தூம கேதவே நம:&lt;br /&gt;ஓம் பாலசந்த்ராய நம:&lt;br /&gt;ஓம் வக்ரதுண்டாய நம:&lt;br /&gt;ஓம் ஹேரம்பாய நம:&lt;br /&gt;ஓம் ஏகதந்தாய நம:&lt;br /&gt;ஓம் கஜகர்ணிகாய நம:&lt;br /&gt;ஓம் விகடாய நம:&lt;br /&gt;ஓம் கணாதிபாய நம:&lt;br /&gt;ஓம் கணாத்யஷாய நம:&lt;br /&gt;ஓம் கஜானனாய நம:&lt;br /&gt;ஓம் ஸ¥ர்ப்பகர்ணாய நம:&lt;br /&gt;ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:&lt;br /&gt;ஓம் ஸ்ரீ விக்னேஸ்வர ஷோடஸ நாமாவளி நானாவித மந்த்ர, பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி&lt;br /&gt;5. தீபம் ஏற்றி ஆவாஹனம் (எழுந்தருளல்) செய்தல்&lt;br /&gt;கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுக. அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றவேண்டும்.&lt;br /&gt;தீபம் ஏற்றும்போது&lt;br /&gt;''ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி''&lt;br /&gt;என்று சொல்ல வேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். பின் கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;''ஆதிபராசக்தி அம்பிகையே, நாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும் எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் தந்தருள்வாயாக''.&lt;br /&gt;6. தேவி வாழ்த்து&lt;br /&gt;ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே&lt;br /&gt;ஸர்வார்த்த சாதிகே&lt;br /&gt;சரண்யே த்ரயம்பகே கெளரி&lt;br /&gt;நாராயணி நமோஸ்துதே&lt;br /&gt;ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம்&lt;br /&gt;சக்திபூதே சனாதனி&lt;br /&gt;குணாச்ரயே குணமயே&lt;br /&gt;நாராயணி நமோஸ்துதே&lt;br /&gt;சரணாகத தீனார்த்த&lt;br /&gt;பரித்ராண பராயணே&lt;br /&gt;ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி&lt;br /&gt;நாராயணி நமோஸ்துதே&lt;br /&gt;7. திருவிளக்கு அகவல்&lt;br /&gt;விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே&lt;br /&gt;ஜோதி மணிவிளக்கே சீதேவிப் பொன்மணியே&lt;br /&gt;அந்தி விளக்கே அலங்கார நாயகியே&lt;br /&gt;காந்தி விளக்கே காமாக்ஷ¢ தாயாரே&lt;br /&gt;பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சுத் திரி போட்டு&lt;br /&gt;குளம்போல எண்ணெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்&lt;br /&gt;ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடிவிளங்க&lt;br /&gt;மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்&lt;br /&gt;மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா&lt;br /&gt;சந்தானப்பிச்சை தனங்களும் தாருமம்மா&lt;br /&gt;பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா&lt;br /&gt;பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா&lt;br /&gt;புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா&lt;br /&gt;அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா&lt;br /&gt;வந்த வினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா&lt;br /&gt;தாயாரே உன்றன் தாளடியில் சரணடைந்தேன்&lt;br /&gt;மாதாவே உன்றன் மலரடியில் நான்பணிந்தேன்.&lt;br /&gt;8. திருவிளக்குப் பாடல்&lt;br /&gt;(ரகுபதி ராகவ அல்லது நீலக்க்கடலின் ஓரத்தில் மெட்டு)&lt;br /&gt;மங்கலப் பொருளாம் விளக்கிதுவே&lt;br /&gt;மாதர் ஏற்றும் விளக்குதுவே&lt;br /&gt;பொங்கும் மனத்தால் நித்தமுமே&lt;br /&gt;போற்றி வணங்கும் விளக்கிதுவே&lt;br /&gt;இருளை நீக்கும் விளக்கிதுவே&lt;br /&gt;இன்பம் ஊட்டும் விளக்கிதுவே&lt;br /&gt;அருளைப் பெருக்கும் விளக்கிதுவே&lt;br /&gt;அன்பை வளர்க்கும் விளக்கிதுவே&lt;br /&gt;இல்லம் தன்னில் விளக்கினையே&lt;br /&gt;என்றும் ஏற்றித் தொழுதிடவே&lt;br /&gt;பல்வித நன்மை பெற்றிடலாம்&lt;br /&gt;பாரில் சிறந்தே வாழ்ந்திடலாம்&lt;br /&gt;விளக்கில் ஏற்றும் ஜோதியினால்&lt;br /&gt;விளங்காப் பொருளும் துலங்கிடுமே&lt;br /&gt;விளக்கில் விளங்கும் ஜோதிதனை&lt;br /&gt;விமலை என்றே உணர்ந்திடுவோம்.&lt;br /&gt;9. கலச பூஜை&lt;br /&gt;கலசத்திலுள்ள தண்ணீரில் அட்சதை (அரிசி, மஞ்சள்) இட்டு உள்ளங்கையால் கலசத்தை மூடிக்கொண்டு, இம்மந்திரம் ஜெபிக்க வேண்டும்.&lt;br /&gt; ''கங்கே ச யமுனே சைவ&lt;br /&gt;கோதாவரி ஸரஸ்வதி&lt;br /&gt;நர்மதே ஸிந்து காவேரி&lt;br /&gt;ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு''&lt;br /&gt;பின் தீர்த்தத்தை ஆசமனம் பண்ண வேண்டும். (சிறிதளவு உள்ளங்கையில் விட்டுப் பருக வேண்டும். பின் சிறிது நீர்விட்டு கையைச் சுத்தம் செய்ய வேண்டும்.) அதன்பின் ஒரு மலரைத் தீர்த்தத்தில் நனைத்து, புஷ்பங்களிலும் நைவேத்தியத்திலும் நீரைத் தெளிக்க வேண்டும்.&lt;br /&gt;பின் கீழ்வருமாறு சொல்லுக :&lt;br /&gt;ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை - அண்டமெல்லாம்&lt;br /&gt;பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை - புவியடங்கக்&lt;br /&gt;காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் - கரும்பு வில்லும்&lt;br /&gt;சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே&lt;br /&gt;10. அர்ச்சனை செய்யும் முறை&lt;br /&gt;ஆள்காட்டிவிரல் தவிர இதர விரல்களால் குங்குமத்தையும் மலர்களையும் எடுத்து, இடது கை நெஞ்சோடு சேர்த்து வைத்து, விளக்கின் அடிப்பாகத்தை அம்பிகையின் பாதார விந்தங்களாக பாவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் குங்குமத்தால் 54 அர்ச்சனைகளும் பின் கன்யாகுமரியை நம: என்று தொடங்கி 54 அர்ச்சனைகள் மலர்களாலும் அவ்விதம் மொத்தம் 108 அர்ச்சனைகள் செய்ய வேண்டும்.&lt;br /&gt;- தொடரும்&lt;br /&gt;- நன்றி: சுவாமி மதுரானந்தர், வெள்ளிமலை ஆஸ்ரமம், கன்னியாகுமரி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-1059120284335865058?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/1059120284335865058/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=1059120284335865058' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/1059120284335865058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/1059120284335865058'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2010/01/blog-post_15.html' title='திருவிளக்கு பூஜை எப்படிச் செய்வது?'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-3548348257797580993</id><published>2010-01-11T08:06:00.000-08:00</published><updated>2010-01-11T08:12:32.031-08:00</updated><title type='text'>ஜென் கதைகள்</title><content type='html'>மாணவன் ஒருவன் சண்டைக் கலையை கற்றுக் கொள்வதற்காக ஜென் குரு ஒருவரிடம் சென்றான். குருவே, யுத்தக் கலையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் மற்றொரு பாணியைக் கற்றுக்கொள்ள வேறொரு குருவிடமும் சேரலாம் என்று நினைக்கிறேன். இது குறித்து உங்கள் ஆலோசனையும் அனுமதியும் தேவை என்றான்.            "இரு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரனால் ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது'' என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தார் குரு.&lt;br /&gt;&lt;br /&gt;           போர்வீரன் ஒருவன் ஜென் குருவை அணுகிக் கேட்டான். "ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?'' அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்டார் குரு-            "நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப்பட்ட பிச்சைக்காரனாக இருப்பான்?''            போர்வீரன் கடுங்கோபத்துடன் வாளை உறையில் இருந்து உருவத் துவங்கினான்.            ஓஹோ. வாளை வைத்திருக்கிறாயோ? அதற்கு என் தலையை சீவும் வல்லமை இருக்கிறதா என்று கேட்டார் குரு. அவன் ஏறத்தாழ அவர் தலையை சீவத் தயார் ஆனான். அவன் கையைப் பிடித்து நிறுத்தி குரு சொன்னார்             "இப்போது நரகத்தின் கதவுகள் திறக்கின்றன''            அவன் ஒருவாறு சமாளித்து தலைகுனிந்து வெட்கி அவரை வணங்கி நின்றான். குரு சொன்னார்-            "இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன&lt;br /&gt;&lt;br /&gt;           ஒரு ஜென் குருவின் சீடன் மற்றொரு குருவின் சீடனை வழியில் சந்தித்தான். ஒரு சீடன் மற்றவனிடம் சொன்னான். எங்கள் குரு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார். 'சொல்லப்போனால் அவர் நிகழ்த்திக் காட்டாத அற்புதங்களே இல்லை என்று சொல்லலாம். உன்னுடய குரு என்ன அற்புதம் நிகழ்த்துவார்?' என்று கேட்டான்.            இன்னொரு சீடன் சொன்னான் ஞுஎங்கள் குரு நிகழ்த்தும் மாபெரும் அற்புதம் என்னவென்றால் யாதொரு அற்புதத்தையும் நிகழ்த்தாது இருப்பதுதான்'.&lt;br /&gt;&lt;br /&gt; வியாஸன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-3548348257797580993?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/3548348257797580993/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=3548348257797580993' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/3548348257797580993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/3548348257797580993'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2010/01/blog-post.html' title='ஜென் கதைகள்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-3602545085765258518</id><published>2009-12-30T06:35:00.000-08:00</published><updated>2009-12-30T06:40:51.724-08:00</updated><title type='text'>புத்தாண்டு வாழ்த்துக்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Bt6Eu8RPWSE/SztmSEiVBzI/AAAAAAAAAE0/sthQzMjtReU/s1600-h/images.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5421039037111928626" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 124px; CURSOR: hand; HEIGHT: 92px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_Bt6Eu8RPWSE/SztmSEiVBzI/AAAAAAAAAE0/sthQzMjtReU/s320/images.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-3602545085765258518?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/3602545085765258518/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=3602545085765258518' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/3602545085765258518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/3602545085765258518'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2009/12/blog-post.html' title='புத்தாண்டு வாழ்த்துக்கள்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Bt6Eu8RPWSE/SztmSEiVBzI/AAAAAAAAAE0/sthQzMjtReU/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-5035257565254982282</id><published>2009-11-26T10:04:00.000-08:00</published><updated>2009-11-26T10:06:18.437-08:00</updated><title type='text'>சுயமுன்னேற்றம்</title><content type='html'>ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பது பற்றி அலெக்டுமெக்கன்சி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். காலத்தைச் சரிவரப் பயன்படுத்தாமைக்கு அவர் கூறும் காரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;யார் வந்தாலும் பார்க்கலாம் என்ற “திறந்த கதவு” கொள்கையினால் நேரம் பறிபோய்விடுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒத்திப்போடும் மனோ பாவம், சோம்பல். &lt;br /&gt;எடுத்த காரியங்களின் விளைவுகள் பற்றிய செய்திகள் நமக்குச் சரியாக வந்து சேருவதில்லை; காலம் விரயமாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ புத்தகம் பேப்பர் கிடைத்தது என்று எல்லா குப்பைகளையும் படிக்கிறோம். படிப்பதை ஒரு பொழுது போக்காய்க் கொள்கிறோம். நேரம் போய்விடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வேலை செய்து கொண்டிருக்கும் போது அடிக்கடி பிறர் உள்ளே நுழைகிறார்கள். வேலை தடைபடுகிறது. &lt;br /&gt;போனில் வளவளவென்று ‘அக்கப்போர்’ பேசுகிறோம். டெலிபோன் ஒரு செய்தியை தெரிவிப்பதற்குத்தான் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;குப்பை விஷயங்கள் எல்லாம் உம் மேஜைக்கு வருகின்றன. எல்லாவற்றையும் படித்து தொலைக்கிறீர்கள். &lt;br /&gt;எந்தக் கடிதத்தை எங்கு வைத்தோம்? அதை எப்படி உடனே எடுப்பது? என்பதில் ஒரு வழிமுறை இல்லாமல் திண்டாடுகிறீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;போதுமான குமாஸ்தாக்கள் இல்லை எல்லாம் நீங்களே செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் பொன்னான நேரம் போயிற்று. &lt;br /&gt;பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்கிறீர்கள். ஒன்றிலும் கவனமில்லாமல் ஒன்றும் சரிவரச் செய்யப்படாமல் போய்விடுகிறது. &lt;br /&gt;சும்மா ‘சலசல’ வென்று பேசுகிறீர்கள். பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எதையும் மறுத்துப்பேச முடியாது உங்களால். எதையும் இல்லை என்றோ தவறு என்றோ கூறமுடியாது உங்களால். எனவே எல்லாவற்றிற்கும் இசைந்து கொடுக்கிறீர்கள். எது நன்மை என்று தெரிந்திருந்தும் அதில் கண்டிப்பாக இல்லாதததால் நீங்கள் நினைப்பது நடப்பதில்லை. காலம் வீணாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-5035257565254982282?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/5035257565254982282/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=5035257565254982282' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/5035257565254982282'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/5035257565254982282'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2009/11/blog-post.html' title='சுயமுன்னேற்றம்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-2231148431487974643</id><published>2009-10-05T07:52:00.000-07:00</published><updated>2009-10-05T07:53:32.834-07:00</updated><title type='text'>எண்ணங்கள் - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி</title><content type='html'>"எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;&lt;br /&gt;ஏனெனில் எண்ணங்கள்தாம் சொற்களாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லில் கவனமாய் இருங்கள்;&lt;br /&gt;ஏனெனில் சொற்கள்தாம் செயல்களாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;செயலில் கவனமாய் இருங்கள்;&lt;br /&gt;ஏனெனில் செயல்கள்தாம் பழக்கங்களாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;&lt;br /&gt;ஏனெனில் பழக்கங்கள்தாம் ஒழுக்கங்களாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;&lt;br /&gt;ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-2231148431487974643?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/2231148431487974643/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=2231148431487974643' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/2231148431487974643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/2231148431487974643'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2009/10/blog-post.html' title='எண்ணங்கள் - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-5045639454145560340</id><published>2009-09-15T06:58:00.000-07:00</published><updated>2009-09-15T07:08:29.379-07:00</updated><title type='text'>மைக்கேல் ஜாக்ஸன் :கிருஷ்ணா டாவின்ஸி</title><content type='html'>அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து சுமாராக ஹாலோ கிடார் வாசிக்கத் தெரிந்த இருவர், (ஒருவர் ‘லீட்’ மற்றொருவர் ‘ரிதம்’ என்று பந்தா விடுவோம் ), ஒரு டபுள் பேஸ் வாசிப்பவன், சாதாரண காஸியோ கீபோர்ட் வாசிப்பவன் மற்றும் இரண்டு உள்ளூர் பாடகர்களை வைத்துக் கொண்டு நாங்கள் அடித்த அமெசுர் இசைக்குழு லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது இரண்டு விஷயங்கள்தான் பேசுவதற்கு விருப்பமானதாக இருந்தன. ஒன்று கிரிக்கெட், இரண்டாவது இசை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே இந்தியத் திரை இசையில் அப்போது ஒரு தேக்கம் நிலவியது. இந்திப் பாடல்கள் எல்லாம் அலுத்து விட்டன. தமிழ்ப்பாடல்களிலும் ஒருமுகத்தன்மை வந்திருந்தது. அப்போதுதான் நாங்கள் மெதுவாக மேற்கத்திய இசையிடம் தாவினோம். அதற்கு முக்கியமான காரணம் மைக்கேல் ஜாக்ஸனின் “திரில்லர்’’ இசை ஆல்பம். போனி எம், அபா, டிஸ்கோ ஜூரம் எல்லாம் ஓய்ந்து போயிருந்த நேரத்தில் ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ( மெலிதான சோக இசை) மற்றும் ‘soul’ இசையில் பிளந்து கட்டிய ஜாக்ஸனின் அதிரடி இசை கேட்டு நாங்கள் ஆடிப்போயிருந்தோம். காஸட் நாடா அறுந்து போகும் வரை தொடர்ந்து சோறு தண்ணியில்லாமல் ‘திரில்லர்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt; திரில்லர் ஆல்பத்துக்காக ஏகப்பட்ட கிராமி அவார்டுகளை அள்ளி, உலகெங்கும் நாற்பது மில்லியன் காஸெட்டுகளுக்கு மேல் விற்ற மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் பைத்தியமாகி, அவரின் ஏனைய பாடல்களெல்லாம் எங்கே சல்லிசாகக் கிடைக்கும் என்று எங்கள் இளைஞர் அணிப் பட்டாளமே சென்னையை அலசியது. கடைசியில் பாரிஸ் கார்னர், பர்மா பஜாரின் கடைசி பகுதியில் ஒளிந்திருந்த இதயத்துல்லா என்பவரின் காஸட் கடையைக் கண்டுபிடித்தோம். மிகச் சிறிய கடைதான், ஆனால் அங்கே பல பொக்கிஷங்களை காஸட் வடிவத்தில் அடுக்கியிருந்தார். வெறும் ஒரு காஸட் கடைக்காரராக மட்டுமே அல்லாமல் மேற்கத்திய இசை மற்றும் உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த மிகப்பெரும் கலாரசிகராகவும் அவர் இருந்தார். மைக்கேல் ஜாக்ஸனின் சிறு வயது ஆல்பமான “ஆப் தி வால்’’ ஐக் கொடுத்து “இதைப் பாடும் போது அவருக்கு 11 வயசு’’ என்றது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆல்பத்தைக் கேட்டபோது இத்தனை சின்னச் சிறுவன் இவ்வளவு அற்புதமாகப் பாடுவானா என்று மலைப்பாகவும் இருந்தது. “ப்ராடிஜி’’ ( இளம் மேதை ) என்கிற சொல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;மைக்கேல் ஜாக்ஸன் ஓர் ஆரம்பம்தான். அதற்குப் பிறகு இதயத்துல்லாவின் கடையில் ( இப்போது அது இல்லை ) டினா டர்னர், தி போலீஸ், டேவிட் போவி, டுரான் டுரான், லயனல் ரிச்சி, பில்லி ஓஷன், ப்ரூஸ் ஹார்ன்ஸ்பி, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயின், சிம்ப்ளி ரெட், எரித்மிக்ஸ், டிரேஸி சாப்மென், டான் சீல்ஸ் என்று ஏகப்பட்ட அற்புத இசைக்கலைஞர்களையும் குழுக்களையும் கண்டுபிடித்தோம். மேற்கத்திய இசையில் இருந்த பாப், ரகே, ரிதம் அண்ட் ப்ளூஸ், ஜாஸ், ராக், ராப், ஆப்ரிக்கா, லாட்டினோ, சாப்ட் ராக், ஹெவி மெட்டல், கண்ட்ரி போன்ற ஏகப்பட்ட இசை வகைகள் எங்களை ஒரு போதை உலகத்துக்கே அழைத்துச் சென்றன. ‘ஸ்டிங்’ போன்ற இசைக்கலைஞர்கள் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருந்த அரபி சுபி இசையும் மலைக்க வைத்தது. அடடா இப்படி ஒரு பிருமாண்டமான இசை உலகம் இருக்கிறதா என்று பிரமிப்பாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் ஓர் ஆரம்பமாக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவருடைய இசை இழுத்த இழுப்புக்குத்தான் நாங்கள் ஓடினோம். முதலில் திரில்லர் ஆல்பத்தில் இருந்த “பீட் இட்’’ “பில்லி ஜீன்’’ “வான பி ஸ்டார்ட்டிங் சம்திங்’’ மற்றும் “திரில்லர்’’ இந்த நான்கு பாட்டுக்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல்கள் எல்லாமே அதிரடி இசையாலும் அசர வைக்கும் வீடியோக்களாலும் பிரபலமானவை. அதுநாள் வரை சட்டை செய்யாமலே இருந்த திரில்லர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை மெதுவாகக் கேட்டபோதுதான், அடடா எத்தனை பெரிய இசைப் புதையலை இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாகியது. “pretty young thing” , “lady in my life” “humen nature”, “the girl is mine” போன்ற அந்தப் பாடல்களில் இருந்த மென்மையும் பாவமும் உயிரையே உருக்கியது. மைக்கேல் ஜாக்ஸன் வெறும் அதிரடிப் பாடகர் மட்டும் அல்ல அவர் ஒரு மெலடி கிங்கும்தான் என்பது தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மைக்கேல் ஜாக்ஸன் வார்த்தைகளே கொஞ்சமும் புரியாதபடி பாடுவதில் பெரிய கில்லாடி.&lt;br /&gt;&lt;br /&gt;“anne, are you ok?” என்கிற வார்த்தையை அவர் எப்படிப் பாடுவார் என்பதை “smooth criminal” பாடலில் கேட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். வார்த்தைகளை வளைத்து, இழுத்து, பிசைந்து ஒரு வழி ஆக்கி விடுவார். பல பாடல்களின் அர்த்தம் புரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஒரு நண்பனின் வீட்டில் மைக்கேல் ஜாக்ஸனின் பல பாடல்களின் கவிதைவரிகளின் தொகுப்பு திடீரென்று கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டு (பெரும்பாலான பாடல்களை எழுதியது அவர்தான்) அந்தப் பாடல்களைக் கேட்ட போது ஏற்பட்ட பரவசநிலை சொல்லில் விளங்காதது. பாடல் வரிகளைத் தன் குரல் என்னும் முரட்டுக் குதிரையில் ஏற்றி அவர் பாடும் முறை யாராலும் காப்பி அடிக்க முடியாத ஒன்று. ஸ்பீல்பர்க் சொன்னார். “பாப் இசையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் மைக்கேல் ஜாக்ஸனும் இருக்கிறார்”. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. “பாப் இசையில் எத்தனையோ குரல்கள் இருக்கின்றன. மைக்கேல் ஜாக்ஸனின் குரலும் இருக்கின்றது.”&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை ஒரு புத்தகமாக “மூன்வாக்கர்’’ என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஜாக்ஸன். ஓர் இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பற்றிய அற்புதப் படைப்பு அது.&lt;br /&gt;&lt;br /&gt;மைக்கேல் ஜாக்ஸனின் பெரும்பாலான பாடல்கள் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவையே. பல பாடல்களை அவரே எழுதினார். அதில் மிகப் பிரபலமான பாட்டு “வி ஆர் தி வேர்ல்ட்”. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் இறந்த போது அவர்களுக்கான நிதி திரட்ட இசை ஆல்பத்தில் ஜாக்ஸன் அந்தப் பாட்டை இயற்றி சக இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். நிறவெறி, யுத்த வெறிக்கான எதிர்ப்பு, உலக அமைதிக்கான கோரிக்கைகள், கறுப்பின மக்களின் துயர்கள், காடுகளை அழிப்பதை எதிர்ப்பது, போன்றவை மட்டுமில்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புகள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது. உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் (சுமார் 39 நிறுவனங்கள்) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் என்றென்றும் இருப்பேன்’’ என்பது அவருடைய இன்னொரு பாடலின் பெயர். உண்மைதான். அவர் இசை என்றைக்கும் மரணமடையாது. அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து சுமாராக ஹாலோ கிடார் வாசிக்கத் தெரிந்த இருவர், (ஒருவர் ‘லீட்’ மற்றொருவர் ‘ரிதம்’ என்று பந்தா விடுவோம் ), ஒரு டபுள் பேஸ் வாசிப்பவன், சாதாரண காஸியோ கீபோர்ட் வாசிப்பவன் மற்றும் இரண்டு உள்ளூர் பாடகர்களை வைத்துக் கொண்டு நாங்கள் அடித்த அமெசுர் இசைக்குழு லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது இரண்டு விஷயங்கள்தான் பேசுவதற்கு விருப்பமானதாக இருந்தன. ஒன்று கிரிக்கெட், இரண்டாவது இசை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே இந்தியத் திரை இசையில் அப்போது ஒரு தேக்கம் நிலவியது. இந்திப் பாடல்கள் எல்லாம் அலுத்து விட்டன. தமிழ்ப்பாடல்களிலும் ஒருமுகத்தன்மை வந்திருந்தது. அப்போதுதான் நாங்கள் மெதுவாக மேற்கத்திய இசையிடம் தாவினோம். அதற்கு முக்கியமான காரணம் மைக்கேல் ஜாக்ஸனின் “திரில்லர்’’ இசை ஆல்பம். போனி எம், அபா, டிஸ்கோ ஜூரம் எல்லாம் ஓய்ந்து போயிருந்த நேரத்தில் ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ( மெலிதான சோக இசை) மற்றும் ‘soul’ இசையில் பிளந்து கட்டிய ஜாக்ஸனின் அதிரடி இசை கேட்டு நாங்கள் ஆடிப்போயிருந்தோம். காஸட் நாடா அறுந்து போகும் வரை தொடர்ந்து சோறு தண்ணியில்லாமல் ‘திரில்லர்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரில்லர் ஆல்பத்துக்காக ஏகப்பட்ட கிராமி அவார்டுகளை அள்ளி, உலகெங்கும் நாற்பது மில்லியன் காஸெட்டுகளுக்கு மேல் விற்ற மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் பைத்தியமாகி, அவரின் ஏனைய பாடல்களெல்லாம் எங்கே சல்லிசாகக் கிடைக்கும் என்று எங்கள் இளைஞர் அணிப் பட்டாளமே சென்னையை அலசியது. கடைசியில் பாரிஸ் கார்னர், பர்மா பஜாரின் கடைசி பகுதியில் ஒளிந்திருந்த இதயத்துல்லா என்பவரின் காஸட் கடையைக் கண்டுபிடித்தோம். மிகச் சிறிய கடைதான், ஆனால் அங்கே பல பொக்கிஷங்களை காஸட் வடிவத்தில் அடுக்கியிருந்தார். வெறும் ஒரு காஸட் கடைக்காரராக மட்டுமே அல்லாமல் மேற்கத்திய இசை மற்றும் உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த மிகப்பெரும் கலாரசிகராகவும் அவர் இருந்தார். மைக்கேல் ஜாக்ஸனின் சிறு வயது ஆல்பமான “ஆப் தி வால்’’ ஐக் கொடுத்து “இதைப் பாடும் போது அவருக்கு 11 வயசு’’ என்றது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆல்பத்தைக் கேட்டபோது இத்தனை சின்னச் சிறுவன் இவ்வளவு அற்புதமாகப் பாடுவானா என்று மலைப்பாகவும் இருந்தது. “ப்ராடிஜி’’ ( இளம் மேதை ) என்கிற சொல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;மைக்கேல் ஜாக்ஸன் ஓர் ஆரம்பம்தான். அதற்குப் பிறகு இதயத்துல்லாவின் கடையில் ( இப்போது அது இல்லை ) டினா டர்னர், தி போலீஸ், டேவிட் போவி, டுரான் டுரான், லயனல் ரிச்சி, பில்லி ஓஷன், ப்ரூஸ் ஹார்ன்ஸ்பி, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயின், சிம்ப்ளி ரெட், எரித்மிக்ஸ், டிரேஸி சாப்மென், டான் சீல்ஸ் என்று ஏகப்பட்ட அற்புத இசைக்கலைஞர்களையும் குழுக்களையும் கண்டுபிடித்தோம். மேற்கத்திய இசையில் இருந்த பாப், ரகே, ரிதம் அண்ட் ப்ளூஸ், ஜாஸ், ராக், ராப், ஆப்ரிக்கா, லாட்டினோ, சாப்ட் ராக், ஹெவி மெட்டல், கண்ட்ரி போன்ற ஏகப்பட்ட இசை வகைகள் எங்களை ஒரு போதை உலகத்துக்கே அழைத்துச் சென்றன. ‘ஸ்டிங்’ போன்ற இசைக்கலைஞர்கள் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருந்த அரபி சுபி இசையும் மலைக்க வைத்தது. அடடா இப்படி ஒரு பிருமாண்டமான இசை உலகம் இருக்கிறதா என்று பிரமிப்பாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் ஓர் ஆரம்பமாக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவருடைய இசை இழுத்த இழுப்புக்குத்தான் நாங்கள் ஓடினோம். முதலில் திரில்லர் ஆல்பத்தில் இருந்த “பீட் இட்’’ “பில்லி ஜீன்’’ “வான பி ஸ்டார்ட்டிங் சம்திங்’’ மற்றும் “திரில்லர்’’ இந்த நான்கு பாட்டுக்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல்கள் எல்லாமே அதிரடி இசையாலும் அசர வைக்கும் வீடியோக்களாலும் பிரபலமானவை. அதுநாள் வரை சட்டை செய்யாமலே இருந்த திரில்லர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை மெதுவாகக் கேட்டபோதுதான், அடடா எத்தனை பெரிய இசைப் புதையலை இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாகியது. “pretty young thing” , “lady in my life” “humen nature”, “the girl is mine” போன்ற அந்தப் பாடல்களில் இருந்த மென்மையும் பாவமும் உயிரையே உருக்கியது. மைக்கேல் ஜாக்ஸன் வெறும் அதிரடிப் பாடகர் மட்டும் அல்ல அவர் ஒரு மெலடி கிங்கும்தான் என்பது தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மைக்கேல் ஜாக்ஸன் வார்த்தைகளே கொஞ்சமும் புரியாதபடி பாடுவதில் பெரிய கில்லாடி.&lt;br /&gt;&lt;br /&gt;“anne, are you ok?” என்கிற வார்த்தையை அவர் எப்படிப் பாடுவார் என்பதை “smooth criminal” பாடலில் கேட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். வார்த்தைகளை வளைத்து, இழுத்து, பிசைந்து ஒரு வழி ஆக்கி விடுவார். பல பாடல்களின் அர்த்தம் புரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஒரு நண்பனின் வீட்டில் மைக்கேல் ஜாக்ஸனின் பல பாடல்களின் கவிதைவரிகளின் தொகுப்பு திடீரென்று கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டு (பெரும்பாலான பாடல்களை எழுதியது அவர்தான்) அந்தப் பாடல்களைக் கேட்ட போது ஏற்பட்ட பரவசநிலை சொல்லில் விளங்காதது. பாடல் வரிகளைத் தன் குரல் என்னும் முரட்டுக் குதிரையில் ஏற்றி அவர் பாடும் முறை யாராலும் காப்பி அடிக்க முடியாத ஒன்று. ஸ்பீல்பர்க் சொன்னார். “பாப் இசையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் மைக்கேல் ஜாக்ஸனும் இருக்கிறார்”. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. “பாப் இசையில் எத்தனையோ குரல்கள் இருக்கின்றன. மைக்கேல் ஜாக்ஸனின் குரலும் இருக்கின்றது.”&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை ஒரு புத்தகமாக “மூன்வாக்கர்’’ என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஜாக்ஸன். ஓர் இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பற்றிய அற்புதப் படைப்பு அது.&lt;br /&gt;&lt;br /&gt;மைக்கேல் ஜாக்ஸனின் பெரும்பாலான பாடல்கள் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவையே. பல பாடல்களை அவரே எழுதினார். அதில் மிகப் பிரபலமான பாட்டு “வி ஆர் தி வேர்ல்ட்”. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் இறந்த போது அவர்களுக்கான நிதி திரட்ட இசை ஆல்பத்தில் ஜாக்ஸன் அந்தப் பாட்டை இயற்றி சக இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். நிறவெறி, யுத்த வெறிக்கான எதிர்ப்பு, உலக அமைதிக்கான கோரிக்கைகள், கறுப்பின மக்களின் துயர்கள், காடுகளை அழிப்பதை எதிர்ப்பது, போன்றவை மட்டுமில்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புகள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது. உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் (சுமார் 39 நிறுவனங்கள்) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் என்றென்றும் இருப்பேன்’’ என்பது அவருடைய இன்னொரு பாடலின் பெயர். உண்மைதான். அவர் இசை என்றைக்கும் மரணமடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:  ஒரு புத்தகம் பேசுது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-5045639454145560340?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/5045639454145560340/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=5045639454145560340' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/5045639454145560340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/5045639454145560340'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2009/09/blog-post.html' title='மைக்கேல் ஜாக்ஸன் :கிருஷ்ணா டாவின்ஸி'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-329860884430505714</id><published>2009-07-28T07:40:00.000-07:00</published><updated>2009-07-28T07:42:59.071-07:00</updated><title type='text'>அவளுக்கும் தமிழென்று பேர் - கண்ணதாசன்</title><content type='html'>அவளுக்கும் தமிழென்று பேர்&lt;br /&gt;என்றும் அவளெந்தன் உள்ளத்தில்&lt;br /&gt;அசைகின்ற தேர்&lt;br /&gt;அசைகின்ற தேர்&lt;br /&gt;அவளுக்கும் தமிழென்று பேர்&lt;br /&gt;என்றும் அவளெந்தன் உள்ளத்தில்&lt;br /&gt;அசைகின்ற தேர்&lt;br /&gt;அசைகின்ற தேர்&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு நிலவென்று பேர்&lt;br /&gt;வண்ண மலர் கொஞ்சும் குழலங்கம் முகிலுக்கு நேர்&lt;br /&gt;அவளுக்கு குயிலென்று பேர்&lt;br /&gt;அந்த  குயில் கொண்ட குரல் கொண்டு கொண்டாடும் ஊர்&lt;br /&gt;அவளுக்கு அன்பென்று பேர்&lt;br /&gt;அவளுக்கு அன்பென்று பேர்&lt;br /&gt;அந்த அன்பென்ற பொருள் நல்ல பெண்மைக்கு வேர்&lt;br /&gt;பெண்மைக்கு வேர்&lt;br /&gt;அவளுக்கும் தமிழென்று பேர்&lt;br /&gt;என்றும் அவளெந்தன் உள்ளத்தில்&lt;br /&gt;அசைகின்ற தேர்&lt;br /&gt;அசைகின்ற தேர்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் எந்தன் அறிவுக்கு நூல்&lt;br /&gt;அவள் மொழிகின்ற வார்த்தைகள் கவிதைக்கு மேல்&lt;br /&gt;கவிதைக்கு மேல்&lt;br /&gt;அவளுக்கு அழகென்று பேர்&lt;br /&gt;அந்த அழகெந்தன் உள்ளத்தை உழுகின்ற ஏர்&lt;br /&gt;உழுகின்ற ஏர்&lt;br /&gt;அவளுக்கும் தமிழென்று பேர்&lt;br /&gt;என்றும் அவளெந்தன் உள்ளத்தில்&lt;br /&gt;அசைகின்ற தேர்&lt;br /&gt;அசைகின்ற தேர்&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு உயிர் என்று பேர்&lt;br /&gt;என்றும் அவள் எந்தன் வாழ்வெனும் வயலுக்கு நீர்&lt;br /&gt;வயலுக்குநீர்&lt;br /&gt;அவள் எந்தன் நினைவுக்குத் தேன்&lt;br /&gt;இந்த மனம் என்னும் கடலுக்கு கரை கண்ட வான்&lt;br /&gt;அவள் எந்தன் நினைவுக்குத் தேன்&lt;br /&gt;இந்த மனம் என்னும் கடலுக்கு கரை கண்ட வான்&lt;br /&gt;அவளுக்கும் தமிழென்று பேர்&lt;br /&gt;என்றும் அவளெந்தன் உள்ளத்தில்&lt;br /&gt;அசைகின்ற தேர்&lt;br /&gt;அசைகின்ற தேர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-329860884430505714?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/329860884430505714/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=329860884430505714' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/329860884430505714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/329860884430505714'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2009/07/blog-post_28.html' title='அவளுக்கும் தமிழென்று பேர் - கண்ணதாசன்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-2696646028128345421</id><published>2009-07-24T02:37:00.000-07:00</published><updated>2009-07-24T02:43:14.635-07:00</updated><title type='text'>சனிமூலை - ராகவன் தம்பி</title><content type='html'>நண்பர் ஒருவரிடம் இறைநம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது தான் கடவுள் நம்பிக்கையற்றுப் போனது குறித்து சில சமயம் வருத்தப் படுவதாகவும் பிரச்னைகள் தன்னை அழுத்தும்போது ஏதாவது கடவுளை நம்பி இருந்தால் தேவலையாக இருந்திருக்குமே என்கிற எண்ணம் தனக்குள் எப்போதாவது எட்டிப் பார்ப்பதையும் தான் உணர்வதாகச் சொல்வார். தன்னை ஒரிடத்தில் தனியாக நிறுத்தி வைத்து விட்டு சற்று எட்டி நின்று தன்னையே பார்த்து எதையும் அவதானிக்கும் அந்தப் போக்கு எனக்கு எப்போதும் பிடிக்கும். அது ஒரு சித்தரின் மனப்பாங்கு. இது எனக்கெல்லாம் இந்த ஜென்மத்தில் வாய்க்காது.&lt;br /&gt;&lt;br /&gt;            பொதுவாக சொல்வார்கள். ஒரு மனிதன் நாத்திகனாக மாறவும் சடங்குகளில் நம்பிக்கையற்றுப் போகவும் இங்கர்சால், பகத்சிங், தந்தை பெரியார், போன்றோரின் நூல்களைப் படிக்கத் தேவை இல்லை.   ஹரித்வார், கயா, காசி போன்ற புனிதத் தலங்களுக்கு ஒருமுறைசென்று வந்தால் போதும். அதே போல மற்ற மதங்களிலும் அந்தந்த மதங்கள் உயர்வாகப் போற்றும்   முக்கியமான ஸ்தலங்களுக்கு ஒருமுறை போய்வந்தால் போதும். தானாகவே இறைநம்பிக்கை சற்று தடுமாற்றம் காணும். சடங்குகள் மீதான நம்பிக்கை வலுவாக ஆட்டம் காணும்.&lt;br /&gt;&lt;br /&gt;            இப்படிக் கடவுள் நம்பிக்கை மற்றும் சடங்குகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் மனதில் நிழலாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;            கிருஷ்ணகிரியில் அப்பா இறந்து போனார். பதின்மூன்று நாட்கள் காரியங்கள் நடந்தன. இறப்பு தொடர்பான மாத்வ பிராமணர்களின் சடங்குகள் மிகவும் கடுமையானவை. குளிரும் மழைச் சாரலும் நடுக்கித் துன்புறுத்தும் டிசம்பர் மாதத்தில் வெட்ட வெளியில் வயற்காட்டில் பத்து நாட்கள், ஒரு நாளைக்குக் குறைந்தது பத்துமுறை கிணற்று நீரில் முங்கிக் குளித்து ஈரத் துணி உடுத்திக் கொண்டு கடும் பட்டினியுடன் மாலை நான்கு மணி வரை தொடர்ந்த சடங்குகள்.   இப்படிப் பதின்மூன்று நாட்கள் காரியங்கள் முடித்து இரண்டாம் நாள் பால் ஊற்றும் போது ஒரு கலசத்தில் சேகரித்த அப்பாவின் அஸ்தியில் கொஞ்சம் தனியாக வைத்து இருந்ததை ஆச்சார் (புரோகிதர்) என்னிடம் கொடுத்தார். அஸ்திக்கு வேண்டிய மந்திரங்கள் சடங்குகளை செய்து முடித்து விட்டதாகவும் தில்லிக்கு அந்தக் கலசத்தை எடுத்துச்சென்று யமுனையிலும் கங்கையிலும் கரைக்க வேண்டும் என்றும் சொன்னார். அப்படிக் கரைக்கும் போதும் புரோகிதர் யாரும் தேவையில்லை என்றும் வெறுமனே எடுத்துச்சென்று ஆற்றில் கரைத்து விட்டு குளித்து விட்டு முடிந்தால் பிராமணர்கள் யாருக்காவது அன்னதானம் செய்து விட்டு வருமாறும் கூறியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;            ஊரில் காரியங்கள் முடித்து தில்லி திரும்பி வந்ததும் முதலில் யமுனையில் அஸ்தியைக் கரைப்பதற்குக் கிளம்பினேன். இங்கே சாக்கடை கலக்காத யமுனையைக் கண்டுபிடிப்பது என்பது மிகமிகக் கஷ்டமான காரியம். ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு பல இடங்களில் அலைந்து திரிந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுப்புறச் சூழல் அத்தனை கெட்டுப் போகத் துவங்காத தில்லியில்   இந்த கதி என்றால் யமுனை இப்போது எப்படி இருக்கும் என்று சற்று கற்பனை செய்து பார்க்கலாம். எங்கெங்கோ தேடித் தடவி அலைந்து திரிந்து ஒரிடத்தை நானும் யதார்த்தா நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த குணசேகரனும் தேடிக் கண்டுபிடித்தோம். அது தில்லி நகரிலிருந்து பலகிலோமீட்டர்கள் தள்ளியிருந்த ஒரு சிறு கிராமம். அங்கு ஓடும் யமுனையும் ஊருக்குள் ஓடும் யமுனையை விடப் பெரிய அளவில் ஒன்றும் சுத்தமாக இல்லை. எல்லா ஓடைப் பிரிவுகளிலும் சாக்கடை கலக்காமல் ஓரிரண்டு பிரிவுகளில் சற்றுத் தெளிவான நீர் பாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரேயடியாக சுத்தமான நீர் என்றும் சொல்ல முடியாது. அஸ்தியைக் கரைக்கலாம் என்னும் அளவில் தெளிவு. ஆனால் குளிக்கும் அளவுக்கு சுத்தமாக இல்லை. எனவே ஏகப்பட்ட ஆராய்ச்சி, பயணம் மற்றும் தேடல்களுக்குப் பிறகு கிட்டிய அந்த யமுனைத் தண்ணீரில் ஒரு பகுதி அஸ்தியைக் கரைத்து விட்டு பெயருக்குத் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து குளித்தேன். யமுனை முடிந்தது. இப்போது இன்னும் ஒரு கலசத்தில் இருக்கும்   அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;            மிச்சமிருந்த அஸ்தியைக் கரைக்க ஹரித்வார் தனியாகப் பயணப்பட்டேன். ஹரித்வார் அடைந்ததும் பேருந்து நிலையத்திலேயே ஒரு சைக்கிள் ரிக்க்ஷா பிடித்தேன். அஸ்தியைக் கரைக்க வைத்து குளிக்க வைத்து மீண்டும் பேருந்து நிலையத்தில் விடுவதற்கு இருபது ரூபாய் என்றான். ஒப்புக்கொண்டு ஏறி உட்கார்ந்தேன். ஹரித்வார் அநியாயத்துக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஊர்.   ரிக்க்ஷா ஓட்டி என்னை உட்கார வைத்து அநேக தூரம் ரிக்க்ஷாவை நெட்டித் தள்ளிக் கொண்டே வந்தான். அப்படி உட்கார்ந்து வருவதற்கு மிகவும் கூச்சமாக இருந்தது.   சுமார் இருபது நிமிட நெட்டித் தள்ளலுக்குப் பிறகு கங்கை ஆற்றின் ஒரு கரையில் நின்றது ரிக்க்ஷா. &lt;br /&gt;&lt;br /&gt;            ரிக்க்ஷாவில் இருந்து நான் இறங்குவதற்கு முன்பே குறைந்தது ஒரு நூறு பண்டாக்களாவது ஏறக்குறைய என்னைத் தாக்குவது போன்ற பாவனையில் சூழ்ந்து கொண்டார்கள். அஸ்திக்கலசம் வைத்திருந்த கிருஷ்ணகிரி ராணி சில்க் ஹவுஸ் மஞ்சள் துணிப்பையை ஆளுக்கொரு பக்கம் வலுவாக இழுக்கத் துவங்கினார்கள்.    'யாரும் எனக்குத் தேவையில்லை' என்று உரக்க நான் போட்ட கூச்சலைக் கேட்க யாருக்கும் பொறுமை இல்லை. என்னை ஆக்ரோஷமான போட்டியின் ஒரு பொருளாக மாற்றி ஆளுக்கு ஆள் தங்கள் வலிமையைக் காட்டிக் கொள்ள யுத்தம் செய்வதைப் போன்ற ஒரு இரைச்சலில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டார்கள். நான் சளைக்காமல்   அந்த மஞ்சள் பையை வலுவாக இழுத்து என்னிடம் வைத்துக் கொண்டு ஆற்றை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன். மஞ்சள் பையை என்னிடம் பறி கொடுத்த பண்டாக்கள் வேறு வகையான தாக்குதலில் இறங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;            "அந்த ஆத்மா நேரா நரகத்துக்குத்தான் போகும்.''&lt;br /&gt;            "அநாதையா போகப்போகுது''&lt;br /&gt;            "வாரிசு இல்லாத ஆத்மாவா''&lt;br /&gt;            இப்படி காதுக்கு வெகு அருகாமையிலேயே கூச்சல் போட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். தாங்க முடியவில்லை. இனி வேறு வழியில்லை. யாருக்காவது எதாவது கொடுத்தால்தான் அடுத்து நகர விடுவார்கள் என்கிற நிலையும் உருவானது. இருப்பவர்களில் சற்று பலசாலியாகத் தோற்றமளித்த ஒருவனைத் தேர்ந்தெடுத்தேன். அந்தப் பண்டா சற்று அருகாமையில் நெருங்கிப்பேசிய போது மட்டமான சாராயத்தின் வாடையும் பீடிப்புகையின் சருகு வாடையும் லேசாக அடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;            அவனிடம் சொன்னேன்-&lt;br /&gt;            உனக்குக் கொஞ்சம் பணம் கொடுக்கிறேன். மற்ற எல்லோரையும் நிறுத்து. "எவ்வளவு வேண்டும் என்று சொல்.''&lt;br /&gt;            "ஆயிரம் ரூபாய் கொடு''&lt;br /&gt;            "ஆயிரம் ரூபாய்க்கு உனக்கு ஒரு வேலையும் கிடையாது. எல்லா மந்திரங்களும் சொல்லி இந்த அஸ்திக்கான சடங்குகளை ஊரிலேயே முடித்து விட்டோம். எனக்கு அஸ்தியை வெறுமனே கரைக்க வேண்டும்.   என்னைத் துரத்தி வரும் மற்றவர்களை நீ நிறுத்தினால் போதும். சும்மா கரையில் வந்து உட்கார்ந்து கொள். அதுபோதும். நூறு ரூபாய் வாங்கிக் கொள்'' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;            சிறு தயக்கத்துக்குப் பிறகு சரி என்றவன் கூட்டத்தில் மற்றவர்களைப் பார்த்துக் கத்தினான்- "விலை படிந்து விட்டது. நீங்கள் போகலாம்.''&lt;br /&gt;&lt;br /&gt;            அடுத்த நொடியில் அந்தக் கூட்டம் சுத்தமாகக் கரைந்து போனது. அத்தனை கூட்டமும் எங்கே போனது என்று தெரியவில்லை. கரையில் அந்தப் பண்டாவும் நானும் தனித்து விடப்பட்டோம். கரையில் ஒருவன் இலைத் தொன்னையில் துலுக்க சாமந்திப் பூக்கள் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு தொன்னை பூ வாங்கச் சொன்னான் பண்டா. அவனிடம் நான் மீண்டும் உறுதிப் படுத்திக் கொண்டேன். "நீ மந்திரங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லை.''&lt;br /&gt;&lt;br /&gt;            நீ கொடுக்கும் வெறும் நூறு ரூபாய்க்கு நான் எதற்கு மந்திரங்கள் சொல்ல வேண்டும்?' என்று நிஷ்டூரியத்துடன் பதில் சொல்லிக் கரையில் அமர்ந்தான் பண்டா. துண்டு சுற்றிக்கொண்டு கங்கையில் கால் நனைத்தேன். கங்கை நீரின் முதல் ஸ்பரிசத்தில் ஒரு ஆயிரம் தேள்களின் கொட்டுக்கள். வலியக் காலைப் பின்னிழுத்து மீண்டும் தயக்கத்துடன் பின்னர் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் கால் நனைத்து நின்றேன். அஸ்திக் கலசத்தைக் கையில் எடுத்து கரையில் வாங்கிய பூக்களுடன் சேர்த்துக் கரைக்க ஆயத்தமானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;            பண்டாவின் அவசரக் குரல் என்னை நிறுத்தியது. ஒரு நிமிஷம். நான் வேதப் பிராமணன். ஓரிரண்டு மந்திரங்களாவது சொல்லாமல் உன்கிட்டே காசு வாங்கினால் அது அதர்மமான காரியம். கலசத்தைக் கையிலே வைத்து சூரியனைப் பார்த்து நின்னு நான் சொல்ற ஒரு சின்ன மந்திரத்தை சொல்லு போதும் என்றான் அந்தப் பண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;            மந்திரம் எல்லாம் வேண்டாம்னு முன்னாடியே நான் சொல்லிட்டேன். பேசிய காசைத் தந்து விடுவேன். &lt;br /&gt;            "அப்படி வெறுமனே காசு வாங்க மாட்டேன். நான் சொல்ற மந்திரத்தை திரும்பச் சொல்லு போதும்'' கொஞ்சம் தயங்கி விட்டு 'சொல்லு' என்றேன்.&lt;br /&gt;            "ஹே கங்கா மாதா''&lt;br /&gt;            "ஹே கங்கா மாதா''&lt;br /&gt;            யாருடையது என்று கேட்டான். அப்பாவின் அஸ்தி என்று சொன்னேன். அப்பா பெயர் மற்றும் கோத்திரம் கேட்டான். சமஸ்கிருதம் அல்லாத   உள்ளூர் இந்தியில் மந்திரத்தைத் தொடர்ந்தான். "விஸ்வாமித்ர கோத்திரத்தை சேர்ந்த என் தகப்பனார் கிருஷ்ண ராவ் சர்மாவின் அஸ்தியை உன்னுடைய பாத கமலங்களில் சேர்ப்பிக்கிறேன்.''&lt;br /&gt;            நான் திருப்பிச் சொன்னேன்.&lt;br /&gt;            "நான் இந்த நாளில் பிராமணர்களுக்கு ஸ்வர்ணதானம் செய்வேன்.''&lt;br /&gt;            நான் பிரேக் போட்டேன் - "நஹி''&lt;br /&gt;            'பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வேன்'&lt;br /&gt;            "பில்குல் நஹி''&lt;br /&gt;            "சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லு''&lt;br /&gt;            "சொல்ல மாட்டேன்''&lt;br /&gt;            பரவாயில்லை. பிராமணர்களுக்கு போஜனத்துக்கு ஐந்நூறு ரூபாய்தான் ஆகும்.&lt;br /&gt;            "இல்லை. மாட்டேன்''&lt;br /&gt;            அடிச்சி கங்கையிலே தூக்கி எறிவேன்.&lt;br /&gt;            கண்பார்வை படும் தூரத்தில் ரிக்க்ஷாக்காரன் சாய்ந்து உட்கார்ந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;            "தைரியம் இருந்தா கிட்டே வந்து பாரு. உன்னையும் இழுத்துக் கொண்டுதான் இந்த கங்கையிலே உயிர் விடுவேன்.''&lt;br /&gt;            "நீ அப்பா மேலே பாசம் இல்லாத பாவி. அந்த ஆளு நரகத்துக்குத்தான் போவான்.''&lt;br /&gt;            "அதைப்பத்தி நீ கவலைப்படாதே.''&lt;br /&gt;&lt;br /&gt;            ஒரு மாதிரி கைநடுக்கத்துடன் சற்று ஒதுங்கி நின்று பீடி புகைக்கத் துவங்கினான் அந்தப் பண்டா. அந்த நேரத்தைப் பயன்படுத்தி கங்கை பிரவாகத்தில் அஸ்தியைக் கரைத்துவிட்டு மூன்று முழுங்குப் போட்டுக் கரையேறினேன். அவன் முணுமுணுப்பான குரலில் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். துணி மாற்றிக் கொள்ளும்போது என்னருகில் வந்தான் பண்டா. நூறு ரூபாய் பத்தாது. முன்னூறாவது வேணும் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;            குடுக்கறதை வாங்கி இடத்தைக் காலி பண்ணு என்று சொல்லிக் கொண்டே பண்டா கையில் நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு ரிக்ஷாவில் ஏறினேன். அவன் ஆக்ரோஷத்துடன் என் சட்டையைப் பிடித்தான். நான் வலுவுடன் உதறிக் கொள்வதற்கு முன்பு ரிக்ஷாக்காரன் சடாரென்று இறங்கி வந்து அந்தப் பண்டாவைப் பிடித்து அவன் முகத்தில் மிகவும் வலுவாக ஓங்கிக் குத்தினான். அதை எதிர்பார்க்காத பண்டா ஆடிப்போனான். அதிர்ச்சியில் உறைந்த அவன் ஒரு நொடி சமாளித்துக் கொண்டு ரிக்ஷாக்காரனைப் பார்த்து ஆவேசத்துடன் கத்தினான்&lt;br /&gt;            "மாதர்சோத்''&lt;br /&gt;            ரிக்க்ஷாக்காரன் அவனை மீண்டும் ஆக்ரோஷத்துடன் இடுப்புக்குக் கீழே ஓங்கி எட்டி உதைத்தான். பண்டா வலியில் நெளிந்து கொண்டே தரையில் புரண்டான். அவன் முகத்தில் அதீதமான பீதி தெரிந்தது. ரிக்க்ஷாக்காரன் ஒன்றும் நடக்காதது போல என்னை ஏறி உட்காரச் சொல்லி விட்டு நெட்டித் தள்ளிச் செல்ல ஆரம்பித்தான். ரிக்க்ஷாவில் உட்கார்ந்து கொண்டு சற்று பயத்துடன் பண்டாவைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சுதாரித்து எழுந்து உட்கார்ந்து கொண்டு சிரமத்துடன் பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொள்ள ஆரம்பித்தான். ஒரு திருப்பத்தில் கண் பார்வையில் இருந்து மறைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;            காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததால் அசுரப்பசி எடுத்தது. பேருந்து நிலையத்துக்கு வந்ததும் ரிக்க்ஷாக்காரனை ஏதாவது சத்த சைவ உணவு விடுதிக்குப் போகச் சொன்னேன். காலையில் இருந்து என்னுடன் இருக்கிறான். அவனையும் என்னோடு சேர்ந்து சாப்பிடச் சொன்னேன். மிகவும் தயங்கினான். ஒன்றும் பிரச்னையில்லை. வந்து சாப்பிடு. சவாரிக்கான பணத்தைத் தனியாகக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன். அழுக்கான துண்டினால் முகத்தையும் கைகளையும் துடைத்துக்கொண்டு என் எதிரே உட்கார்ந்து கொண்டான். ரொம்ப நேரமாக அவனுடன் ரிக்க்ஷாவில் சவாரியாக உட்கார்ந்தும் அவன் பெயர் கேட்காதது ஞாபகம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;            "முஹமது அனீஸ்'' என்றான்.&lt;br /&gt;            வீட்டில் இருப்பவர்களுக்கும் சாப்பாடு வாங்கிக்கொள்வாயா என்று கேட்டேன்.&lt;br /&gt;            நீண்ட தயக்கத்துக்குப் பிறகு ஒப்புக் கொண்டான். வீட்டில் ஏழு பேர்கள் என்றான். ஓட்டல் காரரிடம் அவனுக்கு வேண்டிய அளவு ரொட்டி மற்றும் சப்ஜியைக் கட்டிக்கொடுக்கச் சொல்லிப் பணம் கொடுத்து விட்டு அவனுக்கும் சவாரிக்குப் பணம் கொடுத்து விட்டு பேருந்து நிலையத்துக்கு பஸ் பிடிக்க விரைந்தேன்.&lt;br /&gt;            இரவு தில்லி சேர்ந்ததும் ஊரில் இருக்கும் அண்ணாவை தொலைபேசியில் கூப்பிட்டு சொன்னேன்.&lt;br /&gt;            "அப்பாவோட அஸ்தியை கங்கையில் கரைச்சுட்டேன்.''&lt;br /&gt;            அக்கா குறுக்கிட்டுக் கேட்டாள் பிராமண போஜனம் ஏதாவது ஏற்பாடு பண்ணியா?&lt;br /&gt;            'ஆமாம். ஏழு பேர் சாப்பிட்டு இருப்பாங்க'.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி வடக்குவாசல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-2696646028128345421?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/2696646028128345421/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=2696646028128345421' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/2696646028128345421'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/2696646028128345421'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2009/07/blog-post.html' title='சனிமூலை - ராகவன் தம்பி'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-8831333815657773309</id><published>2009-05-12T04:02:00.000-07:00</published><updated>2009-05-12T04:03:31.856-07:00</updated><title type='text'>நான் படித்துச் சுவைத்தவை</title><content type='html'>யாருமற்ற தனிமையில் கடற்கரையில் நின்றிருக்கிறீர்களா...மனசு ஏதோ ஒரு பாடல் பாட, உள்ளுக்குள் உற்சாகம் ஊறத் துவங்க, இயற்கையின் மடியில் நாமே ஒரு குழந்தையாகிப் போவோம்! &lt;br /&gt;&lt;br /&gt;புதிய புதிய இடங்களுக்குப் பயணப்படும் போதெல்லாம் வழிகளில் தென்படும் நதிகள், வயல்வெளிகள், மலைச்சரிவுகள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என பார்ப்பதெல்லாமே மனசுக்கு அத்தனை சந்தோஷம் தரும். ஒரு நல்ல பயணம் நம்மைப் புதுப்பித்துத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு வேலை-வீடு என ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே முடிந்துபோகிறது வாழ்க்கை. சென்னையில் இருந்து கொண்டே கடற்கரை பார்க்காதவர்கள் எத்தனை பேர் உண்டு தெரியுமா! அடுத்த தெருவிலிருக்கிற பூங்காவுக்குள் போய் அரை மணி நேரம் செலவழிக்க முடியாதவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தை முழுக்கப் பார்க்காமலேயே உலக வாழ்க்கை வெறுத்துவிட்டது என்று அலுத்துக்கொள்கிறோம். நாம் எத்தனை தூரம் பயணம் போகிறோமோ அந்த அளவுக்கு நம் பார்வையும் ஞானமும் விரியும். எந்த அளவுக்குப் புதிய புதிய நாகரிகங்களையும் புதிய புதிய கலாசாரங்களையும் தெரிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம் அறிவும் புரிந்துகொள்ளும் தன்மையும் மேம்படும். நம் ஞானிகளும் முனிவர்களும் இந்தப் பரந்த பாரததேசத்தைத் தாண்டியும் யாத்திரைகள் மேற்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;உலகின் பல்வேறு பகுதிகளுக்கு நானும் பயணித்திருக்கிறேன். அப்படிச் சில அனுபவங்களை இப்போது பேசலாமா.! &lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன்பு வாழ்வியல் பயிலரங்கம் நடத்துவதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். எதிர்பாராதவிதமாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பாடாகியிருந்த ஒரு நிகழ்ச்சி ரத்தாகிவிட்டது. 'சரி, டிஸ்னி லேண்ட் போய்வரலாமே?‘என்று என் மாணவர்கள் என்னை அழைத்துப்போனார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே ஒரு ரோலர்கோஸ்டரில் நான் பயணம் செய்த அனுபவம் பரவசமாக இருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த ஸீட்டில் பிடிமானமோ, ஸீட் பெல்ட்டோ இல்லை. கொஞ்சம் உஷாராகவே உட்கார வேண்டிய கட்டாயம். ரோலர்கோஸ்டர் ஒரு குலுக்கலுடன் புறப்பட்டு, நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கை சர்ர்ரென்று வானத்தில் ஏறியது. சரசரவென்று திருப்பங்களில் வளைந்து ஓடி, தடாலென்று சறுக்கிக் கொண்டு அதலபாதாளத்தில் கீழே சரிந்தது. சிறுகுடல் பெருங்குடலைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வாய்க்கே வந்துவிடும் போலிருந்தது அந்த அனுபவம். இருந்தாலும் ரோலர்கோஸ்டர் பயணத்தை ரசித்தேன். திடுக் திடுக்கென வரும் திருப்பங்களை ஆனந்தமாக அனுபவித்தேன். என் மாணவர்களும் இந்த த்ரில் பயணத்தில் ரொம்பவே லயித்துப்போனார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;லயிப்புக்கு என்ன காரணம்? பயம்! &lt;br /&gt;&lt;br /&gt;பயணம் முடிந்து கீழே இறங்கியதுமே அத்தனை பேர் முகத்திலும் அப்படியரு சிரிப்பு. அவரவர் பயத்தைப் பற்றி அவர் களே ஜோக்கடித்துக்கொண்டார்கள். நிஜம்தானே. எதிர்பாராத திடீர்த் திருப்பங்கள், தலைகீழ் மாற்றங்கள் இவை எல்லாமே சந்தோஷம் கொடுக்க வல்லவைதானே. பிறகு ஏன் வாழ்க்கையில் எதிர்பாராதது நடந்தால் ரோலர்கோஸ்டர் போல சிலிர்த்து மகிழாமல் நொறுங்கிப் போகிறோம்? &lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண ஒரு டிரான்ஸ்ஃபர் வந்தால் கூட, ''என் மேலதிகாரி என்னைப் பழி வாங்கிவிட்டார்‘' என்று ஏன் அடுத்தவர்களைத் திட்டுகிறோம். வீட்டில் நமது தப்பை அப்பா சுட்டிக்காட்டினால், ''அக்கா கொரங்கு போட்டுக்கொடுத்துட்டா'' என்று ஏன் புலம்புகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ரோலர் கோஸ்டர் பயணம் எப்படி ஒரு த்ரில்லான அனுபவமோ... ஜாலியான, சந்தோஷமான அனுபவமோ அது மாதிரிதான் வாழ்க்கை யும்! ரோலர்கோஸ்டர் மாதிரியே வாழ்க்கையில் வரும் உயர்வுதாழ்வுகளையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் போதும். &lt;br /&gt;&lt;br /&gt;என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா. &lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்? &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வேட்டைக்குப் போகும் யாரும் "இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை" என்று புலம்பியதுண்டா? &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: சுவாமி சுகபோதானந்தா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-8831333815657773309?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/8831333815657773309/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=8831333815657773309' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/8831333815657773309'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/8831333815657773309'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2009/05/blog-post.html' title='நான் படித்துச் சுவைத்தவை'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-4706498988704952331</id><published>2009-03-10T09:21:00.001-07:00</published><updated>2009-03-29T06:08:36.746-07:00</updated><title type='text'>﻿ ﻿ குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு</title><content type='html'>தமழக மக்களது சமூக அறிவுத் தரத்தை குமுதம் பத்திரிகை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது இந்தப் பணியினை தமிழ் சேனல்கள் செய்து வருகிறது என்றாலும் இவையும் குமுதத்தின் பாணியினையே பின்பற்றி செயல்படுகின்றன. அரசியலோ, &lt;br /&gt;&lt;br /&gt;சமூக அக்கறையோ எதுவாக இருந்தாலும் ஒரு மலிவான கிசு கிசு ஆர்வம் போல மாற்றித தரும் குமுதம் மக்களின் நேர்மறை மதிப்பீடுகளை அழிக்கும் ஒரு வைரஸ். அதைப் பற்றி ஆய்வு செய்யும் வெளியான புதிய கலாச்சாரக் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறோம். இந்தக் கட்டுரை வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது,  வாசகர்கள்  எண்ணிக்கை, விலை, பக்கங்கள், விற்பனை விவரம்….. முதலியன இன்று மாரியிருக்கிறது, ஆனால் குமுதம் வழங்கும் சிட்டுக்குருவி லேகியத்தில் எந்த மாற்றமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !&lt;br /&gt;&lt;br /&gt;“குமுதம் பத்திரிகை குறைவான விலையில் அதிகமான பக்கங்களை வெளியிடும்போது, உங்க பத்திரிகை குறைவான பக்கங்களை சற்று அதிக விலையில் விற்பது சரியா?” என்ற கேள்வியை புதிய கலாச்சாரம் பேருந்து விற்பனையின் போது தோழர்கள் அவ்வப்போது சந்திக்க நேரிடும். குமுதத்தின் மலிவு விலை இரகசியம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே குண்டுப் பத்திரிகையான குமுதம் தற்போது பெருங்குண்டு பத்திரிகையாக மாறியிருக்கிறது. தனது ‘சைஸ்’ பெருத்ததையே காலத்திற்கேற்ப மாறிக் கொள்வதாய் கூறும் குமுதம், தனது லேட்டஸ்ட் கொள்கைப் பிரகடனத்தைக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“குமுதம் இனி ஒரு சிலருக்கு மட்டுமல்ல, எல்லொருக்காகவும் வெளிவரும். சமீபத்திய நேஷனல் ரீடர்ஷிப் சர்வேயின்படி குமுதம் படிக்கும் வாசகர்கள் 50 லட்சம். இந்தியாவின் முதல் 10 பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகை குமுதம் மட்டும்தான்”.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தச் சாதனையின் அடிப்படை வாசகர்களாகிய உங்களின் ஆதரவுதான். அந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்து, நன்றியுடன் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. இனி, 160 பக்கங்களோடு குமுதம் வெளிவரும். ஒவ்வொரு பக்கமும் புதிதாக இழைத்து, உழைத்து, கவனித்துச் செதுக்கப்படும். விலையையும் அதிகப்படுத்தியிருக்கிறோம். இம்மாற்றம் ஒரு ஆரம்பம்தான். தொடருணும் உங்கள் ஆதரவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;- அன்புடன் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்து பேப்பர், ஃபில்டர் காபி, பிரஷர் குக்கர், கேஸ் அடுப்பு போன்ற நடுத்தர வர்க்க பட்டியலில் குமுதமும் உண்டு. இரண்டு தலைமுறையாக, படித்த தமிழர்களின் குடும்ப உறுப்பினராக குமுதம் மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் மட்டுமே தனது தோற்றத்திலிருந்து இன்று வரை தனது ஃபார்முலாவை மாற்றாமல் தொடர்கிறது. பழைய கள்ளை பானையிலிருந்து, பாலிதீன் பைக்கு மாற்றியதுதான் குமுதம் காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதின் பொருள். குமுதம் தனது 50 லட்சம் வாசகர்களுக்காக நன்றியுடன் கடினமாக உழைப்பது என்பதின் பொருள் அந்த ஃபார்முலாவைக் காப்பாற்றுவதுதான். அதைப் புரிந்து கொள்ளும்போது குமுதத்தின் 160 பக்கங்களும் கை நிறையக் கிடைக்கும் கழுதை விட்டைகளே என்பது தெரியவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் குழு&lt;br /&gt;&lt;br /&gt;ஏனைய செட்டிக் குடும்பங்கள் வட்டி, மளிகை, வியாபாரம் செய்து வந்த போது, 1943 ஆம் ஆண்டு குமுதத்தைத் துவக்கினார் எஸ்.ஏ.பி. செட்டியார். பகவத் கீதையை அடிக்கோடிட்டு படித்து ரசிக்கும் ஆன்மீகவாதியான செட்டியார், நடிகைகளின் அங்கங்களை ஒப்பிட்டு ரசிக்கும் லவுகீகவாதியாகவும் இருந்தார். இவரது பக்தி + செக்ஸ் கலந்த சிட்டுக் குருவி லேகியம்தான் இன்று வரையிலும் குமுதத்தின் இளமையைக் காற்றாற்றுகிறது. கைலாயம் சென்று விட்ட செட்டியாருக்கு லேகியத் தயாரிப்பில் உதவி செய்தவர்கள் ஜ.ரா.சுந்தரேசன், ரா.கி.ரங்கராஜன் ஆகியோர்.&lt;br /&gt;&lt;br /&gt;செட்டியாருடன் பங்குதாரராகச் சேர்ந்த பார்த்தசாரதி ஐயங்கார்தான் குமுதத்தின் பதிப்பாளர். நெற்றியில் நாமமிடும் தீவிர வைஷ்ணவாளாக இருந்தாலும், துட்டு விசயத்தில் இவரிடம் யாரும் நாமம் போட முடியாத அளவுக்கு கறாரான வியாபாரப் பேர்வழி. 90களின் தமிங்கல யுகத்திற்கேற்ப குமுதத்தை மாற்றியவர்களில் சுஜாதாவும், மாலனும் முக்கியமானவர்கள். ‘என்னால்தான் சர்குலேஷன் உயர்ந்தது’ என்று குமுதத்தின் பங்குதாரர்களாக மாற விரும்பியதால் இந்த முன்னாள் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியாட்களை ஆசிரியராகப் போட்டால்தானே இந்தத் தொல்லை என அமெரிக்காவில் மருத்துவத் தொழில் புரியும் செட்டியாரின் மகன் ஜவகர் பழனியப்பனையே ஆசிரியராக்கியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதத்தின் ஆசிரியர் குழுவினர் வார இறுதியில் உட்லண்ட்ஸ் ஓட்டலில் டிபன் சாப்பிட்டு மாலையில் மெரினாக் கடற்கரையில் அமர்ந்து  அடுத்த வார இதழின் செய்திகளை விவதிப்பார்களாம். கடந்த 53 ஆண்டுகளாக வெளிவந்த 2809 குமுதக் குட்டிகளைப் பெற்றெடுத்த பாவம் மெரினாக் கடற்கரையையே சாரும்! ஆயினும் இதே அரட்டையைத்தான் கிராமத்தின் பணக்காரப் பண்ணைப் பெரிசுகள், திண்ணையில் தொந்தி புரள, வாயில் குதப்பிய வெற்றிலையுடன், ‘அடுத்தாத்து அம்பு&lt;br /&gt;&lt;br /&gt;ஊத்தை கவனிச்சேளா ஓய்’ என்று பல நூற்றாண்டுகளாய்ச் செய்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இலாபமே துணை&lt;br /&gt;&lt;br /&gt;வாரம் 5 லட்சம் பிரதிகள் என ஆண்டுக்கு 265 இலட்சம் குமுதங்கள் விற்பனையாகின்றன. குமுதத்தின் விலையான 5 ரூபாயில், அதன் அனைத்து விதமான செலவுகளையும் கணக்கிட்டால் அடக்க விலை அதிக பட்சமாக ரூ.3.50 வரும். எனில் ஒரு இதழின் லாபம் 1.50. ஆண்டுக்கு 3 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய். குமுதத்தின் ஓரிதழில் 30 பக்கங்கள் விளம்பரத்திற்காக ஒதுக்கப்படும். அட்டை, வண்ணம், சிறப்பு என எல்லா விளம்பரங்களையும் கணக்கிட்டால் ஒரு பக்கத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் வரலாம். இவ்வகையில் வருடத்திற்கு 11 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என சிறப்பிதழ்களின் கூடுதல் வருமானத்தை சேர்த்தால் மொத்த ஆண்டு வருமானம் 20 கோடியைத் தாண்டும். ரிப்போர்ட்டர், மாலைமதி, பக்தி ஸ்பெஷல் போன்ற குமுதம் குடும்ப பத்திரிகைகளின் வருமானம் தனி.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதத்தின் இட ஒதுக்கீடு&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரங்கள் போக உள்ள 130 பக்கங்களில் சராசரியான இட ஒதுக்கீடு தலைப்பு வாரியாக பின் வருமாறு. சமூகம் - 5, அரசியல் - 15, சினிமா - 19, தொலைக்காட்சி -5, இசை -1.5, விளையாட்டு - 2, மருத்துவம் - 5, வாசகர் கடிதம் - 2, உலகச் செய்தி - 2, ஜோக் - 3, சிறுகதைகள் - 9, ஒரு பக்க கதைகள் - 4, புதிர் போட்டி - 2, தொடர் கதைகள் - 15, உணவு - 2, சுற்றுலா - 4, பேஷன் - 4, வேலை, கல்வி - 3, கவிதை - 2, வியாபாரம் சுய முன்னேற்றம் - 5, நூல் அறிமுகம் - 1, பக்தி ஆன்மீகம் - 5, அரசு கேள்வி பதில் - 2, இதரவை - 12.5 என ஒதுக்கப்படுகிறது. குமுதல் ஒரு ஃபேன்ஸி ஸ்டோரின் மினுமினுப்பைக் கொண்டிருக்கும். இத்தனை சமாச்சாரங்கள் இருந்தாலும் அத்தனையிலும் குமுத்தின் லேகியம் கலந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இட ஒதுக்கீட்டில் எழுத்து ஒதுக்கீடு&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் இல்லாமல் குமுதத்தின் ஒரு பக்கத்தில் 200 வார்த்தைகள் இடம் பெறும். குமுதத்தின் எல்லாக் கட்டுரைகளிலும் செய்தி போன்ற அரட்டை, ரசனை நடை, கிசுகிசு நடை, புகைப்படம், ஓவியம், வடிவமைப்பு இடம் ஆகியவை இடம் பெறும். குமுதத்தின் கதைகளுக்குரிய 30 பக்கங்களை கழித்து மீதியுள்ள 100 பக்கங்களைப் பிரித்துப் பார்ததால்,&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி, அரட்டை = 40 பக்கங்கள், படங்கள் = 36 பக்கங்கள், கிசு கிசு நடை = 23 பக்கங்கள் என வரும். இதில் வாசகர்கள் ஓரளவிற்கேனும் துளியூண்டாவது செய்திகளைத் தெரிந்து கொள்வது 40 பக்கத்தில் மட்டும்தான். அதாவது 8000 வார்த்தைகள். இதைப் புதிய கலாச்சாரத்தின் வார்த்தை - பக்க அளவிற்கு மாற்றினால் 13 பக்கங்கள் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 13 பக்க செய்திகளைத் தேர்வு செய்து, கண்டு, கேட்டு, படித்து, சுட்டு, மொழிமாற்றி, இன்னும் மூளையை கசக்கி எழுதினாலும் - ஒருமனித மூளை உழைக்க வேண்டியது அதிக பட்சம் 24 மணிநேரம் மட்டும்தான். இதையே கிசுகிசு - லேகியம் கலந்து ஊதிப்பெருக்கி எழுத கூடுதலாக ஒரு 24 மணிநேரம் வேண்டும். ஆனால் இதற்காகவே புரசைவாக்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டி, எல்லா நவீன வசதிகளையும் ஏற்படுத்தி, ஒரு பெரும்கூட்டமே வேலை செய்கிறது என்றால் தமிழன் செய்த பாவம்தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;குமுதத்தின் கதைகளில் இடம்பெறும் ஓவியங்களைக் கழித்துப் பார்த்தால் சுமார் 35 பக்கங்களை நிரப்பும் அளவுக்கு புகைப்படங்கள் வருகின்றன. இதில் சினிமா மனிதர்கள் - கவர்ச்சிப் படங்கள் 15 பக்கம், பிரபல அரசியல் தலைவர்களின் விதவிதமான கோணங்கள் 6 பக்கம், ஊருக்கு உபதேசம் செய்யும் தமிழக சமூகப் பிரபலங்கள் 6 பக்கம், இயற்கைக் காட்சிகள் 4 பக்கம், பொது மக்கள் 3 பக்கம் எனவும் இடம் பெறுகின்றனர். அதிலும் பொது மக்கள் ஸ்டாம்ப் சைசில் கறுப்பு-வெள்ளையில் தோன்றுவார்கள். சினிமாத்தோல் மட்டும் பளபளப்பு காகிதத்தில் பல வண்ணத்தில் முழு- அரை- கால் பக்க அளவுகளில் இடம்பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டுரையின் மையமான விசயத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில்தான் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்பு போன்றவை இடம் பெறும். ஆனால் குமுதத்தின் குறிப்பிட்ட கட்டுரைக்குள் நுழைவதற்கு ஆசை காட்டி அழைப்பதற்கே இவை பயன்படுகின்றன. இன்னும் பளிச்சென்று புரிய வேண்டுமானால் தரங்குறைந்த மேக்கப்புடன் தெருவோரத்தில் நிற்கும் விலைமாது ‘வாரியா’ என்றழைப்பதைத்தான் குமுதத்தின் புகைப்படங்களும் உணர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சினிமா, பெண், மேட்டுக்குடி வாழ்க்கை, பேஷன் ஆகியவற்றின் புகைப்படங்கள் ஏற்படுத்தும் அழகு பற்றிய படிமங்கள், குமுதத்திற்கு பிரியாணி போடும் விளம்பங்களுக்கு தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;‘பெண்களின் கனவு! எல்லா வயதிலும் பெண்களின் கனவு! ஆரோக்கியம்! கட்டுடல்! அழகு! - மெடிமிக்சின் சுந்தரி கேப்சூல் விளம்பரத்தின் வாசகம். குமுதம் உருவாக்க விரும்பும் மனிதர்களின் சாரத்தை ஒரு கவிதை போல 30 பக்க விளம்பரங்களும் தெரிவிக்கின்றன. நுகர்பொருள் நடுத்தர வர்க்கத்தையும் குறிப்பாக பெண்களையும் குறி வைத்து ஏவப்படும் இந்த விளம்பரங்கள் குமுதத்தின் சாரத்தை எளிமையாக புரியவைக்கும். பற்பசை, சோப், தேநீர், ஊறுகாய், காஃபி, பட்டு, பாத்திரங்கள், ஆன்மீகம், அனாதை இல்லம், ஆணுறை, உடலுறவு மாத்திரைகள், பைனான்ஸ், எல்.ஐ.சி. பாலிசி, கம்ப்யூட்டர் கல்வி, கருவளையம், ப்ரா, கூந்தல் தைலம், உடல் மெலிவு மாத்திரைகள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், கூப்பன் காட்டினால் தள்ளுபடி, மெகா பரிசுப் போட்டி என்று நிலைக்கண்ணாடி முன், தன்னையும், தன் வாழ்க்கையையும் பார்க்க, ரசிக்க, அடைய வாசகர்களை பெண்களைப் பயிற்றுவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதவியல்&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் முதலாளிகள் உருவாக்கியிருக்கும் குமுதவியல் என்ற இரசனைதான் அவர்கள் கட்டிக்காத்து வரும் ஓரே சொத்து. அரசியல், ஆன்மீகம் தொடங்கி, செக்ஸ், சினிமா வரை ஆட்சி செய்யும் அந்த இரசனை, மூளையின் சிந்தனை நரம்புகளை மக்கிப் போகவைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதத்தின் அட்டையில் 80 சதவீதம் திரைப்பட நடிகைகள் கவர்ச்சியுடன் இடம் பெறுவர். அந்தக் கவர்ச்சியின் பின்னணியில் அரசியல் - சமூகக் கட்டுரைகளின் தலைப்பு பளிச்சென்று தெரியும். வெள்ளை பனியன் அணிந்த சிம்ரனின் இடையில் ஃப்ளோரசன்ட் ஆரஞ்சு வண்ணத்தில் தீண்டாமைக் கிராமங்கள் என்றொரு அட்டை சமீபத்தில் வெளிவந்தது. தீண்டாமைக் கட்டுரைக்கு தாழ்த்தப்பட்ட மக்களையோ, சேரிகளையோ போடுவதற்குப் பதில் சிம்ரனைப் போட்டிருப்பது ஆத்திரமாக அருவருப்பாக இல்லையா? அடுத்த வாரத்தின் வாசகர் கடிதத்தில் “சினிமாவில் கூட சிம்ரன் இத்தனை அழகாக இல்லை” என்று ஒருவர் எழுதுகிறார். இதுதான் குமுதவியலின் சாதனை.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தில் குமுதம் செய்வதை காட்சியாக 24 மணிநேரமும் சன்.டி.வி செய்கிறது. அதனால் ஓரளவு முற்போக்கு - அரசியல் ஆர்வலர்களின் வட்டத்தை இழுப்பதற்கு கரூரில் தாலி கட்டிய சிறுமிகள், மதுரையில் விபச்சாரம் செய்யும் சிறுமிகள், வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவர்கள், மேலவளவு தீண்டாமை போன்ற செய்திகளை குமுதம் வெளியிடுகிறது. இந்தத் தூண்டிலில் சிக்கும் புதியவர்கள் ஏனைய பக்கங்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். குமுதத்தின் ஆன்மீகம், வேலை வாய்ப்பு, கல்விப் பயிற்சி, உடல்நலம் போன்ற பிரிவுகளுக்கும் இது பொருந்தும். தத்தமது நோக்கத்திற்காக குமுதத்தை திறப்பவர்கள், மூடும்போது மூளை மரத்த பிண்டங்களாக மாற்றப்படுவதுதான் குமுதவியலின் மகிமை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலையும், சமூகவியலையும் உருவிவிட்டு தலைவர்களது பழக்கவழக்கங்கள், உறவுகள், மோதல்கள் போன்றவற்றைத் தருவதுதான் குமுதத்தின் அரசியல் கட்டுரைகள். “வைரமுத்துவுடன் திடீரென்று மாமல்லபுரம் செல்கிறார் கலைஞர். ரஜினி, கமல், அண்ணா, பெரியார் பற்றி விவாதிக்கும் கலைஞர், பொறித்த மீனை வைரமுத்துவுக்குப் போடச் சொல்லும் கலைஞர், வீட்டு நாயை சமாதானப்படுத்துமாறு செல்போனில் அழைக்கும் தயாளு அம்மாளுடன் பேசும் கலைஞர் - இலையே கலைஞரின் மாமல்லபுரம் விசிட் பற்றிய 4 பக்கக் கட்டுரைச் செய்திகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தலைவர்களது சேட்டைகள், பேட்டிகள், சவுடால்கள், சந்தர்ப்பவாதங்கள் அனைத்தையும் மறக்கச் செய்து அவர்கள் பல் தேய்த்து - பழம் தின்ற கதைகளை ரசனையுடன் வெளியிடுவதில் குமுதம் ஒரு முன்னோடி.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி ஜயந்தியை நினைவு கூறும் குமுதம், பொள்ளாச்சி பூச்சி மருந்து வியாபாரி ஒருவர் காந்தி தபால் தலைகளைச் சேகரித்திருப்பதை தெரிவிக்கிறது. பொங்கல் சிறப்பிதழ் ஒன்றில், தமிழே தெரியாத பம்பாய் நடிகை பொங்கலிடுவதையும், கோலமிடுவதையும், பொங்கல் பற்றிய அவரது தத்துவங்களையும் வெளியிடுகிறது. காதல் சிறப்பிதழ் ஒன்றில், சேலம் அருகே உள்ள கிராமத்தினர், ஓடிப்போகும் காதலர்களை மீட்டு வந்து சுடுகாட்டில் தாலிகட்ட வைப்பதாக ஒரு செய்தி. இங்கே காந்தியும், காதலும், பொங்கலும் கீழான ரசனையில் ஜொலிப்பதுதான் குமுதவியலின் புதுமை.&lt;br /&gt;&lt;br /&gt;முன்அட்டை முதல் பின் அட்டை வரை எல்லா பக்கங்களிலும் சினிமா விரவியிருக்கும். நடுத்தர வர்க்கத்து பெண்மணிகள் சமைத்து ஓய்ந்த நேரங்களில் பேசிக் கொள்ளும் ஒரே சமூக விசயம் குமுதத்தின் சினிமா செய்திகள்தான். அரசியல் தலைவர்களை விட சினிமா நாயகிகளின் பழக்க வழக்கங்கள் நுணுக்கமாகப் பதியப்படும். சினிமாக் குமுதம்தான் வாசகர்களின் ரசனை, படிப்பு, கண்ணோட்டம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மோனிகா லிவின்ஸ்கி குண்டான செய்தியும், டென்னிஸ் நட்சத்திரங்கள் அகாஸி - ஸ்டெபிகிராப் காதல் படங்களும் அயல்நாட்டு செய்திகளாய் அணி வகுக்கும். ‘குடும்ப விழாவில் உங்களை ரகசியமாக பெண் பார்க்கும் போதும்’, விருந்திற்கு வந்த இளைஞர் கூட்டம் உங்கள் மார்பிலிருந்து கண்ணை அகற்றாமல் இருப்பதற்கும் போட வேண்டிய உடைகள், அழகுக் குறிப்புகள் ‘பேஷன் வாட்ச் பகுதியில் இடம் பெறும். இவையெல்லாம் விபச்சாரத்திற்கான வழிமுறைகள் என்பது படிக்கும் பெண்களுக்கு தோன்றாது.&lt;br /&gt;&lt;br /&gt;பக்திக் கட்டுரையில் தஞ்சாவூர்க் கோவில்களின் புராண புரட்டுக் கதைகள் குமுதவியலின் திரைக்கதை வடிவில் வெளிவரும். சென்று வரும் செலவு, பாவ - பரிகார பட்டியல், கதை சொல்லும் நீதி, குறிப்பிட்ட கடவுள் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று குறிப்பும் உண்டு. ‘இந்து’ உணர்வை எழுப்பப் போராடும் இந்து முன்னணி கூட இவ்விசயத்தில் குமுதத்திடம் பிச்சை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்திக்குப் பிறகு வியாபாரம், சுய முன்னேற்றம், இரண்டரை லட்சம் முதல் போட்டு 73,000 கோடியில் நிற்கும் திருபாய் அம்பானியின் கதை ஆங்கிலப் படத்தின் டிரெய்லர் போல வரும். மோசடியால் முன்னேறிய இத்தகைய ‘பிசினஸ் மகாராஜாக்கள்’ குமுதத்தில் கைபட்டு உழைப்பால் உயர்ந்த உத்தமர்களாக காட்சியளிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலுறுவு இச்சையைத் தூண்டிவிட்டு வேறு ஒன்றில் முடியும் 1 பக்க கதைகள், கள்ள உறவு தத்துவப் புகழ் பாலகுமாரன் போன்றோரின் தொடர்கதைகள் போன்றவை குமுதவியலின் கதை இலாகாவில் தவறாமல் இடம் பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் குமுதத்தின் ஒவ்வொரு பக்கமும் உழைத்து, இழைத்து , செதுக்கி உருவாக்கப்படுகிறது. சர்ரியலிசம், மாஜிகல் ரியலிசம், போஸ்ட் மாடர்னிசம் போன்ற, சிறு பத்திரிகைகள் மண்டை பிளக்க விவாதிக்கும் இசங்களின் நடைமுறை உதாரணம் குமுதம் மட்டும்தான். வாழ்க்கையை விளையாட்டாக, வேடிக்கையாக, ரசனையாகப் பார்க்க வைக்கும் குமுதவியல், வாழ்க்கையைத் தீவிரமாகப் பார்க்க விடாமலும் வினையாற்றுகிறது. நினைவில் நிற்காத குமுதத்தின் பக்கங்கள், நினைவில் நிறுத்த வேண்டிய பிரச்சினைகளை மறப்பதற்கும் கற்றுக் கொடுக்கிறது. குமுதத்தின் நொறுக்குத் தீனி ரசனை, வாழ்க்கை பற்றிய சமூக மதிப்பீடுகளை நொறுக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவிற்கு முன்பு விதிக்கப்பட்ட கேளிக்கை வரி குமுதத்திற்கு கிடையாது. குமுதத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் தபால் இரயில் சலுகைக் கட்டணங்களின் மதிப்பு பல கோடியிருக்கும். பொதுத் துறைகள் நட்டமடைய குமுதமும் ஒரு காரணம் என்பதை தொழிலாளிகள் உணர வேண்டும். மரங்களை வெட்டிக் கூழாக்கித்தான் செய்திக்காகிதம் தயாரிக்கப்படுகிறது. ஒரு வருட குமுதத்திற்கு தேவைப்படும் காகிதம் பல லட்சம் மெட்ரிக் டன்னாகும். குமுதத்திற்காக உலகெங்கும் லட்சக்கணக்கான மரங்கள் ஆண்டு தோறும் அழிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதத்திடமிருந்து காட்டின் இயற்கை வளத்தையும், நாட்டின் சிந்தனை வளத்தையும் காப்பாற்றுங்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - புதிய கலாச்சாரம், மார்ச் - 2000&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: இதே ஆய்வு பிற ‘குடும்ப’ பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும். டப்பா வேறு, லேகியம் ஒன்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-4706498988704952331?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/4706498988704952331/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=4706498988704952331' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/4706498988704952331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/4706498988704952331'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2009/03/blog-post_10.html' title='﻿ ﻿ குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-4212137014618742587</id><published>2009-03-10T09:21:00.000-07:00</published><updated>2009-03-10T09:22:40.806-07:00</updated><title type='text'>ஜென் கதைகள்</title><content type='html'>மாணவன் ஒருவன் சண்டைக் கலையை கற்றுக் கொள்வதற்காக ஜென் குரு ஒருவரிடம் சென்றான். குருவே, யுத்தக் கலையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் மற்றொரு பாணியைக் கற்றுக்கொள்ள வேறொரு குருவிடமும் சேரலாம் என்று நினைக்கிறேன். இது குறித்து உங்கள் ஆலோசனையும் அனுமதியும் தேவை என்றான்.&lt;br /&gt;            "இரு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரனால் ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது'' என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தார் குரு.&lt;br /&gt;&lt;br /&gt;***********&lt;br /&gt;            போர்வீரன் ஒருவன் ஜென் குருவை அணுகிக் கேட்டான். "ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?'' அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்டார் குரு-&lt;br /&gt;            "நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப்பட்ட பிச்சைக்காரனாக இருப்பான்?''&lt;br /&gt;            போர்வீரன் கடுங்கோபத்துடன் வாளை உறையில் இருந்து உருவத் துவங்கினான்.&lt;br /&gt;            ஓஹோ. வாளை வைத்திருக்கிறாயோ? அதற்கு என் தலையை சீவும் வல்லமை இருக்கிறதா என்று கேட்டார் குரு. அவன் ஏறத்தாழ அவர் தலையை சீவத் தயார் ஆனான். அவன் கையைப் பிடித்து நிறுத்தி குரு சொன்னார் &lt;br /&gt;            "இப்போது நரகத்தின் கதவுகள் திறக்கின்றன''&lt;br /&gt;            அவன் ஒருவாறு சமாளித்து தலைகுனிந்து வெட்கி அவரை வணங்கி நின்றான். குரு சொன்னார்-&lt;br /&gt;            "இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன''.&lt;br /&gt;&lt;br /&gt;***********&lt;br /&gt;            ஒரு ஜென் குருவின் சீடன் மற்றொரு குருவின் சீடனை வழியில் சந்தித்தான். ஒரு சீடன் மற்றவனிடம் சொன்னான். எங்கள் குரு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார். 'சொல்லப்போனால் அவர் நிகழ்த்திக் காட்டாத அற்புதங்களே இல்லை என்று சொல்லலாம். உன்னுடய குரு என்ன அற்புதம் நிகழ்த்துவார்?' என்று கேட்டான்.&lt;br /&gt;            இன்னொரு சீடன் சொன்னான் “எங்கள் குரு நிகழ்த்தும் மாபெரும் அற்புதம் என்னவென்றால் யாதொரு அற்புதத்தையும் நிகழ்த்தாது இருப்பதுதான்'. &lt;br /&gt;&lt;br /&gt;வியாஸன் &lt;br /&gt; &lt;br /&gt;நன்றி - வடக்குவாசல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-4212137014618742587?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/4212137014618742587/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=4212137014618742587' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/4212137014618742587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/4212137014618742587'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2009/03/blog-post.html' title='ஜென் கதைகள்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-7747947054271322523</id><published>2009-02-24T03:40:00.000-08:00</published><updated>2009-02-24T03:42:49.561-08:00</updated><title type='text'>சில  ஆன்மீகக் குறிப்புகள்</title><content type='html'>விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பக மொட்டுத் தவிர,  வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.&lt;br /&gt;&lt;br /&gt;துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார  தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி -ஆர்.பி.வி.எஸ்.மணியன் தொகுத்த  &lt;br /&gt;"எளிய ஆகம பூஜாமுறை"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-7747947054271322523?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/7747947054271322523/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=7747947054271322523' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/7747947054271322523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/7747947054271322523'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2009/02/blog-post.html' title='சில  ஆன்மீகக் குறிப்புகள்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-6054316404204140030</id><published>2009-01-21T09:07:00.000-08:00</published><updated>2009-01-21T09:08:54.394-08:00</updated><title type='text'>அறைக்குள் மௌனம் - ஹெச்.ஜி.ரசூல்</title><content type='html'>ஒரு மீன் குஞ்சைப் போல் வளர்ந்தேன்&lt;br /&gt;அப்போதும் பேசமுடியவில்லை&lt;br /&gt;கண்ணாடித் தொட்டி விடுதலை தர &lt;br /&gt;ஆற்றில் விடப் பட்டேன்&lt;br /&gt;அந்தச் சிறுமியின் பேருதவி மறப்பதற்கல்ல. &lt;br /&gt;நீரோடும் திசையெல்லாம் ஓடிய போது&lt;br /&gt;கொக்கொன்றின் காத்திருப்பு&lt;br /&gt;பிடுங்கி எறிந்ததில் கரையில் புரள &lt;br /&gt;புதையுண்டழிந்த ஈர்ப்பின் துகள்களாய் &lt;br /&gt;விதையுள் புகுந்து &lt;br /&gt;கீழா நெல்லிச் செடியாய் வடிவெடுத்த&lt;br /&gt;என்னின் தேடலில் &lt;br /&gt;திரும்பவும் உறைந்தது மௌனம் &lt;br /&gt;ஒரு வெள்ளாடு என்னை மேய்ந்து தின்றது&lt;br /&gt;குழந்தையின் உதடு சப்புக் கொட்ட &lt;br /&gt;சுரந்த பாலின் நிறமானேன் &lt;br /&gt;அந்த வெற்றுடலில் கவிந்த நிழல்&lt;br /&gt;ஒரு சொல்லைத் தேடிப் பயணித்த களைப்பில்&lt;br /&gt;அறைக்குள் நிறைந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : அம்ருதா - டிசம்பர் 2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-6054316404204140030?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/6054316404204140030/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=6054316404204140030' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/6054316404204140030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/6054316404204140030'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2009/01/blog-post.html' title='அறைக்குள் மௌனம் - ஹெச்.ஜி.ரசூல்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-4450195162058313156</id><published>2008-12-18T08:18:00.000-08:00</published><updated>2008-12-18T08:21:04.551-08:00</updated><title type='text'>பங்குச் சந்தையும் குரங்கு கதையும்</title><content type='html'>அமெரிக்காவின் பங்குச் சந்தையில் நிதி மூலதன கும்பல்கள் கொள்ளையடித்தது தான், இவ்வளவு பெரிய வீழ்ச்சியை அமெரிக்கா கண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊழலைப் புரிந்து கொள்ள பங்குச் சந்தையை பற்றிய சில அடிப்படைகள் நமக்கு புரிந்து இருப்பது அவசியம். கீழே வருகிற குட்டிக்கதை பங்குச் சந்தையின் சூதாட்டத்தை கொஞ்சம் புரிய வைக்க முயற்சிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2000 புள்ளிகள் சரிந்தன... சதுரங்கள் சிரித்தன...என பங்குச் சந்தையைப் பற்றி வரும் தகவல்கள் எதுவும் என் மர மண்டைக்கு எட்டியதேயில்லை. வாரச் சந்தையையே புரிந்து கொள்ளாத எனக்கு பங்குச் சந்தையைப் பற்றி எப்படிப் புரியப் போகிறது என்றிருந்த வேளையில்... அது ஒன்றும் சிரமமில்லை என்று ஒரு கதை.&lt;br /&gt;&lt;br /&gt;தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்த கிராம மக்களைப் பார்ப்பதற்காக நகரத்திலிருந்து ஒருவன் வந்து சேர்ந்தான். கிராம மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டிய அவன்... தான் குரங்கு வாங்க வந்திருப்பதாகவும்... கிராம மக்கள் குரங்கு பிடித்துக் கொடுத்தால் அதற்கு 10 ரூபாய் கொடுப்பதாகவும் அறிவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நம்பிய மக்களும் இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு குரங்கு பிடிக்கக் கிளம்பினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாளிலேயே அந்தப் பகுதியில் குரங்குகள் குறைந்து போக...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை ஒரு குரங்கிற்கு 20 ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தான் நகரத்திலிருந்து வந்தவன். சில நூறு குரங்குகள் பிடித்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிச் சென்றனர் கிராம மக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் அக்கம் பக்கத்திலுள்ள குரங்குகளும் குறைந்து போகவே... குரங்குபிடி தொழிலில் தேக்கம் வந்து சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குரங்குப் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரமாய்ப் பார்த்து... &lt;br /&gt;&lt;br /&gt;நன்றாகக் கேளுங்கள்... இந்த முறை நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு குரங்குக்கும் 50 ரூபாய் தரப் போகிறேன். அதன்பிறகு நீங்கள்தான் பெரிய பணக்காரர்கள் என்று அறிவித்துவிட்டு நான் வெளியூர் செல்வதால் நான் வரும்வரை எனக்கு பதிலாக இவர் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்வார் என்று இன்னொரு ஆளையும் அறிமுகப்படுத்தி வைத்து விட்டு கிளம்பினான் நகரத்துவாசி. இம்முறை குரங்குகள் பிடிபடுவது லேசுப்பட்ட விஷயமாக இருக்கவில்லை. தேடிச் சலித்த மக்கள் எதுவும் பிடிபடாது விரக்தியுடன் குரங்குபிடி ஆபீசை நோக்கி சோகமாக வந்தனர். நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த புதிய ஆள் `இதற்கா இவ்வளவு கவலை....? இதோ இந்தக் கூண்டில் இருக்கும் குரங்குகளை நான் உங்களுக்கு வெறும் 35 ரூபாய்க்குத் தருகிறேன்...இதையே நீங்கள் நாளை அந்த ஆள் நகரத்திலிருந்து வந்தவுடன் 50 ரூபாய்க்கு சத்தமில்லாமல் விற்று விட்டு அள்ளிக் கொள்ளுங்கள் உங்கள் பணத்தை' என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்டவுடன்... அட...பணம் சம்பாதிக்க இவ்வளவு சுலபமான வழியா? குரங்கைத் தேடி அலையாமலேயே இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சியில்... கையில் இருந்த பணம்... சேமித்து வைத்திருந்த பணம்... என எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு குரங்குகளை ஓட்டிச் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை குரங்குகளைக் கொடுத்துவிட்டு பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வரலாம் என்று கிராமத்தினர் படையெடுத்துப் போக... அங்கே... &lt;br /&gt;&lt;br /&gt;குரங்குபிடி ஆபீசில் பெரிய திண்டுக்கல் பூட்டு ஒன்று அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. அதன் பக்கத்திலேயே லேமினேட் செய்து மாட்டப்பட்டிருந்தது ஒரு கீதாசாரம்: `நேற்று உன்னிடம் இருந்தது இன்று என்னிடம் இருக்கிறது. நாளை அது யாரிடமோ?' என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப அந்த ஊருல காசுக்குப் பஞ்சம் இருக்கோ இல்லியோ...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா...&lt;br /&gt;&lt;br /&gt;குரங்குக்கு மட்டும் பஞ்சமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் குரங்கு. எதிலும் குரங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;- பாமரன் &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - குருத்து&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-4450195162058313156?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/4450195162058313156/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=4450195162058313156' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/4450195162058313156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/4450195162058313156'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2008/12/blog-post.html' title='பங்குச் சந்தையும் குரங்கு கதையும்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-268871102955919523</id><published>2008-11-15T07:49:00.000-08:00</published><updated>2008-11-15T07:50:12.601-08:00</updated><title type='text'>மதம் என்ற ஒன்று தேவைதானா ?</title><content type='html'>மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்கள் சண்டைகள், போராட்டங்களை.. எல்லாம்&lt;br /&gt;பார்க்கும்போது 'மதம் என்ற ஒன்று தேவைதானா ?' என்ற கேள்வி எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானம் வளர்வதால்தான் நியூக்ளியர் பாம், பயலாஜிகல் பாம் என்று&lt;br /&gt;நாசகார ஆயுதங்கள் வருகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;வீடு இருட்டாக இருக்கிறது, எரிச்சலுடன் கதவைத் திறந்து கொண்டு &lt;br /&gt;வேகமாக உள்ளே போனால், நாற்காலியும், மேஜையும் காலை இடறிவிடுகின்றன!&lt;br /&gt;உடனே நிதானம் இழந்து கோபப்பட்டு மேஜை, நாற்காலிகளையெல்லாம் எடுத்து&lt;br /&gt;வெளியே எறிவதால் பிரயோஜனம் இல்லை! நாம் இடறி விழுந்ததற்குக் காரணம்&lt;br /&gt;வெளிச்சமின்மை! ஆகையால் வெளியே போக வேண்டியது மேஜை அல்ல,&lt;br /&gt;விளக்கை ஏற்றினால் இருட்டு போய், பிரச்னைகளும் தன்னால் காணாமல் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கலவரத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணப் பிறந்தது அல்ல மதம்! &lt;br /&gt;அமைதியைக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது அது! மதம், மனிதர்களைப் &lt;br /&gt;பிரிப்பதற்காக உண்டாக்கப்படவில்லை! மனிதர்களை ஒன்று படுத்துவதற்காக&lt;br /&gt;ஏற்படுத்தப்பட்டதுதான் அது!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் வாழ்கையில் நடந்த ஓர் உண்மை சம்பவம்&lt;br /&gt;பற்றி அவசியம் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்காளத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் வெட்டி, வீதிகளில்&lt;br /&gt;இரத்த ஆறு ஓடவிட்டுக் கொண்டிருந்த சமயம்.. நடுத்தர வயது கொண்ட ஒருவர்&lt;br /&gt;மகாத்மா காலிலே விழுந்து, 'நான் பாவி! கொலை செய்துவிட்டேன் ! நிச்சயம்&lt;br /&gt;நான் நரகத்துக்குதான் போவேன்!' என்று கதறி அழ ஆரம்பித்தார். விஷயம் இதுதான்&lt;br /&gt;மதக்கலவரத்தில் யாரோ இவரின் மகனை கொன்றுவிட்டார்கள், அதனால் இவரும்&lt;br /&gt;பழி வாங்க ஆத்திரத்தில் ஒரு முஸ்லிம் சிறுவனை வெட்டித் தள்ளினார். பிறகு தான்,&lt;br /&gt;தான் செய்தது எத்தனை பெரிய பாவம் என்று எண்ணி, மகாத்மாவிடம் வந்தார்.&lt;br /&gt;இப்பவும் எதுவும் கெடவில்லை, நீ சொர்க்கத்துக்குப் போக ஒரு சந்தர்ப்பம்&lt;br /&gt;இருக்கிறது, என்றார் காந்திஜி&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மதக்கலவரத்தில் பெற்றோரை இழந்த அநாதையாகிவிட்ட ஒரு முஸ்லிம்&lt;br /&gt;குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்து பெரிய ஆள் ஆக்கு, அதுவே நீ செய்த&lt;br /&gt;பாவத்துக்கு பரிகாரம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து நாம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் வேற்று&lt;br /&gt;மதத்தினரை கொலை செய்து விட்டு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தால்&lt;br /&gt;எல்லாம் சரியாகிவிடும் என்று தப்பாக அர்த்தம் கொள்ள கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தான் செய்த தவறுக்கு உண்மையாக வருந்தி, ஒருவன் மனம்&lt;br /&gt;திருந்துவானேயானால் அவர் எல்லா மதத்தினரையும் உள்ளன்போடு நேசிப்பான்.&lt;br /&gt;எந்த மதமானாலும் அவை 'அயலானுக்கும் அன்பு காட்டு' என்பதை வெவ்வேறு&lt;br /&gt;வார்த்தைகளில் சொல்கிறது. அதனால் 'எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சக மனிதர்களை நான் நேசிப்பேன்! அவர்களிடத்தில் அன்பு காட்டுவேன்!' இப்படி ஒரு சபதத்தை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டால் போதும்.. மதத்தின் பெயரால் மட்டும் இல்லை, ஜாதி, இனம் என்று எந்த காரணம் கொண்டும் பிரச்னைகள் தலைதூக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமி சுகபோதானந்தா தொகுப்பிலிருந்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-268871102955919523?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/268871102955919523/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=268871102955919523' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/268871102955919523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/268871102955919523'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2008/11/blog-post.html' title='மதம் என்ற ஒன்று தேவைதானா ?'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-174359940296126583</id><published>2008-10-04T03:01:00.000-07:00</published><updated>2008-10-04T03:05:59.401-07:00</updated><title type='text'>நமக்கிருப்பது எழுத்து : லாவண்யா</title><content type='html'>நமக்குத் தெரியும்&lt;br /&gt;ஒரு பொம்மலாட்டத்தில்&lt;br /&gt;நாம் மன்னர்களென்று. &lt;br /&gt;நமக்குத் தெரியும் &lt;br /&gt;உண்மையில் நாம் &lt;br /&gt;சம்பள அடிமைகளென்று&lt;br /&gt;நமக்குத் தெரியும்&lt;br /&gt;மன்னர்கள், குறுநில மன்னர்கள்&lt;br /&gt;பெருநில மன்னர்கள், மாமன்னர்கள் &lt;br /&gt;பெரு மாமன்னர்களின் பிரஜைகள் நாமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத் தெரியும்&lt;br /&gt;மாமன்னராகும் கனவு&lt;br /&gt;பலருக்குமிருக்கிறதென்று &lt;br /&gt;நமக்குத் தெரியும்&lt;br /&gt;அரசன் வசமும் அவன்&lt;br /&gt;எதிரிகள் வசமும் &lt;br /&gt;ஆளும் அம்பும் உண்டென்று.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத் தெரியும்&lt;br /&gt;பசுக்களை, இளங்கன்றுகளை &lt;br /&gt;காளைகளை, பறவைகளை, மரங்களை &lt;br /&gt;சாய்த்தது யாரென்று.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத் தெரியும்&lt;br /&gt;கண்ணால் கண்டதும்&lt;br /&gt;காதால் கேட்டதும்&lt;br /&gt;தீர விசாரித்ததும் மெய்யென்று.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத் தெரியும்&lt;br /&gt;நமதடுத்த கணம்&lt;br /&gt;கத்தியின் கூராய் &lt;br /&gt;அரிவாளின் மின்னலாய் &lt;br /&gt;துப்பாக்கியின் உறுமலாய் வருமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத் தெரியும் நாம்&lt;br /&gt;கண்களை, காதுகளை வாயை &lt;br /&gt;பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத் தெரியும்&lt;br /&gt;நமக்கிருப்பது ஒரே உயிர்&lt;br /&gt;அதை எளிதில் விடக்கூடாதென்று. &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - நவீனவிருட்சம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-174359940296126583?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/174359940296126583/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=174359940296126583' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/174359940296126583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/174359940296126583'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2008/10/blog-post.html' title='நமக்கிருப்பது எழுத்து : லாவண்யா'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-6636061493074033851</id><published>2008-09-06T06:15:00.000-07:00</published><updated>2008-09-06T06:49:32.656-07:00</updated><title type='text'>கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில் - சிறுகதை - மோகன்தாஸ்</title><content type='html'>"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மர்மமாகச் சிரித்தவர், "சரி..." என்றபடி மேலும் கீழும் என்னைப் ஒருமுறை பார்த்துவிட்டு, "உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து என் கைகளை ஊன்றிக்கவனித்தவர்,&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் இருக்காங்க இல்ல, உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ஆசிரியர்கள் இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;கிழிஞ்சது அடச்சே நான் காண்பது கனவு மாதிரியிருக்கே ஒருவேளை மாஜிக்கல் ரியலிஸம் பத்தி யோசிச்சு யோசிச்சு இப்ப கனவிலேயே வந்துவிட்டதோ என்று நினைக்கும் பொழுது உணர்வின் வழியில் இல்லை இது கனவில்லை கண்முன்னே இருக்கும் நபர் உண்மை நான் அவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை என்றும் உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"கனவில்லை நண்பனே நீ காண்பதும் கனவில்லை நான் சொல்வதும் மாயமில்லை!" தாடியை நீவிவிட்டுக்கொண்டே அந்த நபர் சிரிக்க எனக்கு உள்ளே பகபகவென்று எரிந்தது. இது சாத்தியமாயிருக்க நியாயமில்லை அந்த நபர் இதையும் ஏதோ அதிர்ஷ்டத்தில் சொல்லியதாகத்தான் நான் நினைத்தேன். அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. ஜோசியம் ஜாதகம் கைரேகை பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை தான் அது உண்மையாகயிருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன் கைரேகை படி இருபது வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, உன் இருபத்தொன்னாவது பிறந்தநாளின் பொழுது நீ வாழ்க்கையில் எதையெதையெல்லாம் அடையணும்னு நினைச்சிருந்தாயோ அதெல்லாம் உனக்கு கிடைத்திருக்கும். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலும் உனக்கு இறக்கமேயில்லாமல் ஏற்றம் மட்டுமே இருந்திருக்கும். நீ இன்வெஸ்ட் செய்த இடங்களில் எல்லாம் உனக்கு லாபமே கிடைத்திருக்கும், ஆகமொத்தத்தில் கடைசி பத்துவருடங்களில் நீ அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்."&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார், என்னவோ என் கண்களில் இருந்து அடுத்த உண்மைகளைக் கொண்டுவரப்போகிறவராய். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை, நான் நினைத்தேன் என் நண்பர்கள் தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. என் நாத்தீக வாதத்தை எதிர்க்கமுடியாமல் என் நண்பர்கள் பர்ஸனல் இன்ஃபர்மேஷன்களைக் கொடுத்து இந்த சாமியார்களைச் செட்டப் செய்திருப்பார்கள் என்று. இதுவரை அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் முழுவதுமே என்னைப் பற்றி கொஞ்சம் நன்றாய்த் தெரிந்த நபர்கள் கொடுத்திருக்கக்கூடியவை தான். என் சந்தேகம் வழுக்க நான் கேள்வியை கொஞ்சம் கடினமாக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என் வாழ்க்கையிலேயே ஒருதடவை தான் நான் காதலித்திருக்கிறேன். அது எப்ப? என் காதல் என்னாச்சு? யார் அந்த பொண்ணு?"&lt;br /&gt;&lt;br /&gt;பதின்மைத்தின் தொடக்கத்தில் நான் செய்த காதலைப் பற்றி தெரிந்தவர்கள் ரொம்பவும் குறைவே, என் குடும்பத்தினர் தவிர்த்து ஒன்றிரண்டு பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பார்ப்போம் இந்த போலிச் சாமியார் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி உன் கண்களைக் கூட என்னால் படிக்கமுடியும் நீ உன் நண்பர்களைச் சந்தேகிக்கிறாய் அப்படியே என் திறமையையும் சரி ஒரு நிமிடம் பொறு!" என் கைகளை ஊன்றிக் கவனித்தவர், ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து கணக்குப் போடத்துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நோட்டில் கடைசியாய் இரண்டு புள்ளிகள் வைப்பது மட்டும் எனக்குப் புரிந்தது. சட்டென்று நிமிர்ந்தவர்,&lt;br /&gt;&lt;br /&gt;"நீ சொல்ற காதல் நடந்தப்ப உனக்கு 18 வயது நீ பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாய், அந்தப் பெண் எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். உன் காதல் நிறைவேறாத ஒன்றாகயிருந்திருக்க வேண்டும், அதைக் காதல் என்று கூட நீதான் சொல்கிறாய் நான் அல்ல. என் கணக்கின் படி பார்த்தால் அவளது பெயர் ஙல் தொடங்க வேண்டும். பெரியதாக இல்லாமல் சுருக்கமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய ஊகத்தின் படி அவள் பெயர் மீனாவோ இல்லை மீனாக்ஷியோ! சரியா?"&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய நான் மயக்கம் போட்டுவிடும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அவள் பெயர் மீனாதான் பெயர் அளவிற்குத் தெரிந்தவர்கள் என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை விசாரித்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள் அப்படியென்றால் இந்தச் சாமியார் போலியல்ல என்று உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் கைரேகையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லமுடியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னுடைய ஏழு பிறவிகளையும் சொல்லமுடியும் உன் கைரேகையை வைத்து! அந்த அளவிற்கு இந்த வித்தையை அறிந்தவர்கள் தற்சமயம் மிகமிகக் குறைவு. அதன் காரணமாகவே இருக்கும் சிலரையும் மக்கள் போலியானவர்கள் என்று நம்பும்படியாகிவிடுகிறது."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி இத்தனை திறமையுள்ள நீங்கள் என்னிடம் இதைச் சொல்ல நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னை நாத்தீகனிலிருந்து ஆத்தீகனாக்குவது தான் ஒரே காரணமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை யாரையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக்குவது என் வேலையல்ல, முடியக்கூடியதுமல்ல அது. சொல்லப்போனால் எதையும் சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்வது சரியான முறையல்ல. அதனால் தான் நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்! நீ கேட்டாயே எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்னால் இல்லை, நமக்கு எல்லாம் மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறதே அதனால். இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி உன்னை பரம்பொருளை நம்பவைப்பது என்பதே கூட எனக்கு ஒவ்வாத ஒரு காரியம் தான். ஆனால் இது இப்படி இப்பொழுது நடந்தே ஆகவேண்டும் நடக்கிறது!"&lt;br /&gt;&lt;br /&gt;கண்களை மூடி கடவுளிடம் பேசுவதைப்போல் தலைநிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார். நான் எனக்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அவரையே பார்த்தபடி நான் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன் வாழ்க்கையில் எத்தனை முறை எத்தனை பேரைக் கேட்டிருப்பார் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று? இன்று உனக்கு நான் காண்பிக்கிறேன் கண்களை மூடு! உன் மூளையை மட்டும் திறந்து வைத்துக் கொள்!"&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னவர் மெதுவாக என் கண்களை மூடி வரப்போவது அனுபவிக்கத் தயாரானேன். அவருடைய கைகள் என் தலையில் ஆசிர்வாதம் அளிப்பதைப் போல் தொட, எனக்குள் ஒரு உள்ளொளி பரவியது, உடம்பெல்லாம் ஒரு அதிர்வு, யாரோ என்னை ஆட்கொள்வதைப் போன்ற உணர்வு தூரத்தில் ஒரு ஒளி அதுவரை இருண்மையாக இருந்த என் மனதின் வெளிச்சமாய் இறைவன் பரவுவதை உணர முடிந்தது. ஆஹா எவ்வளவு முட்டாள்த்தனமாயிருந்துவிட்டோம்! கடவுளே! சரி இதுவும் கூட நமக்கான ஒரு பயிற்சிதான். என் கைகள் நானாகவே உணராமல் அந்த உள்ளொளியை நோக்கி கரம் குவித்தது. மெதுவாய் அந்த அதிர்வு குறைந்து மனம் நிறைந்ததைப் போலிருந்தது. நான் மெதுவாகக் கண்களைத் திறந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷிட் ஐம்பது அறுபது நபர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள், நான்கைந்து காமெராக்கள் என்னைச் சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தன. அந்தச் சாமியார் என்னை நெருங்கி வந்து, "சார் நாங்க QTV இருந்து வருகிறோம், Just for laughs gags நிகழ்ச்சிக்காக. உங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு டிடெக்டிவ் நிறுவனம் வைத்து சேகரித்தோம், கடைசியா நீங்க ஃபீல் பண்ணினது ஒரு மைல்ட் ஷாக் அவ்வளவே!" என்று சொல்ல நான் முகம் முழுவதும் வழிவதைத் துடைக்கமுடியாமல் அப்படியே நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி சர்வேசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-6636061493074033851?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/6636061493074033851/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=6636061493074033851' title='1 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/6636061493074033851'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/6636061493074033851'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2008/09/blog-post.html' title='கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில் - சிறுகதை - மோகன்தாஸ்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-6236363159277805573</id><published>2008-08-02T02:29:00.000-07:00</published><updated>2008-08-02T02:39:18.738-07:00</updated><title type='text'>முத்திரை கவிதைகள்</title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_Bt6Eu8RPWSE/SJQrK0kvc5I/AAAAAAAAAD4/M4whKB-5OJo/s1600-h/asin3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_Bt6Eu8RPWSE/SJQrK0kvc5I/AAAAAAAAAD4/M4whKB-5OJo/s200/asin3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5229852532195423122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மெள்ள நகரும்&lt;br /&gt;பேருந்தின் ஜன்னலில்&lt;br /&gt;அவசரமாய் கையேந்தும்&lt;br /&gt;பிச்சைக்காரியின்&lt;br /&gt;இடுப்புக் குழந்தை&lt;br /&gt;டாட்டா காட்டுகிறது&lt;br /&gt;பஸ் பயணிகளுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;- குழந்தை ,  பி.பழனிச்சாமி&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்&lt;br /&gt;நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்&lt;br /&gt;அடக்கமாக எனக்குப் பின்னால்&lt;br /&gt;நின்றுகொண்டிருப்பாய் நீ&lt;br /&gt;&lt;br /&gt;உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி&lt;br /&gt;உன்னை மிரட்டுவேன் நான்&lt;br /&gt;என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்&lt;br /&gt;தெரிந்தும்&lt;br /&gt;அமைதியாக இருப்பாய் நீ&lt;br /&gt;&lt;br /&gt;நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய&lt;br /&gt;சொல்லிக் கொள்வதில்லை நான்&lt;br /&gt;நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து&lt;br /&gt;பறைசாற்றியாக வேண்டும் நீ&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிறகு என் நினைவுகளோடு&lt;br /&gt;வாழவைக்கிறார்கள் உன்னை&lt;br /&gt;உனக்குப் பிறகு உன் தங்கையோடு&lt;br /&gt;வாழவைக்கிறார்கள் என்னை&lt;br /&gt;&lt;br /&gt;- நானும் நீயும், ஜெயபாஸ்கரன்&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;வாழ்ந்து கெட்டவனின்&lt;br /&gt;பரம்பரை வீட்டை&lt;br /&gt;விலை முடிக்கும்போது&lt;br /&gt;உற்றுக்கேள்&lt;br /&gt;கொல்லையில்&lt;br /&gt;சன்னமாக எழும்&lt;br /&gt;பெண்களின் விசும்பலை&lt;br /&gt;&lt;br /&gt;- உயிரின் ஒலி , மகுடேசுவரன்&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;விழுங்கிய மீன்&lt;br /&gt;தொண்டையில் குத்துகையில்&lt;br /&gt;உணர்கிறேன்&lt;br /&gt;தூண்டிலின் ரணம்&lt;br /&gt;&lt;br /&gt;- வலி , ஜி.ஆர்.விஜய்&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாயிரத்துக்கு&lt;br /&gt;விற்றுவிட்ட பிறகும்&lt;br /&gt;ராவோடு ராவாக&lt;br /&gt;புதிய எஜமானனின்&lt;br /&gt;தொழுவத்துக் கயிற்றை&lt;br /&gt;அறுத்துக்கொண்டு&lt;br /&gt;பத்து கிலோமீட்டர்&lt;br /&gt;பயணம் செய்து&lt;br /&gt;மூச்சிரைத்தபடி&lt;br /&gt;வீட்டு வாசலில்&lt;br /&gt;வந்து நிற்கிற&lt;br /&gt;வெள்ளைப் பசுவைப்&lt;br /&gt;பார்க்கும்போது&lt;br /&gt;உறுத்தத்தான் செய்கிறது&lt;br /&gt;தனிக்குடித்தனம்&lt;br /&gt;வந்தவனுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;- குற்ற மனசு , ஜெ.முருகன்&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;தீர்த்தவாரித் திருவிழாவில்&lt;br /&gt;அலங்கரிக்கப்பட்ட&lt;br /&gt;அர்த்தநாரீஸ்வரரின்&lt;br /&gt;பிரமாண்ட திரு உருவத்தை&lt;br /&gt;கழுத்துப் புண்களில்&lt;br /&gt;ரத்தம் வடிய&lt;br /&gt;கண்களில்&lt;br /&gt;நீர் கசிய&lt;br /&gt;இழுத்து வரும்&lt;br /&gt;வண்டி மாடுகளுக்கு&lt;br /&gt;தெரிந்திருக்காது&lt;br /&gt;அவை&lt;br /&gt;எவ்வளவு பாக்கியம்&lt;br /&gt;பெற்றிருக்க வேண்டுமென்பது!&lt;br /&gt;&lt;br /&gt;- புண்ணியம் , க.பாலவெங்கடேசன்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி :: முத்திரை கவிதைகள், 17.11.02 ஆனந்த விகடன் இணைப்பு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-6236363159277805573?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/6236363159277805573/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=6236363159277805573' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/6236363159277805573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/6236363159277805573'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2008/08/blog-post.html' title='முத்திரை கவிதைகள்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_Bt6Eu8RPWSE/SJQrK0kvc5I/AAAAAAAAAD4/M4whKB-5OJo/s72-c/asin3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-3890733427792335959</id><published>2008-07-03T07:45:00.000-07:00</published><updated>2008-07-08T09:52:48.091-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்'/><title type='text'>நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்</title><content type='html'>&lt;strong&gt;யமுனா ராஜேந்திரன் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ‘ஆஸ்கார்’ கனவுகளும், பிரெஞ்சு ‘கேனஸ்’ கனவுகளும் கோடம்பாக்கத்தின் தெருக்களில் நிரம்பிவழிந்து கொண்டிருக்கிறது. கமல்ஹாஸனும் மணிரத்தினமும் லாஸ் ஏஞ்ஜல்ஸ் மலைகளின் மயக்கம் தெளிந்து நிர்நதரமாகக் கீழே இறங்கிவிட்டார்கள் எனத் தெரிகிறது. அமெரிக்க மாதிரிகளை, கோடம்பாக்கத்திலேயே தமிழ்ச்சாயலுடன் தம்மால் உருவாக்கிவிட முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மணிரத்தினத்தின் ‘ஆயுத பூஜை‘க்குப் பின்னாடி ‘அமரோஸ் பெரோசு’ம், வேட்டையாடு விளையாடுவுக்குப் பின்னாடி ‘டீரெயில்டும்’ சங்கரின் ‘வெயிலு’க்குப் பின்னாடி ‘சினிமா பாரடைஸே’வும் இருக்கிறது என்கிற நிஜத்தைக் கூட நாணயமாகச் சொல்லாதவர்கள்தான் தமிழ் சூழலில் புதிய சினிமாவைப் படைப்பவர்கள் என அறியப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்னொரு மகத்தான சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாப் படைப்பாளிகள் தான் இப்படி என்றால், உலக சினிமா அல்லது அயல் சினிமா அல்லது இலத்தீனமெரிக்க சினிமா என எழுதும் பெத்தாம் பெரிய விமர்சகர்கள் அல்லது சினிமா வரலாற்றாசிரியர்கள் அல்லது வசனகர்த்தாக்கள் என அறியப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சாருநிவேதிதா போன்றவர்களின் போக்கு இதனை விடவும் கேவலமானதாகவும், போலித்தனம் மிகுந்ததாகவும், சினிமாச் சான்சுக்கு அலைகிற கூலிச்சிந்தனாவாதிகளின் நிலைமையிலும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தபாலனின் ‘வெயில்’ எனும் திரைப்படம் கேனஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றது குறித்த ஆரவாரங்களிருந்தும், தங்கர்பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படம் திரைப்படவிழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல் போன துயரத்திலிருந்தும் பிரச்சினையைப் பேசத்துவங்கலாம். முன்பாக, ‘வெயில்’ திரையிடப்பட்ட அதே ‘கேனஸ்’ திரைப்படவிழாவுக்கு மணிரத்தினத்தின் ‘குரு’ சஞ்சய்தத்தின் ‘ராகே முன்னா பாய்’ என இரண்டு வணிகத்தனமான இந்தியத் திரைப்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியா சார்பாக அங்கு திரையிடப்பட்டது என்பதனையும் சேர்த்து நாம் தெரிந்துகொள்வோம். மேலாக, வெயிலும், குருவும், ராகே முன்னாபாயும், கேனஸ் திரைப்படவிழா போட்டிப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திரையிடப்பட்ட திரைப்படங்கள் அல்ல என்பதனையும் தெரிந்துகொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டிப்பிரிவு அல்லாத, போட்டிக்கு வெளியிலான, அந்தந்த தேசிய அரசுகளின் அதிகாரபூர்வத் திரைப்பட அமைப்புகள் தேர்ந்தெடுத்துத் தரும் திரைப்படங்களிலிருந்து, கேனஸ் திரைப்படவிழாக் குழுவினால் வடிகட்டப்பட்ட படங்கள்தான் அங்கு திரையிடப்பட்டன. இங்கு தேசியத் தேர்வுக் கமிட்டியின் ரசனை, தேர்வுக் குழுவினரிடம் அதிகாரம் செலுத்தக் கூடிய நபர்களின் தகைமை போன்றனவும், படத்தேர்வு தொடர்பான விவாதங்களில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவ்வகையில் உன்னதமான இத்தாலியப் படமான ‘சினிமா பாரடைஸோ’வின் பாதிப்பில் உருவான ‘வெயில்’ படம் தொடர்பான ஆரவாரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்பது சொல்லாமலேயே விளங்கக் கூடியதாகும். அதே அளவில் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படம் அங்கே திரையிடப்படாமல் போனதும் அதிகம் கவலைப்பட்டுக்கொள்ளக் கூடிய விசயமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக, கலக அரசியல் அலையடித்த அறுபதுகளின் உலகத் திரைப்பட விழாக் கலாச்சாரத்தின் பின்னிருந்த கலை மதிப்பீடுகளும், உலகமயமாதலின் சந்தையென விரிந்திருக்கும் இன்றைய திரைப்பட விழாக் கலாச்சாரத்தின் பின்னிருக்கும் கலை மதிப்பீடுகளையும் ஒருவர் கறாராக வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேன், ரோட்டர்டாம், வெனிஸ் போன்ற அன்றைய மேற்கத்தியத் திரைப்பட விழாக்களில் கலக அரசியலை முன்னிறுத்திய கோஸ்டா காவ்ராஸ், ஜில்லோ பொன்டகார்வோ, ழான் ழுக் கோதார்த், பெலின்னி, ரெனுவார், கிளாபர் ரோச்சா, அகிரா குரஸோவா, செம்பேன் ஒஸ்மான், தோமஸ் கிதராஸ் அலியா, ஸத்யஜித்ரே, மிருணாள் சென், பெர்ட்டுலூஸி, அந்தோனியோனி, டிஸீகா, ஆந்த்ரே வாட்ஜா, தியோ ஆஞ்ஜல பெலோஸ், ரித்விக் கடக், கென் லோச் போன்றவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். சோசலிசம், தேசியம், இனவிடுதலை போன்ற பிரச்சினைகளையும் அதனது நெருக்கடிகளையும் இந்தப் படைப்பாளிகள் பேசினார்கள். சோசலிசத்தின் நெருக்கடி, மூன்றாமுலக சமூகங்களின் மனிதம் போன்றவற்றை எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வந்த படைப்பாளிகளான ஸாங் இமு, கியரோஸ்தாமி, கீஸ்லாவஸ்க்கி, நிஹ்லானி, ஸியாம்பெனிகல், கொப்பாலோ போன்றவர்கள் பேசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தைக் கலையாகவும், சமூகமாற்ற நடவடிக்கையின் கடப்பாடு கொண்ட தொழில்நுட்ப வடிவமாகவும் புரிந்துகொண்ட மகத்தான கலை ஆளுமைகள் இவர்கள். இவர்களின்றி தொண்ணூறுகளில் சிக்கலாகி வரும் மனித உறவுகள் குறித்தும், விளிம்பு நிலை மாந்தர்கள் குறித்தும் பேசிய சீரிய திரைப்பட இயக்குனர்களும் தோன்றினார்கள். நன்னி மொராட்டி, ஆட்டம் இகோயன், ஆலிவர் ஸ்டோன், வாங் கார் வாய், அல்மதோவர், ஜோன் காம்பியான், ஸ்கோர்ஸிஸே, வான் ட்ரையர் போன்ற படைப்பாளிகளும் தோன்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு திரைப்படைத்தைத் தீவிரமான கலையாகக் கொண்டாடியவர்கள் பெரும்பாலும் மேற்கத்தியக் கலைஞர்களாகவும், மூன்றாம் உலகின் கலைஞர்களாகவுமே இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலான படைப்பாளிகளை ஆகர்ஷித்த தனித்ததொரு கருத்தியலாக மார்க்சியமே திகழ்ந்தது. இத்தகையை கலைஞர்களில் அமெரிக்க சினிமாவைச் சேர்ந்தவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்கவர்களே என்பது பதியப்பட வேண்டிய மிகமுக்கியமான தரவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கத்திய சினிமாக் கலை ஆளுமைகளினதும், மூன்றாமுலகின் கலை ஆளுமைகளினதும் பாதிப்பு, அமெரிக்காவின் விரல்விட்டு எண்ணத்தக்க திரைப்பட இயக்குனர்களிடம், குறிப்பாக ஸ்பீல்பர்க் மற்றும் லுகாக்ஸின் மீது அகிரா குரஸோவா, ஸ்கோர்ஸிஸேயின் மீது தியோ ஆஞ்ஜலபெலோஸ் மற்றும் ரே, குவன்டின் டரோன்டினோவின் மீது கோதார்த் மற்றும் குரஸோவா போன்றவர்களின் பாதிப்பு இருக்கிறதேயல்லாது, அமெரிக்க சினிமாவின் பாதிப்பு என்பது அறுபதுகள் முதல் தொண்ணூறுகள் வரையிலான காலகட்டத்தில் மேற்கத்திய மற்றும் மூன்றாமுலகின் கலை ஆளுமைகள் மீது இருக்கவில்லை என்பது ஒரு வரலாற்று உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொண்ணூறுகளிலும், இருபத்தியோராம் ஆண்டின் ஆரம்பத்திலும், அமெரிக்க சினிமாவிலும் உலக சினிமாவிலும், வியாபாரமயமான இசை ஆல்பங்களிலும் ஒரு புதுவிதமான போக்கு தோன்றியது. அறுபதுகள் வரை தொண்ணூறுகள் வரையிலுமான கலக சினிமாவின் அரசியலோடும், படைப்பாளிகளின் வாழ்க்கைப் பார்வையோடும் இரண்டறக் கலந்த கதை சொல்லல் முறைகளை வெறுமனே கதை சொல்லும் உத்தியாக அல்லது தொழில்நுட்பத் தரவாக மட்டுமே புரிந்துகொண்ட தொழில்நுட்பத் தேர்ச்சி கொண்ட சினிமாக்காரர்கள் உருவானார்கள். இவர்களில் பெரும்பாலுமானவர்கள் அமெரிக்க சினிமாக்காரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘பல்ப் பிக்ஸன்’, ‘ரிசர்வயர் டாக்’, ‘கில்பில்’ போன்ற படங்களை உருவாக்கிய குவின்டன் டரான்டினோ இவர்களில் முக்கியமானவர். குரஸோவாவின் வாள் வீச்சின் லாவகத்தையும் வேகத்தையம், கோதார்த்தின் நேர்க்கோட்டுக் கதைசொல்லல் அல்லாத ‘நான் லீனியர்’ பாணியையும் தனது திரைக்கதை சொல்லலில் கச்சிதமாகப் பாவித்தவர் டிரான்டினோ. டிரான்டினோவின் கதை சொல்லலில் தவறும் விசயங்கள் இதுதான்: குரஸோவாவின் அறச்சீற்றம் இவரிடம் இல்லை. கோதார்த்தின் அரசியல் அந்நியமாதலும் கடப்பாடு கொள்தலும் இவரிடம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போலவே லார்ஸ் வான்டரையரின் ஹாலிவுட்டுக்கு எதிரான ‘டாக்மா திரைப்படக் கோட்பாடு’ - செயற்கையான செட்டுகள் தவிர்த்து, கையில் அலைவுரும் கமெராவுடன், ஒப்பனைகள் தவிர்த்த பாத்திரங்களைத் தொடரும் முறை - அமெரிக்கரான சோடர் பர்க்கிடம் அவரது ‘டிராபிக்’ படத்திலும், அமெரிக்க குற்றத் தொலைக் காட்சித் தொடரான ‘என்.வொய்.பி.டி’.யிலும் பாவனையாகிறது. புனைவுகளுக்கு அப்பால் நிஜங்களைத் தேடுவதற்காக ட்ரையர் தேரந்தெடுத்த கலகவடிவம், இப்போது புனைவுகளை நிஜம் போல முன்வைக்கும் வெற்றுத் தொழில்நுட்பமாக ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜமும், தனது அரசியல் கனவும் முயங்கப் பெற்ற மூன்றாவது யதார்த்தமாக, கலை யதார்த்தமாக, கலையின் இயங்கியல் பண்பாக, செர்ஜி ஐஸன்ஸ்டைன் முன்வைத்த ‘மோன்டேஜ்’ இன்று பரபரப்பையும், அலையும் பிம்பங்களை நுற்றுக்கணக்கில் அடுக்கி நமக்கு வேடிக்கை காட்டும் தொழில்நுட்பமாகவே எஞ்சி நிற்கிறது. ஹாலிவுட்டின் ‘ஸ்பீடு’ படத்திலிருந்து, இங்கிலாந்தின் ‘ஸ்பைஸ் கேர்ள்சி’ன் இசை ஆல்பங்கள் ஈராக, ‘கில்லி’ படம் வரையிலுமான படத்தொகுப்புகள் இப்படித்தான் நமக்கு கிச்சுக்கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வகையில்தான் கீஸ்லாவ்ஸ்க்கியின் ‘பிளைன்ட சான்ஸ்’ முன்வைக்கும் முக்கால உணர்வும், போலந்தின் அரசியல் சாத்தியங்களும் பற்றியதான தத்துவ நோக்கு, ‘ஸ்லைடிங் டோர’ எனும் ஆங்கிலப் படத்திலும், தமிழில் அதனை அடியொற்றி வந்த ‘12-பி’ படத்திலும் வெறும் தொழில்நுடபமாகச் சீரழிந்து விடுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் தற்போது உலகெங்கிலும் நடைபெற்று வரும் திரைப்பட விழாக்களிலும் எதிரொலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் இன்று நடைபெற்ற வரும் சில திரைப்பட விழாக்கள் முற்றிலும் வியாபார நோக்கத்திற்கானது. ஹாலிவுட் மற்றும் இந்தியக் கமர்சியல் சினிமாவை உலக அளவில் விற்பதற்கானது. இன்னும் சில திரைப்படவிழாக்கள் நாடுகளுக்கு இடையிலான அரசியல் மற்றும் பொருளியல் இலாபங்களை அடிப்படையாகக் கொண்டது. தமது நாட்டின் திரைப்படங்களுக்கு பிறிதொரு நாட்டில் சந்தையைத் தேடும் நோக்கம் கொண்டது. ஒரு நாட்டின் சார்பாகப் பிறிதொரு நாட்டில் அதிகாரபூர்வமாக நடத்தப் பெறும் இத்தகைய திரைப்படவிழாக்களில், விமர்சனபூர்வமான கலைஞர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவதில்லை. உதாரணமாகச் சென்னயில் நடைபெற்ற இலங்கைத் திரைப்பட விழாவில், அந்த நாட்டின் அற்புதமான திரைப்பட இயக்குனர்களான பிரசன்ன விதாநகே மற்றும் ஹந்தஹம போன்றவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை என்பதனை நாம் கவனம் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியக்கிழக்கு நாடுகளிலும், மேற்கத்திய நகரங்களிலும் அமெரிக்க நகரங்களிலும் நடைபெற்று வரும் அமிதாப்பச்சன் மற்றும் அட்லாப் முன்னின்று நடத்தும், இந்தியத் திரைப்படவிழாக்கள் முற்றிலும் வியாபாரத்திற்கானதேயொழிய இதில் தரம் என்பதோ, கலை என்பதோ சுத்தமாக இல்லை. இதே விதமாகத்தான் கேனஸ் திரைப்பட விழாவும் சமீப ஆண்டுகளில் அதிகமான அளவில் அமெரிக்கமயமாகி வருவது போலவே, ஓரு திறந்த சந்தைக்கான களமாகியும் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அறுபதுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களுக்கும், இன்றைய திரைப்பட விழாக்களுக்கும் இருக்கும் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்றுண்டு. அறுபதுகளில், திரைப்படத்தினை ஒரு கலையாகப் புரிந்து கொண்ட கடப்பாடு கொண்ட ஆளுமைகளின் கூடுமிடமாக திரைப்பட விழாக்கள் இருந்தன. இன்றைய திரைப்படவிழாக்கள், சமகாலத்தில் வெறும் சந்தையை நோக்கமாகக் கொண்டவர்களும், திரைப்படத்தினை வெறும் தொழில்நுட்பக் கொண்டாட்டமாகக் கொண்டவர்கள் கூடுமிடமாகவும், திரைப்படத்தினைக் கலையாகவும், கடப்பாடு கொண்ட சமூகமாற்ற வடிவமாகவும் கொண்டவர்கள் கூடுமிடமாகவும் இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் ஐஸ்வர்யா ராயும், குவின்டன் டரான்டினோவும், வான் ட்ரையரும் குழுமும் ஒரு இடமாக கேனஸ் ஆகி வருகிறது. இதே காரணம் கருதித்தான், கிளாபர் ரோச்சாவின் புரட்சிகரப்படம் திரையிடப்படும் அதே கேரளத் திரைப்பட விழாவில், கேளிக்கை நடிகர் விஜய்யின் ‘போக்கிரி’ படமும் திரையிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படவிழாக்கள், உலகத் திரைப்படங்கள் குறித்த வித்தியாசப்படுத்தல்கள் இல்லாமல், இன்று ஒருவர் உலக சினிமா, அயல் சினிமா, திரைப்பட விழாக்கள் போன்றவற்றை, ஒரு திரைப்படம் இவற்றோடு சம்பந்தப்பட்டிருப்பதே ஒரு தகுதி எனும் அளவில் பேசிக் கொண்டிருப்பது முற்றிலும் அபத்தமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக சினிமா என்று இன்று ஒருவர் பேசும் போது, அவர் பேசுவது எந்த வகையான உலக சினிமா என்பதைத் தெளிவு படுத்திவிட்டுப் பேச வேண்டும். இன்று நடைபெறும் திரைப்பட விழாக்களின் தன்மைகளும் வேறுபட்டிருக்கிறது. அதைப் போலவே உலக அளவில் இன்று வெளியாகும் திரைப்படங்களின் தன்மைகளும் வேறுபட்டிருக்கிறது. திரைப்படச் சந்தையை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள் இந்த வித்தியாசங்களை அழிக்க நினைக்கிறார்கள். இது ஒரு வகையான வர்க்கநீக்க, சாதிய நீக்க, கருத்தியல் நீக்க, நடுநிலையெனும் போர்வையில் வரும் ஆதிக்க சினிமாக் கருத்தியல் என்பதனை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா வரலாறு மற்றும் தமிழ் சினிமா விமர்சனம், பொதுவாகச் சினிமா அழகியல் குறித்தச் செயல்பாடுகளை, இடதுசாரிகள் எந்த அளவில் மேற்கொண்டு வந்தார்கள் என்று பதிவதும் இன்றைய தேவையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவிதமான முறையான கல்லூரிப் படிப்பும், வாழ்க்கை வசதிகளும், அரசுசார் பதவிகளும் அதிகாரமும் இல்லாத தோழர் அறந்தை நாராயணன்தான் தமிழ் சினிமாவின் கதையை எழுதிய முன்னோடி மனிதர். தமிழ் சினிமாவில் அழகியல்-அரசியல்-இசை-வரலாறு-இலக்கியம் போன்றன பெரும் இடத்தினைக் குறித்து மிக விரிவாக எழுதியவரும் அவர்தான். அவரிடம் கல்வித்துறை சார்ந்த முறையியல் இல்லை. ஆயினும், ஒரு நடவடிக்கையாளராக அவரிடம் தமிழ் சினிமாவை அணுகுவதற்கான வரலாற்று அணுகுமுறையும் மார்க்சியக் கருத்தியல் சார்பும் அவருக்கு இருந்தது. கட்சி சார்பு, அவரது கறாரான விமர்சன அணுகுமுறையைக் கலைத்துவிட முடியவில்லை. ஏவி.எம்.நிறுவனமும் இராம.நாரயாணனும இணைந்து ‘சிவப்புமல்லி’ படத்தினை வெளியிட்டபோது, அந்தப்படம் வியாபார நோக்கம் கொண்ட மசாலா சாகசப் படம் எனக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது செயல்பாடு என்பது தமிழ் சினிமா வரலாற்றைப் பதிவது என்பதோடு நின்றுவிடவில்லை. ஒரு விமர்சகராகவும் ஒரு சினிமாச் செயல்பாட்டாளராகவும் ‘கல்பனா’ எனும் சினிமா பத்திரிக்கையையும் மிகுந்த பொருட்சிரமத்திற்கு இடையில் அவர் நடத்தினார். பாலச்சந்தர் போன்ற அன்றைய ஜாம்பவான்கள் குறித்த மிகக் கடுமையான விமர்சனப் பார்வை கொண்ட கட்டுரைகளை ‘கல்பனா’ வெளியிட்டது. அவர் தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் மட்டுமல்ல. ஒரு மிகச்சிறந்த விமர்சகர். எல்லாவற்றையும் விட சினிமாவை அவலமான நிலைமையில் இருந்து மீட்பதற்காகச் சகல தளங்களிலும் போராடிய மனிதர் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா குறித்த புனைவு இலக்கியம் என்றால், நமது இலக்கிய மேதைகள் உதிர்க்கிற இரண்டு நாவல்களில் ஒன்று சுஜாதா எழுதிய ‘கனவுத் தொழிற்சாலை’, பிறிதொன்று அசோகமித்திரனின் ‘விழா’ எனும் குறுநாவல். அறந்தை நாரயாணன் சினிமா உலகின் விளிம்பு நிலையாளர்களான துணைநடிகையர் பற்றியும், நடிகையரின் குறுகிய கால நட்சத்திர வாழ்வு பற்றியதாகவும் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். சேறும் சகதியும் கவிச்சையும் சாராய நாற்றமும், போராடும் உணர்வும் கொண்ட சினிமாவின் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய அந்த நாவல்கள், ‘வாரந்தோறும் வயசாகிறது’ மற்றும் ‘ஜக்கா’ என்பனவாகும். இதில் ‘வாரந்தோறும் வயசாகிறது’ நாவல் நடிகை சாவித்திரியின் துயரவாழ்வு குறித்ததாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமனே வரலாறு எழுதியவனோ அல்லது விமர்சனம் எழுதித் திரிந்தவனோ அல்லது அவர்களது வாழ்வை வைத்து புனைந்து கொண்டு திரிந்தவனோ அல்ல அறந்தை நாரயணனன், துணைநடிகர் நடிகையரின் மற்றும் சினிமாவில் பல்வேறு துறை சார் தொழில்களில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கான உரிமை கேட்கும் அமைப்புகளையும் கட்டியவர் அறந்தை நாராயணன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அவருக்கு முன்னோடியாக இருந்தவர் இசைக்கலைஞன் எம்.பி.சீனிவாசன். ‘கூட்டிசை’யை ஒரு வெகுமக்கள் இயக்கமாக எடுத்துச் சென்ற கலைஞன்தான் எம்.பி.சீனிவாசன். இவர்கள் இருவரும் இந்தியக் கம்யூனிஸ்ட கட்சியில் செயல்பட்டவர்களாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக சினிமா குறித்தும், சினிமா அழகியல் குறித்தும் முன்னோடியாகத் தமிழில் கணிசமான சினிமாப் புத்தகங்களைப் பதிப்பித்தவர்கள் ‘சென்னை புக்ஸ்’ நிறுவனத்தினர் மற்றும் ‘சென்னை பிலிம் கிளப்’ அமைப்பினர். ஹரிஹரன், யூகி சேது, சிவக்குமார் போன்றவர்கள் இந்த அமைப்பில் பங்கு பெற்றார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு நிலையும் இவர்களுக்கு இருந்தது. ரித்விக் கடக்கிலிருந்து கோதார்த் வரையிலான இந்திய உலக சினிமா மேதைகளை இவர்கள்தான் தமிழக்குத் தந்தார்கள். பேல பெலாஸின் ‘சினிமா கோட்பாடு’ எனும் அதியற்புதமான நூலை இவர்கள்தான் தமிழுக்கு வழங்கினார்கள். ‘சலனம்’ எனும் காத்திரமான சினிமா பத்திரிக்கையையும் இவர்கள்தான் கொண்டு வந்தார்கள். உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா எனக் காத்திரமான விமர்சனக் கட்டுரைகள் இந்தச் சினிமா சஞ்சிகையில் வெளியாகின.&lt;br /&gt;&lt;br /&gt;ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’, யூகி சேதுவின் ‘கவிதைபாட நேரமில்லை’ ஹரிஹரனின் ‘ஏழாவது மனிதன்’ போன்ற திரைப்படங்கள் வெளியான காலமும் இதுதான். வர்க்கம், சூழலியல் அழிவு, வேலையின்மை, வன்முறை அரசியல், பெண்ணிய விழிப்புணர்வு போன்றவற்றைப் பேசிய படங்களாக இவைகள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்பாடு துவங்குகிறது ‘தாமரைச்செல்வி பதிப்பகம்’ மற்றும் ‘நிழல்’ போன்ற பதிப்பகங்களின் சினிமாப் புத்தக வெளியீடுகள். மக்களுக்கான சினிமா, அரசியல் சினிமா, ஆப்ரிக்க சினிமா, புகலிடத் தமிழ் சினிமா, ஈரானிய சினிமா, தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், ஆவணப்பட குறும்பட வரலாறு, ஜான் ஆப்ரஹாம் பற்றிய கலகக்காரனின் கதை, போதம்கின் திரைக்கதை என அதியுன்னதமான சினிமா நூல்களை ப.திருநாவுக்கரசு கொணர்ந்தார். காத்திரமான சினிமா சஞ்சிகையாக நிழல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கிறது. சினிமாவின் சகல அழகியல்-அரசியல் கூறுகள் குறித்தும் ‘நிழல்’ கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடதுசாரி மரபில் இன்னுமொரு பரிமாணம் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், கலை இலக்கியப் பெருமன்றமும் நிழல் அமைப்பும் இணைந்து குறும்பட விவரணப்படப் பட்டறையை தமிழகமெங்கும் நடத்தி வருவதாகும். இன்று அதிகம் பேசப்பட்டுவரும் தமிழ் மாற்றுச் சினிமா குறித்த செயல்போக்கில் இது ஒரு மாபெரும் பாய்ச்சலாகும். சாதிய, வர்க்க, பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிராக விளம்பு நிலையாளர்கள் கையில் இதன் மூலம் காமெரா வந்து அடைந்திருக்கிறது. இன்னும் இரு சஞ்சிகைகளை ‘காஞ்சனை’ சீனிவாசனும், விஸ்வாமித்திரனும் கொண்டு வருகிறார்கள். ‘காஞ்சனை ரீல்’ மற்றும் ‘செவ்வகம’ என்பன அந்த இரு சஞ்சிகைகள். காத்திரமான காலனிய எதிர்ப்பு மற்றும் மூன்றாமுலக எழுச்சிகர சினிமாக் கட்டுரைகளை இந்த இரண்டு இதழ்களும் வெளியிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனோடு ஒரு தனிநபராக, இந்திய உலக சினிமாக்கள் குறித்து சினிமா விமர்சனங்கள் மேற்கொள்வதோடு, சினிமாப் பட்டறைகளை நடத்தி வருவதோடு, தனது ‘கனவு’ இதழ் மூலம் கணிசமான தமிழ் சினிமா விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டவர் சுப்ரபாரதிமணியன். தங்கர்பச்சானின் ‘செம்புலம்’ பதிப்பகம் தமிழ் சினிமா இயக்குனர்கள் குறித்து மிக முக்கியமான நூலொன்றினைக் கொண்டுவந்திருக்கிறது. கோவையிலிருந்து நண்பர் விசுவநாதன் தனது பதிவுகள் பதிப்பகத்தின் மூலம், என்னுடைய ‘தமிழில் மாற்றுச் சினிமா’ என இரு தொகுதி நூல்களைக் கொண்டு வந்திருக்கிறார். இவ்வாறு உலக சினிமா குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் தமிழ் மொழியிலேயே இடதுசாரிகள் கணிசமான நூல்களைக் கொணடுவந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவன்றி இயக்குனர் ஸ்ரீதர், இயக்குனர் மகேந்திரன் போன்றவர்களும் தமது அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். அம்சன்குமாரின் ‘சினிமா ரசனை’ வெளியானபோது சினிமா அழகியல் குறித்த ஒரு முன்னோடி நூலாக அது இருந்தது. ஆக கல்வித்துறை சார் அதிகாரமும் வசதிகளும் கொண்ட எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ராஜன் குறை, வெங்கடேஷ் சக்கரவரத்தி, தியாடோர் பாஸ்கரன் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முன்பாகவே, உலக சினிமா குறித்தும் தமிழ் சினிமா குறித்தும், பிறர் தமிழ் மொழியில் நிறைய எழுதியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா விமர்சனச் சூழல் தனது அடிப்படையான தப்படியைக் கூட இன்னும் முன் வைக்கவில்லை. தமிழ் சினிமா விமர்சனம் மிக நேர்மையாக உருவாகாததற்கான பிரதான காரணங்கள் மூன்று. முதலாவதாக தமிழ் சினிமாவின் காத்திரமான விமர்சகர்கள் என அறிப்பட்டவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் சார்பாளர்கள். எம்.எஸ்.எஸ். பாண்டியன் மற்றும் வெங்கடேஷ் சக்கரவரத்தி என இவர்களைக் குறிப்பிடலாம். இரண்டாவதாக, எந்தவிதமான கருத்தியல் சார்பும் விமர்சனக் கோட்பாட்டுத் தேடலும் அற்ற வரலாற்றாசிரியர்கள். இவ்வகைக்கு உதாரணம் தியோடார் பாஸ்கரன் மற்றும் அ.ராமசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தியல் அடிப்படையில் பிராமணியத்தையும், இடதுசாரி வெறுப்புணர்வையும் கொண்ட அழகியல் விற்பன்னர்கள், நடந்து வந்திருக்கும் இடதுசாரி விமர்சனச் செயல்பாட்டை மறுப்பதற்காக இவர்களையே பிரதான சினிமா விமர்சகர்களாகத் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள். இடதுசாரிகள் மீதான வெறுப்பையும், தலித் பிராமணிய கூட்டமைப்பையும் வலியுறுத்தும் காலச்சுவடு பத்திரிக்கையின் ஆஸ்தான சினிமா விமர்சன ஆளுமைகள் இவர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாகப் பொது நீரோட்ட வியாபார சினிமாவுக்கு வசனமெழுதப் போக வேண்டும் எனும் தமது சொந்த ஆசைகளின் பொருட்டு, சினிமாவைப் பற்றிய அபத்தமான கருத்துக்களைத் தொடர்ந்து பேசிவரும் எழுத்தாளர்கள். எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்றவர்கள் இவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அல்லாமல், அழகியல் நோக்கில் தொடர்ந்து விமர்சனங்கள் அல்லது தகவல்கள் அல்லது மனத் தோய்வுகள் என எழுதிக் கொண்டிருப்பவர்கள் அம்ஷன்குமார், விட்டல்ராவ், சுப்ரபாரதி மணியன் போன்றவர்கள். இன்று சினிமா குறித்து எழுதிக் கொண்டிருப்பவர்களில் கடப்பாட்டு உணர்வுடன் எழுதிக் கொண்டிருப்பவர்கள் மூவர். காஞ்சனை சீனிவாசன், ப.திருநாவுக்கரசு மற்றும் விஸ்வாமித்திரன் போன்றவர்களே அவர்கள். இன்றும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் குறித்து மட்டுமே நான் அவதானித்திருக்கிறேன். இதுவன்றி கடந்த காலத்தில் சினிமாவைத் தீவிரமாக அணுகிய விமர்சகர்கள் என அறந்தை நாராயணன், பசுமைக்குமார், ரவீந்திரதாஸ் போன்றவர்களை என்னால் குறிப்பிட முடியும். நான் பிற்பாடாகக் குறிப்பிட்ட ஆறு பேரும் இடதுசாரிச் சார்புநிலை கொண்டவர்கள் என்பதனை இங்கு பதிய விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ் எஸ் பாண்டியனின் எம்.ஜி.ராமச்சந்திரன் குறித்த நூல், வரலாறும் தனிமனித ஆளுமையும் முயங்கும் இடத்தில் சினிமா நட்சத்திரம் எனும் ஆளுமைகள் தோன்றுகிறார்கள் எனும் இயங்கியல் அடிப்படையைத் தவறவிட்ட, எம்.ஜி.ராமச்சந்திரன் மீது வெறுப்புக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பார்வையாகத்தான் எஞ்சி நிற்கிறது. மணிரத்தினத்தின் திரைப்படங்களில் யதார்த்தம் குறித்துக் கேள்வியெழுப்பும் வெங்கடேஷ் சக்கரவரத்தி, கலைஞர் மு.கருணாநிதி உள்பட திராவிட இயக்கத்தினர் உருவாக்கிய திரைப்படங்களில் யதார்த்தம் பற்றிக் கேள்வியெழுப்பியது இல்லை. அதைப் போலவே பெண்வெறுப்பும் பெண்ணைப் பாலியல் பண்டமாகவும் ஆக்கிய திராவிட முன்னேற்றக் கழகப் படங்கள் பற்றியும் இவர்கள் கேள்வி எழுப்பியது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரானிய சினிமா தொடர்பான கட்டுரையில் யதார்த்தவாதத்தின் நெருக்கடி குறித்துத் தீவிரமாகப் பேசிய சக்கரவரத்தி, திராவிட இயக்கப் படங்களில் புனைவும் யதார்த்தமும் மனோரதியமும் பற்றிப் பேசியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தியோடர் பாஸ்கரன் எந்த விதமான விமர்சனக் கோட்பாட்டையும் முயன்று பார்த்தவர் இல்லை. படைப்பில் வடிவம், அழகியல் அமைதி போன்ற செவ்வியல் விமர்சன அளவுகோல்களையே அவர் இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு விமர்சகன் ஒரு படத்தின் கதையைத் திரும்பச் சொல்வதில் அவருக்கு மிகச் சலிப்பாக இருக்கிறது. திரைப்படம் எடுக்கப்பட்ட முறை பற்றித்தான் அவருக்கு அக்கறை. ஆனால் பிரதி குறித்த அதிபிரக்ஞையும், திரைச் சட்டகம் குறித்த குறியியல் வாசிப்பும் வந்த பிறகு, அரசியல் பிரக்ஞை கொண்ட ஒரு விமர்சகன், திரைப்பிரதி சொல்லாத பிறிதொரு கதையைத் தான் திரும்பவுமான கதை சொல்லில் சொல்ல வருகிறான் என்கிற தேடல்களுக்கு எல்லாம் அவர் போவதில்லை. வெறுமனே வரலாற்றுத் தகவல்கள் தருகிறவராக மட்டுமே அவர் எஞ்சி நிற்கிறார். அவரது அரசியல் பரிமாணமற்ற சூழலியல் கட்டுரைகளின் அதே சாயலில்தான் அவரது சினிமா தொடர்பான எழுத்துக்களும் அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அ.ராமசாமியின் எழுத்துக்கள் பேசப்படும் நபரைப் பொறுத்து, நபர் சார்ந்த பரிமாணத்தை எய்தும். சம்பந்தா சம்பந்தமில்லாமல் பெரியாரிய எதிர்ப்பை பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ திரைப்பிரதியில் காண்கிற அவர், அதே அணுகுமுறையை சுராவின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’யிலும், ஜெயமோகனின் ‘கொற்றவை’யிலும் காண்பதில்லை. அவரது கருத்தியல் மயக்கங்கள் எல்லாம் அப்போது சொல்லிக் கொள்ளாமல் நழுவிப் போய்விடும். பிரதி ஆய்வு எனும் பட்சத்தில் அதற்கேயான சிறப்பான வித்தியாசங்களுடன், ஒரே அடிப்படையில் திரைப்பிரதி இலக்கியப்பிரதி இரண்டினையும் பார்க்கவியலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அ.ராமசாமியிடம் அந்த அடிப்படைகளெல்லாம் செயல்படுவதில்லை. நீக்குப் போக்கான சொற்களில் விமர்சனங்களை மேற்கொள்கிற அ.ராமசாமியின் அணுகுமுறைக்கான மிகச்சரியான உதாரணம், மணிரத்தினத்தின் குரு படம் குறித்தான அவரது எழுத்துக்கள். ‘கருத்தியலைக் கலையாக்கும் படைப்பாளி’ என அவர் மணிரத்னத்தைக் குறிப்பிடுகிறார். மணிரத்தினத்திற்கு அரசியல் இருக்கிறது. கருத்தியல் இருக்கிறதா? கருத்தியல் அவரிடம் கலையாகிறதா? கருத்தியலைக் கலையாக்கும் படைப்பாளியாக அவர் இருக்கிறாரா? தலைப்பிலேயே எவ்வளவு அபத்தம் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமகாலத்தில் தமிழ் சினிமா குறித்து எழுதுகிறவர்களிலேயே மிக மிக ஆபத்தானவர்கள் என நான் கருதுவது எஸ்.ராமகிருஷ்ணனையும் சாரு நிவேதிதாவையும்தான். ஒரே சமயத்தில் இலத்தீனமெரிக்க இலக்கியம், போர்ஹே, மார்க்யூஸ், மிசல்பூக்கோ, ஒரான் பாமுக் என்று பேசிக் கொண்டிருக்கிற இவர்கள்தான், அதே நாவுடன் ரஜினியின் ‘பாபா’ பற்றியும், மணிரத்தினத்தின் ‘குரு’ பற்றியும், கௌதம் மேனனின் ‘வேட்டையாடு விளையாடு’ பற்றியும், ரஜினிகாந்த் பற்றியும், லிங்குசாமி பற்றியும் அதே பாராட்டுணர்வுடன் எழுதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘பாபா’வுக்கும் ‘சண்டக்கோழி’க்கும் வசனம் எழுதும் ஒருவர்தான் ரே பற்றியும், பெலின்னி பற்றியும் பேசுகிறார். பின்வரும் சினிமா விசிறி ஒருவர், ஸத்யஜித் ரேயும் பெலின்னியும், பாபா மாதிரியும் சண்டக் கோழி மாதிரியும்தான் படமெடுத்தார்கள் என நினைத்துவிடுகிற ஆபத்து இதில் உண்டு. ஏனெனில், ரஜினி ரசிகர் ஒருவர், எஸ்.ரா. வசனமெழுதிய ‘பாபா’ படத்தில் இருக்கிற வியாபார சமாச்சாரங்களை நீக்கிவிட்டால் ‘பாபா படம் இன்னொரு உபபாண்டவம் ஆகிவிடும்’ என எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாருநிவேதிதாவும் எஸ்.ராவும் ஒரு ‘பின்நவீனத்துவக் குழப்பத்தை’ தங்கள் தங்கள் வழியில் மேலும் குழப்புகிறார்கள். வெகுஜனக் கலாச்சாரத்திற்கும் உயர் கலாச்சாரத்திற்கும் இடையிலான இடைவெளி தகர்ந்து வருகிறது என அவதானிப்பது ஒரு பின்நவீனத்துவ நிலைபாடு. வெகுமக்கள் ஈடுபாடு காட்டுகிற வெகுஜனக் கலைகளின் பால் மரியாதையோடான அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம், வெகுமக்களோடு உரையாடுவதன் வழி அவர்களை அதி உயர்ந்த பிரக்ஞை நோக்கியும், செயல்பாடு நோக்கியும் உந்தமுடியும் என்கிற நம்பிக்கைதான், வெகுஜனக் கலைகளின் பாலான விமர்சகனது அக்கறைக்குக் காரணமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிராம்ஸி, இதனை மேலான்மைக்கு எதிரான பார்வை எனும் அரத்தத்தில், அனைத்து வெளிப்பாட்டு வடிவங்களின் மீதும், அந்தந்த நிலைமையிலேயே வைத்து அவதானித்து, விடுதலை நோக்கிய எதிர்நிலைபாட்டைத் தொடரவேண்டும் என்கிறார். ‘வெகுஜனக் கலைகளினூடே விமர்சனச் செயல்பாடு’ என்பதுதான், வெகுஜனக் கலைகளின்பால் புத்தியுள்ளவன் மேற்கொள்ள வேண்டிய நிலைபாடு.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக, வெகுஜனக் கலைகளை இருக்கிறவாறே கொண்டாடிக் கொண்டிருப்பதல்ல. பாபா பற்றிய அல்லது சண்டக்கோழி பற்றிய எஸ்ராவின் பார்வையும், குரு பற்றியதான அதன் பன்னாட்டு மூலதனப் பொருளியலுக்கு ஆதரவான பார்வையை மறுதளித்த, அதே வேளை படத்தில் முறைசாரா உறவைக் கண்டுபிடிக்கிற, சாருநிவேதிதாவின் பார்வையும், நிர்மூடத்தனமாக இருப்பதை அப்படியே விமர்சனமின்றி ஆராதிக்கும் பார்வையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாரு நிவேதிதாவின் பம்மாத்திற்கு இன்னொரு உதாரணம் அமீரின் பருத்திவீரன் படத்தை இலத்தினமெரிக்க புரட்சிகர இயக்குனர் சாஞ்சினோசின் படத்துடன் ஒப்பிட்டது. சாஞ்சினோஸ் மூன்றாவது சினிமாக் கோட்பாட்டாளர். தனது மக்கள்மீதான மேற்கத்திய மற்றும் அமெரிக்கர்களின் அத்துமீறல்களை ‘கான்டோர் ஆப் பிளட்’ எனப் படம் எடுத்தவர். வாழ்நாள் முழுக்க காலனியாதிக்கத்திற்கெதிராகவும், விளிம்புநிலை மலைவாழ் மக்களுக்கு ஆதரவாகவும் பேசியவர். அவர்களது கலைவாழ்வை வெகுநுட்பமாகப் பதிவு செய்தவர். சாருநிவேதிதா நேர்மையாகச் செய்ய வேண்டியதெல்லாம், சாஞ்சினோசின் எந்தப்படத்தின் எந்தக்காட்சி மாதிரி, பருத்தி வீரன் தன்னை ஆகர்சித்தது என்று விவரித்து எழுதியிருக்க வேண்டும். கொடுமையிலும் கொடுமை, சம்பந்தா சம்பந்தமில்லாமல் ‘ராம்’ என்று மிக மோசமாக ஒரு இந்துத்துவாப் படமெடுத்த அமீரை சாஞ்ஜினோசோடு ஒப்பிடுவதெல்லாம் அயோக்கியத்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ரா. தன்னுடைய சொந்த சினிமா ஆசைகளுக்காக அனைத்தையும் திரிக்கிறவர். அச்சு இதழில் வராத ஜான் பாபுராஜ் உடனான அவருடைய ஒரு இணைய நேர்முகம் (‘தமிழ்மணம்’ தொகுப்பில் தேடினால் கிடைக்கிறது) ஒன்று அவரது நகல் போலி சினிமாவைத் தெளிவாக முன்வைக்கிறது. எஸ்ரா சொல்கிறார்: என் வரையில் இரண்டே வகையான திரைப்படங்கள்தான் இருக்கின்றன. ஒன்று, பொழுதுபோக்கு திரைப்படங்கள் மற்றது கலைப்படங்கள். பொழுதுபோக்கு திரைப்படம் அதிகமும் பார்வையாளர்களோட விருப்பு வெறுப்பை முதன்மைப்படுத்தி உருவாக்கப்படுது. கலைப்படங்களுக்கு அந்த கட்டுப்பாடு இல்லை. கலைப்படங்கள் எப்போதுமே வாழ்வை ஆவணப்படுத்துற அரிய கலை முயற்சியில் ஈடுபடுகின்றன. தமிழில் அந்தமாதிரியான முயற்சிகள் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் தீவிர எழுத்தாளர்கள் பணியாற்றுவது உலகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வர்ற ஒரு செயல்தான். இலக்கிய ஆசான்களாக நாம் கொண்டாடுற வில்லியம் பாக்னர், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ், கார்லோஸ் புயண்டஸ், ஹெமிங்வே, வைக்கம் முகமது பஷீர், சதத் ஹசன் மண்டோ, யுகியோ மிஷிமானு பலர் அவங்க மொழியின் ஜனரஞ்சகமான படங்களில் பணிபுரிந்தவர்கள்தான். போர்ஹே மாதிரியான பின் நவீனத்துவத்தின் பிதாமகர் கூட சாகசப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்”.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே கண்ட மேற்கோளில் பல மயக்கங்களும் குழப்பமான சொல்லாட்சிகளும் இருக்கின்றன. கலைப்படம், பொழுது போக்குப்படம், ஜனரஞ்சகப் படம் என அவர் சொற்களை வீசுகிறார். பொதுவாக ‘சினிமா’வில் தீவிர எழுத்தாளர்கள் பங்கு பெறுகிறார்கள் என ஒரு பட்டியல் தருகிறார். அதே பாராவின் இரண்டாம் வாக்கியத்தில் ‘ஜனரஞ்சக சினிமா’வில் அவர்கள் பணிபுரிந்தவர்கள்தான் என்கிறார். ‘ஜனரஞ்சக சினிமா’ என்பதை அவர் பொழுதுபோக்குப் படங்கள்’ எனவும் சமப்படுத்துகிறார். பொழுது போக்குப் படம், கலைப்படம் என இருபிரிவுகள்தான் தன்னைப் பொறுத்து இருக்கிறது என்கிறார். கலைப்படங்கள்தான் வாழ்வை ஆவணப்படுத்துகின்றன என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இவர் ஏன் பொழுதுபோக்குப் படங்களில் செயல்படுகிறார்?: அவர் மறுபடியும் சொல்கிறார்: “ஆபாசமில்லாத, வக்கிரங்களைத் தூண்டாத, தரமான பொழுதுபோக்கினைத் தர உதவ முடியும். இன்னும் ஒரு படிமேலே போய் வாழ்க்கை யதார்த்தங்களை திரையில் பிரதிபலிக்கச் செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கமர்ஷியல் சினிமா வெகுமக்களோட கலை வடிவமாக இருப்பதால் அதைப் புறக்கணிப்பது ஒரு வகையில் வெகுமக்களை புரிந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாதிரிதான். இதைப் புரிஞ்சுகிட்டு செயல்பட்டால் கமர்ஷியல் சினிமா வழியாக மாற்றங்களை உருவாக்க முடியும்னுதான் தோணுது. அந்த வகையில் நான் எம்.டி. வாசுதேவன் நாயரையும், ராஜேந்தர்சிங் பேதியையும், பத்மராஜனையுமே எனது முன்னோடிகளாகக் கருதுகிறேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய இந்திய இயக்குனர்களது பெயர்களையும், உலக எழுத்தாளர்களது பெயர்களையும் உதிர்த்திருக்கிறார். நல்லது. தான் செயல்படும் ‘பாபா’, ‘ஆல்பம்’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் செயல்படுவதற்காக ஒரு பாதுகாப்பு வளையத்தை அவர் உருவாக்குகிறார் என்பது இதில் தெளிவாக நமக்குப் புலப்படுகிறது. அது அவர் தேர்வு. அவரே சொல்கிற மாதிரி: “இலக்கியவாதிகள் அரசு அலுவலகத்தில் வேலை செய்யலாம், பெட்டிக்கடை வச்சிருக்கலாம், புரோக்கர் தொழில் செய்யலாம், வட்டிக்கு விடலாம், வங்கியில் பணியாற்றலாம். அப்போதெல்லாம் அவங்க தனித்துவம் இழக்கிறதில்லை. சினிமாவுக்கு வந்தவுடன் மட்டும் தங்களோட தனித்துவத்தை இழந்துடறாங்கனு சொல்றீங்களா? இலக்கியவாதிகளை சுற்றி இப்படி பூசப்படும் புனிதங்களை நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை”.&lt;br /&gt;&lt;br /&gt;புரோக்கர் தொழில், வட்டிக்குவிடுதல் மாதிரி, சினிமாவுக்கு வருவதையும் இலக்கியவாதிகள் செய்யலாம் என்கிறார். அதுவும் நல்லது. அதுவும் அவரது தேர்வு. நம்முடைய பிரச்சினைலெல்லாம், அவர் தேர்ந்துகொண்ட ஒரு நிலைபாட்டுக்காக மிகச்சிறந்த ஆளுமைகளையெல்லாம் கொச்சைப்படுத்துகிறார் என்பதுதான். அவர்களது சினிமா பங்குபற்றலையும் கொச்சைப்படுத்துகிறார் என்பதுதான். முதலாவதாக பொழுபோக்கு சினிமா, ஜனரஞ்சக சினிமா, கமர்சியில் சினிமா, வெகுமக்களின் சினிமா என்பது அடிப்படையில் வேறு வேறான கருத்தாக்கங்கள். இவை அனைத்தையும் எஸ்ரா தனது நிலைபாட்டுக்காக ஒரே அர்த்தத்தில் பாவிக்கிறார். பொழுதுபோக்கு சினிமாவும் கமர்சியல் சினிமாவும் வேறு, ஜனரஞ்சக சினிமாவும் வெகுமக்கள் சினிமாவும் வேறு. பொழுதுபோக்கு சினிமாவும் கமர்சியல் சினிமாவும், சமதளத்தில் எந்த தீவிரமான அக்கறையும் அற்ற வெறுமனே பொருளியல் நோக்கத்திற்காகச் செய்யப்படுபவை. வால்ட்டர் பெஞ்ஜமின் சொல்கிற மாதிரி ‘இயந்திரகதியில்’ உருவாகிற ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் ‘தொழிற்சாலைப் பண்டங்கள்’ இவைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஜனரஞ்சகம் எனபதும் வெகுமக்கள் சினிமா என்பதும் வெகுமக்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்கள். வெகுமக்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்கள், அவர்களது அனுபவங்கள் மற்றும் நினைவுகளை (நன்மை-தீமை, மூடத்தனம்-எதிர்நலை) முன்வைப்பவைகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களால் விரும்பி உள்வாங்கப்படும். வெகுமக்கள் சினிமாவும் ஜனரஞ்சகப் படங்களும் கலைப்படங்களாகவும் இருக்க முடியும். பொருளியல் ரீதியில் வெற்றிபெற்ற படங்களாகவும் இருக்க முடியும். கறாராக ஒரு விஷயத்தை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ‘பொழது போக்குப்படங்கள்’ என்பது நிச்சயமாக மக்களின் விருப்பு வெறுப்பை முன்வைத்து உருவாக்கப்படுதில்லை மாறாக அவர்கள் மீது ‘இதுதான் ரசனை’ எனத் திணிக்கப்பபடுகிறது. பொழுதுபோக்குப் படம் தொடர்பான வெகுஜன ரசனையை யார் உருவாக்குகிறார்கள் என்பது இங்கு மிக முக்கியமான கேள்வியாக ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராவின் குழப்பம் எங்கு நிலை கொண்டிருக்கிறது? அவர் சினிமாவை இரண்டாக மட்டுமெ பிரப்பதில் கலைப்படம், பொழுது போக்குப்படம், எனப் பிரிப்பதில் நிலைகொண்டிருக்கிறது. நன்மை- தீமை, அடிமைத்தனம்-விடுதலை, சமரசம்-எதிரப்பு, போன்ற மனித அறம் சார்ந்து திரைப்படங்களை பிரிக்க வேணடிய யுகத்தில் நாம் இருக்கிறோம். கலை வாழ்வைப் பற்றியது என்பதால், சமவேளையில் ஒரு வலதுசாரிக் கலைஞனும் இடதுசாரிக் கலைஞனும் வாழ்வை உக்கிரமாக ஆவணப்படுத்த முடியும். அதைப்போலவே, வெகுமக்கள் படம் என்பதனையும் சரி, பொழுது போக்குப் படம் என்பதனையும் சரி, நாம் நன்மை ௲தீமை எனும் அறத்தின் அடிப்படையில் பிரித்துப் பாரக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை கொஞ்சம் சிக்கலானதுதான். கலை எனும் அளவில் திரைப்படத்தில் செர்ஜி ஐஸன்ஸ்டைனது ‘போர்க்கப்பல் போதம்கின்’ எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதே அளவு பாசிசக் கலைஞரான லெனி ரீப்செந்தாலினது ‘பரேடு’ படமும் முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டும் வேறு வேறு வகைகளில் வாழ்வை ஆழமாகச் சென்று பார்த்திருக்கிறது. இரண்டும் கலை ஆவணங்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால், ஒன்று தீமையின் கலை. மற்றது அதற்கு எதிரான விடுதலையின் கலை. இதைப்போலவே தான் அது கமரிசியல் ஆனாலும், பொழுதுபோக்கு ஆனாலும் வெகுமக்கள் சினிமா ஆனாலும், அவற்றிலும் பல்வேறு நிலைகளில், நன்மை- தீமை மற்றும் அடிமைத்தனம்-விடுதலை என செய்திகளை வெளியிடும் படைப்புகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவையும் சரி, பொதுவாகப் பல்வேறு படைப்பு நிலைகளையும் சரி, கலைப் படைப்புக்கள் பொழுது போக்குப் படைப்புகள் என வரையறை செய்த காலம் அநேகமாக முடிவுக்கு வந்துவிட்டது. சினிமா வரலாற்றை நாம் எடுத்துக் கொண்டால், கலை சார்ந்தவை வாழ்வுக்கு நெருக்கமாக இருக்கிறது என்பது ஒரு காலகட்டம் வரை உண்மைதான். கலைஞர்கள் அன்று அறம் குறித்துப் பேசுகிறவர்களாகவும், பிரபஞ்ச மதிப்பீடுகளை முன்வைப்பவர்களாகவும், மனித உரிமைகள் குறித்தப் பேசுபவர்களாகவும் இருந்தார்கள். இவர்களது திரைப்படங்கள் ஆன்ம தரிசனத்தடன் கடப்பாட்டுணர்வுடன் இருந்தன. இந்தக் காரணத்தினால் இவர்கள் எடுத்த திரைப்படங்கள் தீமைக்கு எதிராகவும் வாழ்வுக்கு அருகிலும் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இன்று பாசிசக் கலையும் இருக்கிறது விடுதலைக் கலையும் இருக்கிறது. வலதுசாரிகளின் கலையும் இருக்கிறது. இடதுசாரிகளின் கலையும் இருக்கிறது. அது போலவே, சகலவிதமான பொழுதுபோக்கு வடிவங்களிலும் வலதுசாரிப் பொழுது போக்கும் இருக்கிறது இடதுசாரிப் பொழது போக்கும் இருக்கிறது. பொருளியல் ரீதியில் வெற்றிப் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்குப் படங்கள் அல்லது கமர்சியல் படங்கள் அல்லது வாழ்வை விட்டு விலகிய படங்கள் எனச் சொல்ல முடியாது. கிரேக்க மார்க்சிஸ்ட் இயக்குனர் தியோ ஆஞ்ஜல பெலோஸின் ‘தி டிராவலிங் பிளேயர்ஸ்’ திரைப்படம், கிரீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்ற, வசூலை அள்ளிக்குவித்த படம். அதி அற்புதமான கலைப்படைப்பாக அது இருக்கிறது. நிஹ்லானியின் ‘1084 ஆம் எண்ணின் அன்னை’யிலிருந்து அவரது பெரும்பாலுமான படங்கள் பொருளாதார ரீதியில் வெற்றி ஈட்டிய படங்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலாக, குரஸோவாவின் ‘செவன் ஸமுராயை’ எந்த வகையில் நாம் வைக்க முடியும்? கலைப்படம் என்றா கமர்சியல் படம் என்றா? சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை நாம் எங்கு வைப்பது? அது கலைப்படமா அல்லது கமர்சியல் படமா? தங்கர்பச்சானின் ‘அழகி’யை எங்கு வைப்பது? கலை மற்றும் கமர்சியல் என்று நிர்ணயிப்பது என்பது அபத்தமாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நல்ல படங்கள் அல்லது கெட்ட படங்கள் என்ற இரு பிரிவுகள்தான் உண்டு. வாழ்வின் அடிப்படையிலும் அறத்தின் அடிப்படையிலும்தான் இன்று படங்களைப் பிரிவினை செய்ய வேண்டுமேயொழிய, வெறும் கலை அனுபவம் எனும் வழியில் மட்டும் பிரிவினை செய்வது ஒரு வகையில் அப்பட்டமான மோசடிப் பார்வையாகவே இருக்கும். ஆதிக்கமும் விடுதலையும் குறித்த அவதானங்களை இல்லாததாக்குவதாகவே இந்நிலைபாடு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலாக, எஸ்ரா பட்டியலிடுகிற எழுத்தாளர்கள் மார்க்வசிலிருந்து போர்ஹே வரை எந்தக் காலத்தில் என்ன மாதிரியான ஜனரஞ்சகப் படங்களை அல்லது பொழுது போக்குப் படங்களை சாகசப் படங்களை எடுத்தார்கள் என்பதையும் அவர் நாணயமாக நிறுவிக் காட்ட வேண்டும். மார்க்வஸின் கதைகளை அடிப்படையாக் கொண்ட படங்கள், ‘எரிந்திரா’விலிருந்து ‘எ குரோனிக்கல் ஆப் டெத் போர் டோல்டு’ வரை, அவரது அனைத்துப் படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எஸ்.ரா சொல்கிற மாதிரியான கமர்சியல் படங்கள் அல்ல அவை. இலத்தீனமெரிக்க தொலைக்காட்சிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட ‘லோ பட்ஜெட்’ படங்கள்் அவை. ரஜினிகாந்தின் படங்களும் விஜயின் படங்களும் சாகசப் படங்களாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு சூழலில், போர்ஹே பற்றி சாசகப்படம் எடுத்தார் என, எஸ்.ரா இப்படிப் பேசுவது படு அபத்தமும் மோசடித்தனமானதுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துக்கும் மேலாக, எஸ்.ரா ஆதாரமாகக் காட்டுகிற எந்தப் படைப்பாளியும் எழுத்தாளனும் இயக்கிய அல்லது பங்கு பெற்ற படங்களில் ஒன்று போலாவது இதுவரை எஸ்ரா வசனம் எழுதிய படங்கள் இல்லை. அளவுக்குத் தைக்கிற தையற்காரனின் நிலைதான் வசனங்களை எழுதுகிற எஸ்.ராவின் அல்லது ஜெயமோகனின் நிலையாக இருக்கிறது. இந்நிலையில் தனது கமர்சியில் சினிமா நிலைபாட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் அவர் இவ்வாறு கொச்சைப்படுத்துவது கொஞ்சம் அதிகம்தான் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச அளவில் நமது சினிமா செல்லாததற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு எஸ்.ரா பதில் சொல்கிறார் பாருங்கள்: “இதுவரை உலக சினிமாங்கிறது திரைப்பட சங்கங்களுக்கு மட்டும்தான் அறிமுகமாகியிருந்தது. தமிழின் முக்கிய இயக்குனர்களில் பலர் உலக சினிமா பரிட்சயம் இல்லாமதான் இருந்திருக்காங்க. அத்தோடு சினிமாங்கிறது ஒரு வணிகம் என்கிற அளவில் மட்டுமே இங்க பிராதனப்படுத்தப்பட்டிருக்கு. அதுக்கு வெளியே உள்ள திரைப்பட விழாக்கள் பற்றியோ, வெளிநாட்டு விநியோகம் பற்றியோ நாம் அதிகம் யோசிக்கலை. ஒரு வருஷம் வெளியாகிற தமிழ்படங்களில் ஒன்று ரெண்டு கூட வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கேற்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் சர்வதேச சினிமாவுக்கு கொண்டு செல்வதற்கான உந்துதலும் பொருளாதார உதவிகளும் கிடைக்கிறதில்லை. டி.வி.டி. வந்தபிறகு இப்போதுதான் உலக சினிமா பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருக்கு. இவ்வளவு ஏன், உலகப்பட விழாக்கள் நடத்தப்படுவதே சென்ற இரண்டு வருஷமாகத் தான் நடக்கிறது. திரைப்படத்துறை குறித்த முறையான கல்வி நிலையங்கள், ஆய்வுகள், பயிலரங்கங்கள், தீவிரமான திரைப்பட இதழ்கள் இல்லாததும் குறையென்றே சொல்வேன். தமிழில் ஆயிரக்கணக்கில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கு. ஆனால், அதற்கென்று தனியான ஆவணக் காப்பகம் கிடையாது. முதலில் அதையாவது செய்ய நாம் முயற்சி எடுக்கணும்.”&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ரா வேற்றுக் கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற மாதிரி இங்கு பேசுகிறார். உலக சினிமாக்கள் என்று எதை எஸ்.ரா சொல்கிறார். ஈரானியப் படம் என்பது தெருக்களில் ஓடுவதை அப்படியே படமெடுப்பது என்று தான் தமிழ் சினிமா இயக்குனர் புரிந்திருக்கிறார். கானாப் பாட்டு போட்டுவிட்டால் அது விளம்புநிலை மக்கள் படம் என இன்னொரு இயக்குனர் நினைக்கிறார். உலக சினிமா என்றால் அதில் ஹாலிவுட் சினிமா, ஐரோப்பிய சினிமா, மூன்றாமுலக சினிமா என நிறைய வகையினங்கள் இருக்கிறது. இந்தப் படங்களில் எதனது பாதிப்பில் எந்த இயக்குனர் உருப்படியாக ஒரு யதார்த்தமான படம் கொடுத்திருக்கிறார்? எஸ்.ரா. செய்து கொண்டிருக்கிற இன்னுமொரு மிகப்பெரிய மோசடி இதுதான். இங்கு சினிமா இதழ்கள் இல்லை என்கிறார். பட்டறைகள் இல்லை என்கிறார். ஆய்வுகள் இல்லை என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைப்பொய்கள். இவரும் சரி, தியோடார் பாஸ்கரனும் சரி, தங்களுக்கு வெளியில் எதுவும் நிகழவில்லை என்பதை ஸ்தாபித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். தீவிரமான சினிமா நூல்களென தமிழில் நூற்றுக்கும் மேலான நூல்கள் இருக்கின்றன. திரைப்பட இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று பெரும்பாலுமான கல்லூரிகளில் திரைப்படம் ஒரு துறையாக இருக்கிறது. திரைப்படத்திற்கென தனியார் கல்லூரிகளும் தோன்றியிருக்கிறது. இடதுசாரிகளால் திரைப்படப் பட்டறைகள் தமிழகத்தின் ஊர்தோறும் நடத்தப்படுகிறது. 3000 தமிழ் குறும்படங்கள் விவரணப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் எதுவுமே நடைபெறாத மாதிரியான ஒரு பாவலாவை எஸ்.ராவும் தியோடார் பாஸ்கரனும் முன்வைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இவ்வாறு முன்வைப்பதற்கான காரணம்தான் என்ன? இவர்களது பிரதான நீரோட்ட அல்லது அதிகார மைய அல்லது கல்வித்துறைசார் மட்டங்களுக்கு வெளியில் இந்த முயற்சிகளும் செயல்பாடுகளும் நடந்து வருகிறன. இந்த நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் மேலேடுத்துச் செல்பவர்கள் விளம்புநிலையாளர்கள், இடதுசாரிகள் மற்றும் தலித்துகள். இந்தக் காரணங்களால்தான் இவர்கள், இவ்வாறான ஒரு போக்கு மிக வேகமாக வளர்ந்து வருவதை பரந்துபட்ட தங்கள் மட்டத்தில் முன்வைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச திரைப்பட விழாக்கள் குறித்த விழிப்புணர்வு தமிழில் உருவாகி வருவதாக சொன்னீர்கள். அதற்கான உதாரணம் ஏதேனும் சொல்ல முடியுமா? எனும் கேள்விக்கு அவர் பதில் சொல்கிறார்: “போன வருஷம் மணிரத்னம், பாலா, பாலாஜி சக்திவேல், அமீர் என்று தமிழின் முக்கிய இயக்குனர்களோட படங்கள் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்றிருக்கு. தற்போது ஹிந்தி படங்களுக்கு உலக அளவிலான ஒரு சந்தை உருவாகியிருக்கு. அதுவெறும் வணிகரீதியான சந்தை மட்டுமல்ல. திரைப்பட தயாரிப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரை அதனால் எவ்வளவோ சாதிக்க முடியும். அதேமாதிரி ஒரு நிலை தமிழ் சினிமாவில் உருவாக தனிநபர்களைவிட மொத்த திரைப்படத் துறையும் துணை நிற்கவேண்டிய அவசியமிருக்கிறது.”&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய திரைப்பட விழாக்களின் தகைமை பற்றி ஏற்கனவே நிறையச் சொல்லிவிட்டோம். உலக சினிமாவின் மேதைகள் என்று சொல்லப்படுபவர்கள் யதார்த்தவாத சினிமாவை வழங்கிய மேதைகள்தான். தீமைக்கு எதிரான விடுதலை நோக்கிய உலகைப் படைத்தவர்கள் தான் அவர்கள். வாழ்வுக்கு அருகில் திரைப்படத்தை எடுத்துச் சென்றவர்கள் அவர்கள். இவர்கள் படங்களோடு எஸ்.ரா குறிப்பிடுகிறவர்களின் படங்களை ஒப்பிட முடியாது. இன்னும் ஜெயகாந்தன், ருத்ரய்யா, ஹரிஹரன், மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்களின் தளங்களைக் கூட, எஸ்.ரா குறிப்பிடுபவர்களின் படங்கள் தாண்டவில்லை. ஒரு வகையிலான மனோரதியமான படங்கள்தான் இவை. யதார்த்தத்தின் கூறுகள் இப்படங்களில் இருக்கின்றன. அதற்காக இவைகள் உலகத்தரமான படங்கள் எனச் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திப் படங்களுக்கு உருவாகியிருக்கும் சந்தை இரண்டு வகையிலானது. புலம் பெயர்ந்த இந்தியர்களைக் கதாபாத்திரமாகக் கொண்டு, புலம்பெயர்நாடுகளில் வாழ்கிற இந்தியர்களையும் அவர்களது பொருளாதாரத்தையும் இலக்கு வைத்துக்கொண்ட ஒரு வகைப்படங்கள் தற்போது உருவாகி வருகின்றன. அமு முதல் ஸ்வதேஸ், லகான் முதலிய படங்களோடு, நாகேஸ் குக்குனூர், ராம் கோபால்வர்மாவின் ‘நிசப்த்’ உள்பட்ட படங்கள் இந்த மாதிரிப் படங்கள்தான். பிறிதொரு வகையிலான இந்திப் படங்களின் ஏற்றுமதியை அம்பானியின் ‘அட்லாப்’பும் அமிதமாப்பச்சனும் செய்கிறார்கள். முற்றிலும் வியாபார நோக்கங்கள் கொண்ட, எந்தவிதமான கலை நோக்கங்களும் அற்றது இவர்களது திரைப்பட விழாக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலாக, எஸ்.ரா. உலக சினிமா என ஒரு நூல் கொண்டு வந்திருக்கிறார். நூலின் முகப்பில் தனது பெயரைப் போட்டுக் கொண்டிருக்கிறார். இது ஒரு பதிப்புத்துறை மோசடி என்றே சொல்ல வேண்டும். பல்வேறு நபர்களின் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் பங்களிப்புகளும் கொண்ட தொகுப்பு நூல் அது. பெரும்பாலும் அவர் இணையத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அந்த நூல் எஸ்.ரா. எனும் தனிப்பட்ட ஆளுமையின் நூல் அல்ல. அவர் தொகுப்பாளராக இருந்திருக்கிற ஒரு நூல். அந்தத் தகுதி மட்டுமே அவருக்கு உண்டு. மாறாக, அவர் உலக சினிமா பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிற மாதிரியான ஒரு தோற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறார். இது ஒரு மிக மோசமான முன்னதாரணம் என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா விமர்சனம் என்பது தியோடார் பாஸ்கரனைப் பொறுத்த அளவில் இன்னும் ஐம்பதுகளிலேயே இருக்கிறது. சினிமா என்பது இன்று ஐரோப்பிய ஹாலிவுட் சினிமா மட்டுமல்ல, மூன்றாமுலகிலிருந்து அற்புதமான திரைப்படங்களை உன்னதமான இயக்குனர்கள் கொடுத்து வருகிறார்கள். நிலவிய திரைப்படக் கோட்பாடுகளை அவர்கள் தலைகீழாகக் கவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலாக தியோடார் பாஸ்கரன், தான் ஒரு விமர்சகர் அல்ல என்பதையும் அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு விமர்சகனுக்கு இன்று கருத்தியல் தேர்வும் அரசியல் கடப்பாடும், தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரு முறையியலும் வேண்டும். ‘எமர்ஜென்ஸி’ என்ற வார்த்தையைக் கேட்டே கிலி கொண்ட தியோடார் பாஸ்கரன் போன்றவர்கள் விமர்சனம் பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதுதான் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ஸன்குமார் ‘தமிழில் மாற்றுச் சினிமா: நம்பிக்கைளும் பிரமைகளும்’ எனும் எனது நூலுக்கு ‘நிழலில்’ மதிப்புரை எழுதியவர். தியோடர் பாஸ்கரன் என்னுடைய மணிரத்தினத்தின் சினிமா நாலுக்கு ‘இந்தியா டுடேயில்’ மதிப்புரை எழுதியவர். ஏறக்குறைய 500 பக்கங்கள் தமிழ் சினிமா பற்றிய கட்டுரைகள் கொண்ட, ஐம்பதாண்டு கால தமிழ்சினிமா குறித்த இரு நூல்களை இருவரும்தான் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். அவரும் பங்கு கொள்ளும் தியோடார் பாஸ்கரனுடனான ‘காலச்சுவடு’ நேர்முகத்தின் கேள்வி பதில் கீழ்வருமாறு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: உலக சினிமா குறித்துத் தமிழில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகம்கூட வரவில்லை. இது குறித்து நீங்கள் எந்த அளவு யோசித்திருக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தியோடர்: தமிழ் சினிமாவைக் குறித்துப் பேசுவதற்கான கலைச் சொற்களே இங்கு இல்லையே. ஒரு துறை சார்ந்து ஆழமான பரிசீலனைகள் நிகழ வேண்டுமானால் அதற்கான வளமான சொல்லாடல்கள் அந்த மொழியில் இருக்க வேண்டும். இலக்கியம் குறித்து நடந்துவரும் விவாதங்களிலிருந்து உருப்பெற்றிருக்கும் சொற்கள்தாம் அது குறித்த ஆழமான விவாதங்களுக்குப் பாதை அமைத்துக்கொடுத்திருக்கின்றன. தமிழ் சினிமா குறித்துப் பேசுபவர்கள் கதை, பாட்டு என்று மிக மேலோட்டமான விஷயங்களுடன் தேங்கிவிடுகிறார்கள். தமிழ் சினிமா குறித்து விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்னும் மனோபாவம் அறிவுத் துறையினரிடம் இருக்கிறது. ஆழமான விவாதங்களை உருவாக்காமல் செறிவான சொல்லாடல்களை உருவாக்க முடியாது. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா பற்றிப் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. முக்கியமான ஆங்கில நூல் ஒன்று சிட்னியில் இலங்கைத் தமிழர் வேலாயுதத்தைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு உருவாகிக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற ரௌட்லெட்ஜ் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். இதில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி, ராஜன் குறை போன்ற ஆய்வாளர்கள் இடம்பெறுகிறார்கள். வாஷிங்டனில் சினிமா போதிக்கும் லலிதா கோபாலன் இந்திய சினிமா பற்றி 24 Frames என்ற நூலைத் தொகுத்திருக்கிறார். 24 இயல்கள் கொண்ட இந்த நூலில் மூன்று இயல்கள் தமிழ் சினிமா பற்றியன.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு இயல் எழுதியுள்ளார். தமிழ் சினிமா பற்றிய நூல்கள் தமிழில் குறைவுதான். அறந்தை நாராயணன், புலவர் கோவிந்தன் இவர்களுடைய நூல்கள் முக்கியமானவை. இங்கு தமிழில் ஒரு சொல்லாடலே உருவாகவில்லை. அதற்கு அடிப்படையான கலைச்சொற்களும் உருவாக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, develop (the film) என்ற சொல்லுக்கு என்ன தமிழ்ச் சொல்? அரசு விளம்பரங்களில் 'பதனிடுதல்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தோலைத்தான் பதனிடுவார்கள். பழைய பத்திரிகைகளில், நிழற்படம் பற்றிய கட்டுரைகளில் 'உருத்துலக்கல்' என்கிறார்கள். பொருத்தமான சொல்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சொல்வளம் மிகுந்த மொழி. ஆகவே நாம் துறைச் சொற்களை உருவாக்க முடியும். ஆங்கில மொழியில் இந்தப் பிரச்சினையை, பிரெஞ்சு சொற்களை அப்படியே பயன்படுத்திச் சமாளித்தார்கள், Montage, mise en scene, film noir, cinema verite என. ஏன் பிரெஞ்சு மொழி? சினிமா பிறந்த பிரான்ஸில் தொடக்கத்திலேயே சினிமா ஒரு கலை வடிவமாகப் படித்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது குறித்த துறைச் சொற்கள் உருவாயின. சீரிய சொல்லாடல் மௌன சகாப்தத்திலேயே உருவானது. வரலாற்றில் இடம்பெற்ற Abel Gance, Napoleon (1927) போன்ற படங்கள் மவுனப் படங்கள் தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் சினிமா பற்றிய கலைச் சொற்கள், சினிமா சார்ந்த கருதுகோள்களைக் குறிக்கும் சொற்றொடர்கள் இல்லாதது இதைப் பற்றிய சீரிய சொல்லாடல் உருவாகாததற்கும் நூல்கள் வெளிவராததற்கும் முக்கியக் காரணம். சில பத்திரிகைகளில் சினிமா பற்றிய கட்டுரைகள் இப்போது வர ஆரம்பித்துள்ளது நல்ல அறிகுறி. ஆயினும் துறைச் சொற்கள் புழக்கத்தில் வராதது பெரும் குறை. துறைச் சொற்கள் இல்லாமல் அதைப் பற்றிப் பேசுவது ஆகாயத்தோடு சிலம்பமாடுவது போன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா பற்றிப் பல M.phil., Ph.D., ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 'திரைப்பாடல்களில் ஜாதி', 'தமிழ் சினிமாவில் பெண்ணியம்' என. இவைகளைப் படித்தீர்களேயானால் அவை இலக்கிய ஆய்வுகள் என்பது புலப்படும். அவற்றில் சினிமா ஒரு துளியும் இருக்காது. இந்த ஆய்வுகளும் தமிழ்த் துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பாட்டுப் புத்தகத்தையும் வசனத்தையும் வைத்துச் செய்யப்படும் ஆய்வுகள் இவை.”&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகமும் வரவில்லை என்கிறார்கள் கேள்வியாளர்கள். தமிழ் சினிமா பற்றி முதலில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதிய தியோடார் பாஸ்கரன் பதில் என்ன? எம்.எஸ்.பாண்டியன், ராஜன்குறை, வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்றோர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவினரால் தொகுத்து ‘ரூட்லெஜ்’ பதிப்பகம் வெளியிடும் புத்தகம் என அழுத்தம் கொடுத்துப் பேசுகிறார். ஓன்று அவர் எழுதியிருக்கிறார் மற்றது ஆங்கிலத்தில் வரவிருக்கிறது. போனால் போகிறது என்று அறந்தை நாராயணனுக்கு ஒரு சான்றிதழ் தருகிறார். பா.திருநாவுக்கரசு, விட்டல்ராவ், செம்புலம் தங்கர்பச்சான், யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதியிருப்பதெல்லாம் என்ன? புண்ணாக்கு பற்றிய கணக்கு வழக்குகள் என அம்ஸன்குமாரும் தியோடார் பாஸ்கரனும் கருதினார்கள் போலும். அரசுப் பதவியில் இருந்தவர்களும் பல்கலைக்கழகங்களும் வெளியிட்டால்தான் அது ஆவணங்கள் ஆகும் போலும். இது ஒரு வரலாற்று மோசடி என்பதைப் பணிவுடன் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா ஆய்வுகள் பற்றி நக்கல் பண்ணுவதற்காக பாஸ்கரன் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புக்களைப் பாருங்கள். “திரைப்பாடல்களில் ஜாதி”, “தமிழ் சினிமாவில் பெண்ணியம்” என இவைகளைப் படித்தீர்களேயானால் அவை இலக்கிய ஆய்வுகள் என்பது புலப்படும். அவற்றில் சினிமா ஒரு துளியும் இருக்காது” என்கிறார் பாஸ்கரன். சரி. இப்போது பெண்ணியம் குறித்தும் சாதியம் குறித்தும் விவரணப்படங்களும் குறும்படங்களும் ஆயிரக்கணக்கில் தமிழில் உருவாகியிருக்கிறது. அது பற்றி தியோடார் பாஸ்கரனோ அல்லது எஸ்.ராமகிருண்ணனோ ஏன் மூச்சக்காட்டுவதில்லை? இவர்களைத் தாண்டிய ஒரு சினிமாவும், சினிமா விமர்சனமும், வரலாறு எழுதுதலும் தமிழில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பதிய வேண்டும் எனும் கோபம் காரணமாகவே சொற்களும் கோபமாக வந்து விழவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் என்று சொல்வதே ஏதோ கட்சி அரசியல் போலவும், கருத்தியல் என்று சொன்னால் ஏதோ நிலவிய ஸ்டாலினிய வகைப்பட்ட சோசலிசம் போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு, நாம் முன்வைக்கிற ‘அரசியலையும் கருத்தியலையும்’ உள்வாங்குவது கொஞ்சம் கடினம்தான். நாம் பேசுகிற அரசியல் ழுருடபூவ டேநு¢கூறுணநுளூடபூ-தீமைக்கு எதிரானது குறித்த அரசியல். விமர்சன மார்க்சிய அரசியல். நாம் பேசுகிற கருத்தியல் அறம் சார்ந்த கருத்தியல். தெரிதா பேசும் எதிர்கால அறம் சார்ந்த கருத்தியல். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போரில் நாம் தீமைக்கு எதிராக நிற்கிறோம். அறத்திற்கும் துவேசத்திற்கும் இடையில் நாம் அறத்தின் பக்கம் நிற்கிறோம். .&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாகச் சொல்வதானால், அதிகாரத்திற்கு எதிராக விடுதலையின் பக்கம் நாம் நிற்கிறோம். ஆகவேதான், ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ படமெடுத்த இத்தாலியரான ஜில்லோ பொன்டகார்வோ தனது இறுதி நாட்களில் ‘முதலாளித்துவத்திற்கு எதிரான இயக்கத்திற்கு’ ஆவணப்படம் எடுத்தவராக இருந்தார். போலந்தில் ஸ்டாலினியத்தை விமர்சித்து அரசியல் படங்களை உருவாக்கிய கீஸ்லாவஸ்க்கி இதே காரணத்திற்காகத்தான், அயர்லாந்து விடுதலை பற்றிப் பேசும் கென்லோச்சடன் சேர்ந்து படம் எடுப்பதுதான் தனது கனவு எனச் சொன்னார். அறுபதுகளில் எத்தனை மேதைமையோடு மாவோயிஸட்டுகள் குறித்து கோதார்த் படமெடுத்தாரோ அதே மேதைமையுடன்தான், இன்றும் கோதாரத் இஸ்ரேலினது ஒடுக்குமுறை குறித்த, பொஸ்னிய மனித உரிமை மீறல் குறித்த படமெடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் மேதைகள் அல்லது ‘மாஸ்டர் பிலிம்மேக்கர்ஸ்’ என்று சொல்லப்படுகிற எல்லா திரைப்பட மேதைகளும் யதார்த்தவாதத்தை முன்வைத்த திரைப்பட மேதைகள்தான். பின்நவீனத்துவம், அந்தத்துவம், இந்தத்துவம் என்று எவர் பேசினாலும், கலை என்பது வாழ்வை மிக அருகில் சென்று, பூச்சுக்கள் அகற்றிப் பார்ப்பதும், தரிசனங்ளை யதார்த்தத்திலிருந்து மக்கள் முன் படைப்பதும் என்றுதான் பேசவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உலகமயமாதல் போக்கிலும், கணிணிமயமான இணைய உலகிலும் அனைத்தும் காரியவாதமாகவும் காசு பார்க்கும் வேலையாகவும் ஆகியிருக்கிறது. அறிவையும் கலைமுயற்சிகளையும் கூட ஒருவர் தனது நிலைபாட்டுக்குச் சாதுரியமாக வளைத்துவிட முடியும். இவர்கள் வெகுஜன ஊடகங்களிலும், அதிகாரமிக்க இடங்களிலும், கல்வித்துறை சார்ந்த இடங்களிலும் இருப்பதன் மூலம் கீழ்மட்ட சமூகத்தில் நடக்கிற அல்லது தமது விருப்பார்வம் இல்லாத தளங்களில் நடக்கிற அனைத்தையம் இல்லாமல் செய்கிற காரியங்களையும் ஆற்ற முடியும். தமிழ் சினிமா விமர்சனச் சூழல் இவ்வாறுதான் இருக்கிறது. பன்முக உலக சினிமா குறித்த அறிவு இல்லாத நிலையிலும் சினிமாக் கோட்பாடுகளினிடையிலான மோதல்களை அறியாத நிலையிலும், வெறுமனே குறிப்பிட்ட வரலாறு மட்டுமே தெரிந்த ஒருவர் இங்கு தன்னை அதிகாரப்பூர்வ விமர்சகர் ஸ்தானத்தில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடியும். பிறரது உழைப்பினைத் தன்பெயரில் போட்டுக்கொள்கிறவர்கள் இங்கு மிகப்பெரிய சினிமா அறிஞர்களாகத் தம்மை முன்னிறுத்திக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது எழுத்துக்களில் கடந்த பத்தாண்டுகளில் தமிழில் நடந்து வந்திருக்கும் மாற்றுச் சினிமா முயற்சிகளின் முக்கியமான வகையினமான விவரணப்படம் மற்றும் குறும்படத் தளத்தில் நடந்திருக்கும் மாற்றங்களைப் பதிவு செய்ததைப் பார்க்கவே முடியாது. கோதார்த் சொன்னமாதிரி, காகிதமும் பேனாவும் போல காமெரா எனும் கருவி இன்று ஆகியிருக்கும் சூழலில், சமூக நடவடிக்கையின் அங்கமாக ஆகியிருக்கும் சினிமாவை அங்கீகரிப்பதில் இவர்களுக்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கிறது. அரசியல் சாரா அறிவுஜீவிகளாகவும், அரசியல் கடந்த கலை விற்பன்னர்களாகவும், அழகியல் மேதைகளாகவும் தம்மை முன்னிறுத்தி, இவர்கள் கட்டமைக்கிற தம்மைக் குறித்த பிம்பங்கள், இவர்கள் பற்றி முழுமையாக அறிய வருகிறபோது தகர்ந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான், இவர்கள் தமக்கு வெளியில் நடந்து கொண்டிருக்கிற எவை பற்றியும் கருத்துச் சொல்லவோ, அங்கீகரிக்கவோ தயக்கம் காட்டுகிறார்கள். காலகாலமாக இவர்கள் மாதிரியான கலா மேதைகள் அடிநிலையிலிருந்து அடிக்கிற சூறைக்காற்றில் அள்ளுண்டுதான் போவார்கள். திட்டமிட்டு திரும்பத் திரும்பச் சில பெயர்களையே உச்சரித்துக் கொண்டிருக்கும் தமிழ் விமர்சன மேதாவிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்களின் முகவரியும் இவ்வாறான நிலையைத் தான் எட்டும் என்பது மட்டும் உறுதி. ஆனால் என்ன, உலக சினிமா, திரைப்படவிழா, விமர்சன அழகியல், வெகுஜனக் கலை, பொழுது போக்குக்கலை பற்றியெல்லாம் நாம் மறுபடி மறுபடி விழிப்பு நிலையுடன் மறுவரையறை செய்து கொண்டே இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பிரெடரிக் ஜேம்ஸன் சொன்ன மாதிரி ‘அறுதிப் பகுப்பாய்வில் அனைத்தும் அரசியல்தான்’ என்பதை நாம் சதா ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பதுதான் இன்று முக்கியமானது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt; நன்றி ; கீற்று&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-3890733427792335959?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/3890733427792335959/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=3890733427792335959' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/3890733427792335959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/3890733427792335959'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2008/07/blog-post.html' title='நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-8874708073169443865</id><published>2008-06-29T07:00:00.000-07:00</published><updated>2008-06-29T07:10:53.545-07:00</updated><title type='text'>சிங்கள திரைப்படத் துறையில் தமிழர்களுக்கு மரியாதை இருக்கு. ஒளிப்பதிவாளர் சந்தோஷ்</title><content type='html'>மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சந்தோஷ், நம்பிக்கைத் தரும் இளைய தலைமுறை ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். விளம்பரப் படங்கள், குறும்படங்கள், திரைப்படம் என பரந்துபட்டது இவர் புழங்கும் வெளி. சிங்கள திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த முதல் தமிழர் என்ற வகையில் இவரது அனுபவம் தனித்துவமானது. உரையாடலில் வெளிப்படும் மாணவர்களுக்கேயுரிய ஆர்வமும், மேதைகளுக்கேயுரிய ஞானமும் அவருடனான சந்திப்பை இனிமையான அனுபவமாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cinesouth.com/cgi-bin/gallery/gallery.cgi"&gt;&lt;/a&gt;* தொழிற்கல்வி படித்த நீங்கள் திரைத்துறைக்கு வந்தது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக்கில்தான் நான் பிளாஸ்டிக் என்ஜினியரிங் படித்தேன். அப்போதே சினிமாவில் ஆர்வம் இருந்தது. பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. அதை வீட்ல சொல்ல முடியாத சூழல்; பயம். படிப்பு முடிந்ததும் மெடிக்கல் ரெப் வேலை. நல்ல சம்பளம். என்னால தனியா சம்பாதிக்க முடியும்னு வீட்ல நம்பிக்கை வந்த பிறகு, என்னோட சினிமா ஆசையை சொல்லி, அவங்க சம்மதத்தோடு சென்னை வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt; * இரண்டாயிரத்துக்குப் பிறகு சென்னை வந்த நீங்க, குறுகிய காலத்தில் ஒளிப்பதிவாளர்ங்கிற நிலையை எட்டியிருக்கிங்க. இறுக்கமான தமிழ் சினிமாத் துறையில் இது அபூர்வம் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாதான் எல்லோருக்கும் பொதுவானதே தவிர சினிமா இன்டஸ்ட்ரி அப்பிடி இல்லை. போராட்டங்களை எதிர்கொ ள்ள முடிந்தால் மட்டுமே நீங்க சினிமா இன்டஸ்ட்ரியில் நுழையவும், கவுரவமான ஒரு இடத்தை பிடிக்கவும் முடியும். அதை தக்கவச்சுக்கிற போராட்டங்கள் வேற. பெரிய அளவில் போராட்ட நெருக்கடிக்கு ஆளாகாமல் என்னை காத்தது, ஐயப்பன். இவர் இயக்குனர் பாலாவோட தம்பி.மதுரையில் இருக்கும்போதே பழக்கம். அவர்தான் என்னை கேமராமேன் ஏ.எஸ்.செந்தில்குமார் சாரிடம் அறிமுகப்படுத்தி வச்சார். அவருடன் நிறைய விளம்பரப் படங்களுக்கு வேலை செய்தேன்.அந்த அனுபவம்தான் இன்னைக்கும் எனக்கு ஆதாரமா இருக்கு. அப்புறம் கேமராமேன் சாந்த மூர்த்தி சார். கேமராமேனா என்னோட குருன்னா அது மணிகண்டன் சார். அவருடன் 'Main Hoona' ஹிந்திப் படத்துல வேலை பார்த்தேன். அப்புறம் தமிழல் 'அந்நியன்'. இதுதவிர நிறைய விளம்பரப்படங்கள். அவர்கிட்ட குறுகிய காலம் பணி புரிந்திருந்தாலும், இன்றைய நவீன தொழில்நுட்பம் பத்தி கத்துக் கிட்டது அவர் கிட்டதான். சினிமால தொழில்நுட்பம் தவிர்த்து நான் கத்துகிட்டது, சினிமாவுக்கு வர்றவங்க சுதந்திரமா இருக்கணும். பொருளாதாரரீதியா அவங்களை சார்ந்திருக்காத குடும்பம் ரொம்ப முக்கியம். அப்புறம் நண்பர்கள். பொருளாதாரரீதியா என்னை எதிர்பார்க்காத குடும்பமும், உதவி செய்ய தயாராயிருக்கிற நண்பர்களும் அமைந்ததுதான் என்னோட இந்த குறுகியகால வளர்ச்சிக்கு அடிப்படைனு நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt; * சினிமா கேமராமேன்கள் அனேகமாக எல்லோருமே விளம்பரப் படங்களில் கவனம் செலுத்துறாங்க. நீங்களும் விளம்பரப் படங்கள் செய்திருக்கிங்க, இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://www.cinesouth.com/cgi-bin/gallery/gallery.cgi"&gt;&lt;/a&gt;ஜான்சன் பேபி ஆயில், எல்ஜி, ஃபா டால்கம் பவுடர், ஹமாம் சோப், விட்கோ லக்கேஜ்னு எழுபதுக்கும் மேல விளம்பரப் படங்களுக்கு கேமராமேனா வொர்க் பண்ணிருக்கேன். சினிமால இரண்டரை மணி நேரத்துல ஒரு கேள்வியை எழுப்பணும் அல்லது ஒரு மெசேஜ் சொல்லணும். விளம்பரப் படத்துக்கு முப்பதே செகண்ட்ஸ். நீங்க புராடக்டை எக்ஸ்போஸ் பண்ணணும் அத்தோடு அதை வாங்கவும் வைக்கணும். அந்தவகையில் விளம்பரப் படங்களுக்கு துல்லியமான கிரியேடிவ்சென்ஸ் தேவைப்படுது.&lt;br /&gt;&lt;br /&gt; * உலகத்தரம் வாய்ந்த சினிமா, உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு என்பதான சொல்லாடல்கள் தமிழில் அதிகமாக கேட்கத் தொடங்கியிருக்கு. இது குறித்து என்ன நினைக்கிறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt; வரவேற்க வேண்டிய ஆரோக்கியமான விஷயம். என்னளவில் உலக சினிமா குறித்த அறிவு முக்கியமானதா நினைக்கிறேன். உலக சினிமாக்களை, பெரிய masters-ஸோட படங்களை பார்க்கும்போதுதான் நாம எந்த இடத்துல தேங்கி நிற்கிறோம்ங்கிறதை தெரிஞ்சுக்க முடியுது. குரோசாவா அப்புறம் தார்க்கோவ்ஸ்கியோட படங்கள் பார்க்கும்போது, இவங்கதான்.... இவங்க மட்டும்தான் விஷுவல் மாஸ்டர்ஸ்னு சொல்லத் தோணுது. அதே மாதிரி கோடாட், ஹிட்ச்ஹாக், பிரிட்ஸ் லாங்க் முப்பதுகளிலும் ஐம்பதுகளிலும் என்ன செய்தாங்களோ அதைத்தான் நாம இப்போ பெரிய விஷயமா செஞ்சுகிட்டிருக்கோம். இங்கே புதுசுனு எதுவும் இல்லை. அவங்க சோதனை முயற்சி செய்ததைதான் நாம திரும்ப பண்றோம். அந்தப் படங்களில் இருந்த நேர்மை, செறிவு இப்போ நம்மிடம் இருக்கானு கேட்டால், இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த சினிமாவை விட, இயக்குனர்களைவிட ஒளிப்பதிவாளர்களே அதிகம் காணக் கிடைக்கிறார்கள். இது எதனால்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cinesouth.com/cgi-bin/gallery/gallery.cgi?"&gt;&lt;/a&gt;ஒளிப்பதிவுக்கு மொழி தடையில்லை. இதையே பிரதான காரணமா நான் நினைக்கிறேன். அப்புறம் விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள்னு பல்வேறு வடிவங்களில் ஒளிப்பதிவாளர்கள் வேலை செய்கிறார்கள். குறிப்பா டெக்னாலஜியுடன் சேர்ந்து பயணிக்கிறாங்க. இது ரொம்ப முக்கியம். ஒரு லென்ஸை பயன்படுத்தி ஒரு திரைக்கதையை மேம்படுத்த முடியாது. ஒரு கேமராவை வச்சு ஒரு நடிகனோட நடிப்பை மெருகேத்த முடியாது. ஆனா, அட்வான்ஸான ஒரு லென்ஸை, கேமராவை, பிலிமை வச்சு காட்சியை பிரமாதப்படுத்த முடியும். சூப்பர் 35, சூப்பர் 16 தொழில்நுட்பம் எல்லாம் இதுக்கு உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; * சிங்கள சினிமாவில் பணிபுரிந்த முதல் கேமராமேன் நீங்கதான் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி சொல்ல முடியாது. பலர் வொர்க் பண்ணியிருக்காங்க. ஆனா, முதல் முதலா ஒரு சிங்கள பியூச்சர் பிலிமுக்கு முழுமையா ஒளிப்பதிவு செய்தது நான்தான்னு சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?&lt;br /&gt;&lt;br /&gt;லண்டன் புரொடியூசர் ஒருத்தருக்காக ஆல்பம் பண்ணுனேன். அதைப் பார்த்து குறும்படம் பண்ண இலங்கையிலிருந்து வாய்ப்பு வந்தது. 'ட்ரீம் கில்லர்' ங்கிறது குறும்படத்தோட பெயர். அப்புறம் 'விழி'ங்கிற குறும்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். இதில் 'விழி' முழுமையா இலங்கையில் ஷுட் செய்யப்பட்டது. அந்த அனுபவம் வித்தியாசமானது. இலங்கை அரசியல் நெருக்கடிகளால் ஏற்பட்டது, படப்பிடிப்பில் ஏற்பட்டதுனு இருவேறு அனுபவங்கள் அவை.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://www.cinesouth.com/cgi-bin/gallery/gallery.cgi"&gt;&lt;/a&gt;* இரண்டு அனுபவங்களையும் கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;போர் பதற்றம் காரணமா இலங்கையின் முக்கிய சாலையான A9- ஐ மூடிட்டாங்க. இதனால் கொழும்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் நீங்க போக முடியும். அப்புறம் செக்யூரிட்டி. ஒருகிலோமீட்டர் போவதற்குள் நாலுமுறை காரிலிருந்து இறக்கி முழுமையா செக் பண்றாங்க. கேட்கிற போதெல்லாம் பாஸ்போர்ட்டை காண்பிக்கணும். இந்த செக்யூரிட்டியும் இரண்டு காரணங்களுக்காக. ஒண்ணு, அவங்க பாதுகாப்புக்கு. இன்னொண்ணு நம்ம பாதுகாப்புக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;* தமிழர்கள் என்று வரும்போது தொந்தரவுகள் அதிகமிருக்குமே?&lt;br /&gt;&lt;br /&gt; இலங்கை மாதிரியான ஒரு நாட்டில் அது எதிர்பார்க்கக் கூடியதுதான். 'விழி' படத்தோட கதைப்படி, ராணுவ வீரனின் படம் தேவை. 'விழி' டைரக்டர் செல்வன் அதுக்காக ஸ்டுடியோவுக்கு போயிருக்கார். அங்க இருந்த சிங்கள நபர் போட்டோவை பார்த்துட்டு, ஏதோ தமிழ் போராளி வந்திருப்பதா நினைச்சு, போலீஸ்கிட்ட சொல்ல, செல்வனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இந்த விவரமே ஒரு வாரம் கழிச்சுதான் தெரிய வருது. கொழும்பிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் மூலமா, உண்மையை விளக்கி, செல்வனை வெளியே கொண்டு வர்றதுக்குள்ள 33 நாட்கள் ஓடிப் போயிடுச்சி. அந்தப் படத்தை எடுக்க இதைவிட குறைவான நாட்கள்தான் எங்களுக்கு தேவைப்பட்டது. ஷுட்டிங் அனுபவமும் வித்தியாசமானது. டிராக் அண்டு டிராலி, லைட்ஸ் உள்பட எல்லா எக்யூப்மெண்ட்ஸுமே நவீனமானவை. எக்யூப்மெண்ட்ஸில் நம்மைவிட அட்வான்ஸா இருக்காங்க. ஆனா, அதை எப்படி கையாள்றதுங்கிறது அவங்களுக்கு தெரியலை. இன்னைக்கு ஒரு ஷாட் எடுத்திட்டு நாற்பதுநாள் கழிச்சு அதன் கண்டினியூட்டி எடுக்கிறது தமிழில் சாதாரணம். அவங்களுக்கு அது இன்னும் கைகூடி வரலை. ஒரு நடிகர் இல்லைனா, ஒரு எக்யூப்மெண்ட் இல்லாமப்போனா அந்தச் சூழலை சமாளிச்சு எப்படி ஷாட் எடுப்பது என்பதில் அவங்களுக்கு இன்னும் குழப்பம் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;* சிங்களர்கள் மிகுந்த இலங்கை சினிமாவில் தமிழர்களின் நிலை எப்படியிருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cinesouth.com/cgi-bin/gallery/gallery.cgi"&gt;&lt;/a&gt;நான் ஒளிப்பதிவு செய்த முதல் சிங்களப் படம் 'லீடர்.' ரஞ்சன் ராமநாயக்க நடித்தது. இங்க ரஜினி மாதிரி அங்கே ரஞ்சன் ராமநாயக்க. இலங்கை சூப்பர் ஸ்டார். அவர் கடைசியாக இயக்கி நடிச்ச இரண்டு படமும் சூப்பர் ஹிட்! பொன்னம்பலம் ஆரூரான், நிலாப்ரியன் தெளபிக் என்கிற இரண்டு இலங்கை தமிழர்கள்தான் தயாரிப்பு. தமிழ்நாட்டிலிருந்து வர்ற தமிழர்கள் நம்மைவிட திறமைசாலிகள்ங்கிற புரிதல் சிங்களர்களுக்கு இருக்கு. அதனால கவுரவமா நடத்துறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;* சிங்கள திரைத்துறையில் இலங்கை தமிழர்களின் பங்களிப்பு எப்படியிருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;ஆன் ஸ்கிரீனை விட ஆஃப் ஸ்கிரீன் வேலைகளில் அதிக தமிழர்களை காண முடியுது. தயாரிப்பாளர்களாக, இயக்குனர்களாக, டெக்னிஷியன்களாக நிறைய பேர் இருக்காங்க. சக்தி டி.வி.ங்கிற தமிழ் சானல் ஒளிபரப்பாகுது. இலங்கை அரசின் ரூபவாகினியில் 'சேனல் ஐ' ங்கிற முழுக்க தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிற சானல் ஒண்ணும் இருக்கு. அரசியல் தளத்திலும், சமூக அளவிலும் இருக்கிற பதற்றமும், விரோதமும் சிங்கள திரைத்துறையில் பலவீனமான அளவிலே காணப்படுவது ஆச்சரியமான நல்ல விஷயம். இதை வச்சு பிற விஷயங்களை எடைபோடக் கூடாதுனே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt; * தமிழர்கள் அதிகம் இருந்தும் தமிழ்ப் படங்கள் இலங்கையில் தயாரிக்கப்படுவதற்கான அறிகுறியே இல்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தயாராகிற சிங்களப் படங்கள் ஒப்பீட்டளவில் நமது தமிழ்ப் படங்களை விட தரத்தில் ரொம்ப பலவீனமானவை. கமர்ஷியல் படம் பண்ணுவதில் அவங்க பதினைஞ்சு வருஷம் பின்தங்கியிருப்பதாகவே சொல்லலாம். தமிழ்ப் படங்கள் எடுத்தாலும் நிலைமை பெரிதாக மாற வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் தயாராகிற படங்கள் இலங்கையில் வெளியாகிற சூழலில், இலங்கையில் தயாரிக்கிற தமிழ்ப் படம் அதோடு ஈடுகொடுக்க முடியுமாங்கிற நியாயமான சந்தேகம் தயாரிப்பாளர்களுக்கு இருக்கு. தமிழ்ப் படங்கள் இலங்கையில் தயாராகாததற்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;* தரத்தைப் பற்றி பேசும்போது, சிங்கள மொழியில் மாற்று சினிமா ஆரோக்கியமா இருக்கு இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; நிச்சயமாக! நாம இதுவரை பேசுனது மெயின் ஸ்ட்ரீம் சினிமா பற்றி. மாற்று சினிமாவை பொறுத்தவரை பிரசன்ன விதனாகே போன்ற இயக்குனர்கள் உலகத் தரம் வாய்ந்த படங்களை தொடர்ச்சியா தந்துகிட்டிருக்காங்க. இவங்க படங்களில் இனப் பிரச்சனையும், அது எளிய மனிதர்களின் வாழ்வை துண்டாடும் அவலமும் நேர்மையா பதிவு செய்யப்படுது. மெயின் ஸ்ட்ரீம் படங்களில் நீங்க இதை பார்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt; * நேர்மை என்று வரும்போது இயக்குனர்கள் அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடுமே?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://www.cinesouth.com/cgi-bin/gallery/gallery.cgi"&gt;&lt;/a&gt;பிரசன்ன விதனாகே இயக்கிய முக்கியமான திரைப்படம், 'டெத் ஆன் ஏ ஃபுல் மூன் டே.' ஒரு வயதானவர். அவரது ஒரே மகன் ராணுவத்தில் பணிபுரிகிறான். ஒருநாள் வயதானவருக்கு, அவரது மகன் இறந்து விட்டதாக தகவல் வருகிறது. இதனை அவர் நம்ப மறுக்கிறார். மகனின் சடலம் இருக்கும் சவப்பெட்டியை ராணுவம் அனுப்புகிறது. மகனின் உடலை கடைசியாகப் பார்க்க விரும்புகிறார் முதியவர். ராணுவம் மறுக்கிறது. சவப் பெட்டி திறக்கப்படாமலே புதைக்கப்படுகிறது. மகன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என நம்பும் அந்த வயதான தந்தை சவக்குழியை தோண்டி சவப்பெட்டியை எடுக்கிறார். உள்ளே சடலத்துக்குப்பதில் கற்கள் இருக்கின்றன. இந்தப் படத்தை இலங்கை அரசு தடை செய்தது. உலகப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகள் வாங்கிய பிறகு, வேறு வழியில்லாமல் படத்தை இலங்கையில் வெளியிட அரசு அனுமதித்தது. நேர்மையாக படம் எடுப்பவர்களின் நிலைமை உலகெங்கும் இப்படித்தான் இருக்கு. சிங்களப்படம் பண்ணப்போனதில் கிடைத்த நல்ல விஷயங்களில் ஒன்று பிரசன்ன விதனாகேயை சந்தித்தது. இலங்கையில் அவரை சந்திக்க முடியாமல் பிறகு சென்னைக்கு அவர் வந்தபோது சந்திச்சேன். மறக்க முடியாத அனுபவம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒப்பீட்டளவில் சிங்கள மெயின் ஸ்ட்ரீம் படங்களைவிட தமிழ்ப் படங்கள் எல்லா வகையிலும் சிறப்பா இருக்கு. ஆனா, மாற்று சினிமா என்று வரும்போது பிரசன்ன விதனாகே மாதிரி இங்கே சுட்டிக் காட்ட ஒருவர்கூட இல்லையே. இதனை எப்படி புரிந்து கொள்வது?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://www.cinesouth.com/cgi-bin/gallery/gallery.cgi"&gt;&lt;/a&gt;இலங்கையில் நடப்பது போன்ற போரையோ, அழிவையோ இதுவரை நாம எதிர் கொண்டதில்லை. நெருக்கடியும் உத்தரவாதமில்லாத வாழ்க்கையின் அலைக்கழிப்பும்தான் இலங்கையின் மாற்று சினிமாவுக்கான ஊற்றுக்கண் என்றால், இன்னொன்று நேர்மை. நாம, எப்படி பார்வையாளர்களை ஏமாற்றலாம், கைதட்ட வைக்கலாம்னு யோசிக்கிறோமே தவிர, ஒரு பிரச்சனையை ஆழமா, நேர்மையா அணுகியதே இல்லை. அதிகார அச்சுறுத்தல் குறைவான நமது சினிமாவுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் மாற்று சினிமா இயக்குனர்கள் குறைந்தபட்ச நேர்மையும் பெரிய விஷயம்தான்! இலங்கையிலும் சரி, ஈரானிலும் சரி, ஆப்பிரிக்க நாடுகளிலும் சரி, அடக்குமுறைகளை தாண்டிதான் நல்ல சினிமா வந்துகிட்டிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;* மொத்தமாக பார்க்கையில் சிங்கள மொழி படங்களில் பணிபுரிந்தது திருப்தியளிக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt; நான் ஒளிப்பதிவு செய்த 'ட்ரீம் கில்லர்' நியூயார்க் மற்றும் டொரண்டோ குறும்பட போட்டிகளில் பெஸ்ட் சினிமோட்டோகிராஃபிக்கான விருதை பெற்றிருக்கு. அதேமாதிரி 'விழி' கனடா சர்வதேச குறும்பட போட்டியில் சிறந்த சினிமோட்டோகிராஃபிக்கான விருதை எனக்கு பெற்றுத் தந்தது. பிரான்ஸ் குறும்பட விழாவுக்கு 'விழி' சினிமோட்டோகிராஃபி பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருக்கு. தவிர, நமக்கு பழக்கமில்லாத மொழி, இடம், மனிதர்கள்னு சிங்களப்பட அனுபவம் தந்த செழுமையான பகுதிகள் நிறைய. அங்கே எங்கு கேமராவை வைத்தாலும் ஒரு நல்ல காட்சி, காம்போஸிஷன் கிடைக்கும். அந்தளவு இயற்கை எழில்மிகுந்த நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;இனப்படுகொலைகளை மட்டும் நீக்கிவிட்டால், அற்புதமான நாடு அது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; நன்றி - சினி சவுத்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-8874708073169443865?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/8874708073169443865/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=8874708073169443865' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/8874708073169443865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/8874708073169443865'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2008/06/blog-post_29.html' title='சிங்கள திரைப்படத் துறையில் தமிழர்களுக்கு மரியாதை இருக்கு. ஒளிப்பதிவாளர் சந்தோஷ்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-6438623799566366712</id><published>2008-06-26T07:54:00.000-07:00</published><updated>2008-06-26T08:00:09.591-07:00</updated><title type='text'>யாரை, எப்போது புகழலாம்!</title><content type='html'>ஒருத்தரைப் புகழ்வதற்குக் கூட நேரம், காலம் இருக்கிறதா என்ன? கட்டாயம் இருக்கிறது என்கிறார் ஔவையார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;ஆசானை எவ்விடத்தும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;அப்படியே வாச மனையாளைப் பஞ்சனையில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;மைந்தர் தம்மை நெஞ்சில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;வினையாளை வேலை முடிவில்! - &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஔவையார்விளக்கம்:-&lt;br /&gt; நண்பனைப் புகழ வேண்டுமானால் அவனைக் காணாதபோது மனமாரப் புகழ வேண்டுமாம்;&lt;br /&gt;ஆசிரியர் என்றால் அவரை நேரிலும், மறைவிலும் எப்போதும் துதிக்கலாம்;&lt;br /&gt;மனைவியைப் பஞ்சனையில் புகழ வேண்டுமாம்;&lt;br /&gt; பெற்ற பிள்ளைகளைப் புகழ்வது மனதுக்குள் தானாம்;&lt;br /&gt;வேலைக்காரர்களை, அவர்களது வேலைகளை முடித்த பிறகுதான் புகழவேண்டுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தமிழோடு..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-6438623799566366712?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/6438623799566366712/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=6438623799566366712' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/6438623799566366712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/6438623799566366712'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2008/06/blog-post_26.html' title='யாரை, எப்போது புகழலாம்!'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-8234068670336202584</id><published>2008-06-10T07:19:00.000-07:00</published><updated>2008-06-10T07:25:37.106-07:00</updated><title type='text'>இன்பத் தமிழ்  - பாரதிதாசன்</title><content type='html'>தமிழுக்கும் அமுதென்று பேர் -&lt;br /&gt; அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எஙகள் உயிருக்கு நேர்!&lt;br /&gt;தமிழுக்கு நிலவென்றுபேர் -&lt;br /&gt; இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!&lt;br /&gt;தமிழுக்கு மணமென்று பேர் -&lt;br /&gt; இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!தமிழுக்கு மதுவென்று பேர் -&lt;br /&gt;இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!&lt;br /&gt;தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -&lt;br /&gt; இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!&lt;br /&gt;தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் -&lt;br /&gt; இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!&lt;br /&gt;தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் -&lt;br /&gt; இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!&lt;br /&gt;தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -&lt;br /&gt; இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-8234068670336202584?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/8234068670336202584/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=8234068670336202584' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/8234068670336202584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/8234068670336202584'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2008/06/blog-post.html' title='இன்பத் தமிழ்  - பாரதிதாசன்'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-5850722060690681789</id><published>2008-05-26T08:32:00.000-07:00</published><updated>2008-05-26T08:36:19.256-07:00</updated><title type='text'>சுஜாதாவின் 'வயது வந்தவர்களுக்கு' ....</title><content type='html'>உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை, கடைப்பிடிப்பது. திருவள்ளுவர் காலத்திருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது.பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரைதான் இளைஞர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதாமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். பதினாறே கொஞ்சம் லேட் தான். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் நிலைத்துவிடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ளஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த அறிவுரைகள் இரு பாலருக்கும் பொது(ஆண்-பெண்) இனி அவை.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், எதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது ஒரு நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை ரொம்ப இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். ஏழுகடல் கடந்து அசுரனின் உசிர் நிலையைக் கேட்க மாட்டார்கள். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. முன்று மணிக்குத் துவங்கும் மாட்டினி போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். வெளியே வந்ததும் பங்கி அடித்தாற்போல் இருக்கும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மை சொல்லி விடுவது சுலபம். மாட்டினி போகாமல் இருப்பது அதை விட. கிளர் ஓளி இளமை என்று ஆழ்வார் சொல்லும் இளமை, ஓளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களை படியுங்கள்.பொது விஷயங்கள் என்றால் கதை சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக்கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகம் நான் ஒரு நாளைக்கு நாலு பக்கம் தான் படிக்கிறேன். அதுவே வருஷத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில். யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் முன்னூறு ரூபாய்க்கு ஸ்னீக்கர்ஸ், சுடிதார் கேட்கு முன்.&lt;br /&gt;&lt;br /&gt;6. இந்தப் பத்திரிகையைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வாரப் பத்திரிகை படிக்க வசதியில்லாத கோடிக் கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை பாத்ரூமில் அல்லது படுக்கப்போகு முன் எண்ணிப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம், ( உடல்) எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயசில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்குக் கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரவமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;8. எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். வெளி விளையாட்டு. கடியாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள் எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாகத் தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காகச் சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். யாரையும் மனத்திலோ உடலிலோ தாக்கத் தோன்றாது.&lt;br /&gt;&lt;br /&gt;9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிஷம். டி.வி.யில் அசட்டு நாடகங்கள் எல்லாம் ஓய்ந்து இந்தி ஆரம்பித்து அணைத்திருப்பார்கள். குழந்தைகள் தூங்கியிருக்கும். ஒரு மணி நேரமாவது சுத்தமாகப் பாடப் புத்தகம் படிக்கலாம். படித்த உடனே ஓரு முறை பார்க்காமல் எழுதிவிடுங்கள். ராத்திரி பிறர் வீட்டில் தங்கவே தங்காதீர்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் வினை.&lt;br /&gt;&lt;br /&gt;10. படுக்கப் போகும் முன் பத்து மிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும். எதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜில் இன்று நடந்தது. அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா. சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் &amp;amp; தேசிகன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-5850722060690681789?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/5850722060690681789/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=5850722060690681789' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/5850722060690681789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/5850722060690681789'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2008/05/blog-post_26.html' title='சுஜாதாவின் &apos;வயது வந்தவர்களுக்கு&apos; ....'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-7709557045215064744</id><published>2008-05-05T06:41:00.000-07:00</published><updated>2008-05-05T06:46:28.254-07:00</updated><title type='text'>குற்றம் கண்டுபிடிக்கும் குணம்  -  சுவாமி சுகபோதானந்தா</title><content type='html'>எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப் பார்வையை குறுகலாக்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.&lt;br /&gt;பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்... இந்தப் பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் 'ஜாக்கிரதை'னு பலகை வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹும்... நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம் பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டு, இன்னொரு கையை சாக்கடைப் பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.&lt;br /&gt;ஆனால், மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப் பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர், தனது சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தா, என் தோள்மீது ஏறி, முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச் சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியோ, அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில் பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.&lt;br /&gt;கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும். தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதவர் யாரோ, அவர்தான் உண்மையில் குறையே இல்லாத முழுமையான கணவன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள். கட்டில், நாற்காலி, சோபா, தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து வைத்திருக்கிறாள். ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்பு, இரண்டு வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா? என்று சிலர் கேட்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாராளமாகச் சொல்லுங்கள். ஆனால், அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி சொல்வதைவிட, முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த புத்திமதி!&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால், இந்த விளையாட்டை உங்கள் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு... என்று வரிசையாகச் சொல்வேன். நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும். சரியா?என்று கேட்டுவிட்டு, ஒன்று இரண்டு, மூன்று... என எண்ணத் தொடங்குங்கள். ஆறு என்று சொல்லும்போதே, நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன். குழந்தையும் சட்டென்று கை தட்டிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து தெரிவது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. நாம் செய்வதைத் தான் பின்பற்றுகின்றன. குழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்களும் இப்படித்தான்.&lt;br /&gt;அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி சுவாமி, நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில் நமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார். அடுத்த வீட்டுக்காரன் குப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான். யாரிடமும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் செய்யும் தவறுகளை, அவருக்கு உணர்த்தக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.&lt;br /&gt;ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி விட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன் வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாக, எங்கே... சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.&lt;br /&gt;ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், "ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு!" என்று சொல்ல... இரு தேவிகளுக்குமே பூரிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல... நாரதர்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமி சுகபோதானந்தா தொகுப்பலிருந்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3614742895230538354-7709557045215064744?l=vithiyagangai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vithiyagangai.blogspot.com/feeds/7709557045215064744/comments/default' title='Kommentarer til indlægget'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3614742895230538354&amp;postID=7709557045215064744' title='0 kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/7709557045215064744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3614742895230538354/posts/default/7709557045215064744'/><link rel='alternate' type='text/html' href='http://vithiyagangai.blogspot.com/2008/05/blog-post.html' title='குற்றம் கண்டுபிடிக்கும் குணம்  -  சுவாமி சுகபோதானந்தா'/><author><name>வித்தியகங்கைக்கலாப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/10740903228049407430</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3614742895230538354.post-2238499538359143205</id><published>2008-04-27T03:10:00.000-07:00</published><updated>2008-04-27T03:18:33.633-07:00</updated><title type='text'>கன்று -  தமிழ்மகன்</title><content type='html'>ஓட்டலுக்குள் நுழைவதற்கு முன் அந்தச் சிறுமியைப் பார்த்தேன். அவள் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு பர்ஸன்ம் இருந்தது. பர்ஸ் வைத்திருக்கும் பிச்சைக்காரச் சிறுமி என்பது புதுமையாகவும் பார்க்க அழகாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளைக் குமரியென்றும் கூறலாம்தான். அதற்கு ஒன்றும் அவசரமில்லை. அந்தப் பாவாடைச் சட்டையில் ரெட்டை ஜடை போட்டு சிவப்பு ரிப்பன் கட்டியிருந்த அந்த ஒரு கண பார்வையில் எனக்குச் சிறுமியாக இருப்பதுதான் சரி என தோன்றினாள். மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்ப்பதற்குக் காரணம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; பிச்சைக்காரியாக இருந்தாலும் வலிந்து பரிதாபத்தைக் கண்ணில் தேக்கி வைத்துக் கொண்டு அழுக்காக இருக்க வேண்டும் என்று விரும்பாதவளாக இருந்தாள். சாப்பிடுவதற்கு நிறைய பேர் காத்திருந்தார்கள். ஒரு சில ஓட்டலுக்கு இப்படி ஒரு ராசி. க்யூவில் நின்று காத்திருந்து சாப்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடுவதற்காகக் காத்திருக்கும் தருணத்தில் இப்படியான ஓர் ஆர்வமூட்டும் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருப்பது மற்றெல்லாவற்றையும்விட சுலபமான திசைதிருப்பலாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு வெளியேறுபவர்களில் ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்து அதிகம் கெஞ்சாத தொனியில் அவள் "சார் சார்'' என்றாள். பெரும்பாலும் அதற்குப் பலன் இருந்தது. ஏதோ டைம் கேட்பதற்காகக் கூப்பிடுகிறாள் என்று திரும்பி பின் சுதாரித்து அவர்கள் பிச்சை போடுவது தெரிகிறது. தட்டில் விழும் காசுகளை அவள் உடனடியாக பர்ஸில் எடுத்துப் போட்டுக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ மீன்காரியும் காய் கறி விற்பவளும் காசை வாங்கி சுருக்குப் பையில் போட்டுக் கொள்வது போல ஒருவித வியாபார மிடுக்கு அதில் தெரிந்தது. பிச்சை எடுப்பதை அவள் ஒரு தொழில் போல நினைத்திருக்கக் கூடும். இடுப்பில் கையூன்றி அவள் ஒய்யாரமாக நிற்பது அவளுக்கு இது கேவலமான தொழில் என்பது போன்ற உலக நியாயங்கள் தெரியாது என்பதை உணர்த்தியது. இன்று புதிதாய் பிச்சைக்காரி ஆனவளோ? என்னைப் போலவே எல்லோரும் அவளிடம் இயல்பு தவறிய ஈர்ப்பு இருப்பதைக் கவனித்தனர். ஆனால் என்னைப் போல இப்படி நேரம் எடுத்து கவனிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய மலர்ந்த விழிகளாலோ, கூரிய நாசியோலோ நான் மேலும் ஈர்க்கப்பட்டதோடு, இரந்து பிழைக்கக் கூடிய தன்மை இவளிடம் இல்லையே எப்படி இந்த பூமியில் அவளால் தொடர்ந்து பிச்சை எடுத்துப் பிழைக்க முடியும் என்ற கவலையும் தொற்றிக் கொண்டது. மாற்று யோசனையாக இவளுக்கு என்ன வேலையைக் கொடுத்தால் இவளுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் "சார் 3வது டேபிள் காலி'' என்ற குரல் கேட்டது. உட்கார வைத்து விடுகிறார்களே தவிர சாப்பாடு வடிக்கவில்லை, அப்பளம் ரெடியாகவில்லை என்ற தாமதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.&lt;br /&gt;சாப்பிட உட்கார்ந்த ஐந்து நிமிடத்தில் சர்வருக்கும் சாப்பிட வந்தவருக்கும் சண்டை வராத டேபிள்கள் எத்தனை எண்ணிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரேஷன் கடை ஊழல், பெனிபிட் பண்டு மோசடி, போன ஆண்டு கட்டிய பாலம் இடிந்து 100 பேர் பலி, கன்னா பின்னாவென்று கணக்குக் காட்டும் எலக்ட்ரிசிட்டி மீட்டரை சரிபார்த்துத் தருவதற்கு லஞ்சம், டிரைவிங் லைசென்ள்ஸக் காட்டிய பிறகும் பைக் சாவியை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஏடாகூடமாக விசாரிக்கும் போலீஸ்... இப்படி கோபப் படவேண்டிய எத்தனையோ இடங்களில் மக்கள் காட்டும் பொறுமைகள் எல்லாம் ஹோட்டல் டேபிள்களில் வந்த பின்புதான் ஆவேசமடைகின்றனபோலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு பிறவியை மக்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்று கவனிப்பதற்கு ஒதுக்கிவிட்டு அடுத்தப் பிறவியில் இருந்து வாழலாமா என திடீரென நினைத்தேன். ஏதோ ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அடுத்த பிறவி என ஒன்று இல்லாமல் போனாலும் பெரிய பாதகம் இல்லை போலத்தான் தோன்றியது. அந்தப் பெண் போன பிறவியில் இளவரசியாக இருந்திருப்பாளோ? வெறும் சோற்றைப் பிசைந்து கொண்டிருப்பதைப் பார்த்து என் கை மேலேயே ரசத்தை ஊற்றிவிட்டுப் போனான் சர்வர். சாம்பார் சாதமெல்லாம் சாப்பிட்டுவிட்டோமா என்று திடீரென சுரணை வந்து, அதன் மீதே கொஞ்சம் சாம்பாரையும் ஊற்றச் சொல்லி சாப்பிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிப் படிப்புக்குப் பிறகு ஒரே வருடத்தில் இரண்டாவது வேலை இது. காலை ஆறுமணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பினால்தான் பத்துமணிக்காவது ஆபிஸன்க்குப் போகமுடியும் என்ற இடைவெளி. அப்புறம் அம்மா தந்த சாப்பாடாக இருந்தாலும் மத்தியானத்தில் சாப்பிடவா முடியும்?&lt;br /&gt;சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பக்கத்துக் கடையில் ஒரு சிகரெட் வாங்கி புகைப்பதில் இருக்கும் ஈடுபாடும் இன்பமும் எனக்குச் சாப்பாட்டில் இருந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; சாப்பிட்ட பிறகு ஒரு தம் போடலாம் என்பதற்காகச் சாப்பிடுகிறேன். எழுந்தால் ஒரு தம் அடிக்கலாம் என்பதற்காகவே காலையில் நான் கண் விழிக்கிறேன். இனி சிகரெட் கடையெல்லாம் மூடியிருப்பார்கள் என்பதற்காகவே இரவு படுக்கப் போகிறேன். சொல்லப் போனால் சிகரெட் புகைப்பதற்காகச் சம்பாதிப்பதாகவே ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று தொலைவில் அந்தச் சிறுமி. வெய்யிலுக்காக கண்களை இடுக்கிக் கொண்டு நிற்பதிலும் உலகப் பரபரப்பில் இருந்து ஒதுங்கி நிற்கிற நிதானமும் அலட்சியமும் என்னை மீண்டும் ஈர்த்தது. நாம் வெளியே வந்த போது எங்கே போயிருந்தாள்? இவளைப் படிக்க வைத்தால் மிகச் சிறந்த விஞ்ஞானியாகவோ, விளையாட்டு வீராங்கனையாகவோ வந்து நாட்டுக்குப் பெருமை சேர்ப்பாள். அவள் மீது நம்பிக்கையோ, இரக்கமோ தோன்றியது.&lt;br /&gt;சாப்பிட்ட களைப்பு நீங்குவதற்காக அருகே இருந்த பெட்டிகடையில் அவரவர் ரசனைக்கேற்ப பீடியோ, சிகரெட்டோ, வெற்றிலையோ போட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் கிளிப்புகளில் தொங்கிக் கொண்டிருக்கும் சஞ்சிகைகளை ஆனவரைக்கும் குனிந்து நெளிந்து படித்தார்கள். படிப்பதில் இவ்வளவு ஆர்வமா எனப் பெருமையாக இருக்கும். பத்திரிகையைக் கையில் கொடுத்தால் அப்படி படிப்பார்களா என்று தெரியவில்லை. காசு கொடுத்து வாங்கி இவர்கள் கையில் திணித்துப் பரீட்சித்துப் பார்க்க எனக்கு வசதியில்லை. இவர்களில் யாருக்குமே அவள் குறித்து அக்கரை ஏற்படாதது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் ஓட்டலுக்கு நேர் மேலே இருந்தது. எந்தப் பக்கத்திலும் நிழலே இல்லை. ஓட்டலின் சுவரில் நிழலாலேயே பெயிண்ட் அடித்த மாதிரி ஒட்டிக் கொண்டிருந்தது. இப்படியான தருணத்தில் ஆல்பெர் காம்யூவின் அந்நியன் கதையில் வருவது போல சுட்டுவிட முடியுமா நம்மால் என்று இருந்தது. யோசனை வேறு பக்கம் திரும்பியது. துப்பாக்கியை ஒருமுறை தொட்டுப் பார்க்கும் சந்தர்ப்பமாவது கிட்டுமா? துப்பாக்கி இல்லாவிட்டால் போகிறது. உருட்டுக்கட்டையை எடுத்து ஒருத்தன் நடுமண்டையில் அடிக்க முடியுமா?...&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சிறுமியை மீண்டும் பார்த்தேன். அவள் நடைபாதை மேடையில் அமர்ந்து காலை சாலையில் தொங்கவிட்டபடி வெயிலில் அமர்ந்திருந்தாள். அவள் கையில் இருந்த சிறிய மணிபர்ஸத் திறந்தாள். அதன் உட்புறத் திறப்பில் சிறிய கண்ணாடி. அதில் அவளுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உலர்ந்து போன சிக்கடைந்த சிகையை விரல்களால் பின்பக்கம் தள்ளிவிட்டாள். பின்னர் முன் நெற்றியில் சிறிய முடிக் கற்றையை விரல்களால் சுருட்டிவிட்டுக் கொண்டாள். அவளுடைய முகம் அவளுக்கு வியப்புக்குரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும். தன் மூக்குத்தியைத் திருகி அதில் பொறித்த உருவத்துக்கு ஏற்ப இப்படித்தான் இருக்க வேண்டும் போல நிலைப்படுத்தினாள். மெல்ல தன் நுனி நாக்கால் அக்கண்ணாடியைத் தொட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடியிலிருந்த நாக்கும் அவளுடைய நாக்கைத் தொட்டது. அவள் பூரிப்பான புன்னகையோடு அதை உள்வாங்கிக் கொண்டு அதே வேகத்தில் இதை யாராவது பார்த்துவிட்டார்களா என்று கவனித்தாள். என்னையும் என் கண்கள் அவள் மீது நீண்ட நேரமாய் ஊடுருவி இருந்ததையும் அவள் கணித்தாள். நான் கவனித்துவிட்டேன் என்பது அவளுக்கு அதிர்ச்சியாகவும் வெட்கமாகவும் இருந்தது. சட்டெனத் திரும்பிக் கொண்டாள். வித்தியாசமாக எதுவும் நடந்துவிடவில்லை என காட்டிக் கொண்டு இயல்பாக பர்ள்ஸ மூடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவளுடைய நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டேன் என்பது அவளுக்குப் புரிந்துபோனது. ஆனால் நான் காட்சிகளை உள்வாங்கிக் கொள்ளாமல் கவனக் குவிப்பு எதுவும் இன்றி சும்மா வெறித்துக் கொண்டிருந்ததாகத்தான் இருக்கும் என அவள் எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது உண்மைதானா என்பதைச் சரிபார்த்துக் கொள்வதில் அவளுக்குத் தவிப்பு இருந்தது. மீண்டும் நான் அவளைக் கவனிக்கிறேனா என்று ஓரக்கண்ணால் பார்த்தாள். அதை நான் என்னவென்று விவரிப்பது. மிக நாசூக்கான அவதானிப்பு அது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவளைத்தான் கவனித்துக் கொண்டிருந்தேன். அது அவளுக்கு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. உடனே அவள் அங்கிருந்து எழுந்து ஓட்டலின் மறு முனைக்குப் போய் அனிச்சையாக கையேந்தி நின்றாள். அவள் செய்யக் கூடாத வேலை என்று உறுதியாகிவிட்டது எனக்கு. நாமே அழைத்துச் சென்று வளர்க்கலாமா என்று ஆவேசம் ஏற்பட்டு, பிறகு ஏதாவது அனாதை ஆசரமத்தில் வைத்து படிக்க வைக்கலாம் என்று மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகபட்சம் 13 வயசு இருக்கலாம். சரியான ஆகாரம் சாப்பிடாதவளாக உணர்ந்து 14 வயதாக
