mandag den 5. november 2007

வாழ்த்துக்கள்

ஓய்வு பெற்று ஊரோடு அழுந்தி விட்ட அப்பாவுக்கு
ஏதேனும் சாமி படம் தலைநகரில் கொழிக்கின்ற தமையனுக்கு
நியூயோர்க்கின் ஒரு கோணம் மணமாகி மறந்துவிட்ட தங்கைக்கு
நினைவோடே பொக்கை வாய்க் குழந்தைகள்.
காணாத போது என் கவிதையை,
முன்பல்லை விமர்சிக்கும் நண்பர்க்குக் கற்சிலைகள்
அதிகார மேனேஜன் பார்வைக்குஸ“னரிகள்
அடியே -போன ஜனவரியில் புதுப் படத்து அரையிருளில் காதோரம் ·
நீயிட்ட நீர்த் தடங்கள் காயும் முன்
உறவிழுத்த பிடிக்குள் மயங்கிப் போய் மரபைக் காட்டி கொண்ட
ஒரு கனவையும் குலைத்து விட்ட உனக் கென்ன அனுப்ப?
மொட்டை மரம் புத்தர் படம்
கற்றை குழல் ஜானகியின் தனியுருவம்?
இல்லை - அட்டைக் கறுப்பில் நீல மசி தோய்த்து நீங்காத நினைவோடே
என்றெழுதி அனுப்புகிறேன்
தேடிப் புரிந்து கொள்.

பாலகுமாரன்
நூல்: விட்டில் பூச்சிகள்

Ingen kommentarer: