onsdag den 9. januar 2008

இளைய அப்துல்லாஹ்: சில வரிகள் எஸ்.கௌந்தி

இலங்கைத் தமிழர்களில் சிலர் எமது போர்க்கேள்வியை ஓர் கொடிய கேள்வியாகப் பார்த்துள்ளனர். அவர்களுள் எங்கள் கவனத்திற்குத் தப்பிப்போகாத ஒருவராக இளைய அப்துல்லாஹ் உள்ளார்.

அண்மையிலே இவரது 'பிணம் செய்யும் தேசம்" கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இவர் பற்றி இந்தப் புத்தகத்தின் பின்பக்கத்தில் சில குறிப்புகள் உள்ளன. 'லண்டன் தீபம் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற தொகுப்பாளராகத் திகழும் எம்.என்.எம் அனஸ் பத்திரிகை, வானொலி போன்ற ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் பரிச்சயம் கொண்டவர்.

இளைய அப்துல்லாஹ், மானுட புத்ரன், ஹரீரா அனஸ் ஆகிய புனைபெயர்களில் இவர் இலங்கையின் இலக்கிய தொகுதிக்கு வளம் சோத்திருக்கின்றார். 'எங்கள் தாயகமும் வடக்கே" என்ற இவரது ஒலிப்பதிவுக் கவிதை (ஒலி;பேழை) ஈழத்துக் கவிதை உலகிலும் அரசியல் உலகிலும் இவர் மீதான கவன ஈர்ப்பைத் தேடிக்கொடுத்திருக்கிறது. புலம்பெயர் சஞ்சிகைகளில் தனித்துவம்மிக்க இவரது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன." கவிஞர் தனது தொகுப்பிற்குக் கொடுத்திருக்கும் தலைப்பு எங்கள் தேசத்தின் யதார்த்தத்தை உண்மையிலேயே காட்டுகின்ற ஒன்றா?

கவிஞர் தலைப்புள் 'தேசம்" எனும் பதம் பாவிக்கப்பட்ட விதம் ஓர் தேசத்தைச் சுடுகாடாகக் காட்டுகின்றது. ஆம்! கவிஞர் மொழி பொய்மொழியல்ல. எங்கள் தேசத்தில் புலிகள் தொடக்கிய பயங்கரவாதத்தின்பின் பின்னர் ஏற்பட்ட அனுபவங்களின் தடங்களை இவரது கவிதைகளில் பல உள்ளடக்கியுள்ளன.

தெளிவும், பிரிவாற்றாமையின் தடங்களையும் கொண்ட இவரது கவிதைகள் ஏன் இலங்கை சீரழிந்து கொண்டுள்ளது என்பதைக் காட்டுவதற்கான இலக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதக்கூடியது.

நன்றி தாயகம்

Ingen kommentarer: