torsdag den 26. juni 2008

யாரை, எப்போது புகழலாம்!

ஒருத்தரைப் புகழ்வதற்குக் கூட நேரம், காலம் இருக்கிறதா என்ன? கட்டாயம் இருக்கிறது என்கிறார் ஔவையார்.

நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும்
அப்படியே வாச மனையாளைப் பஞ்சனையில்
மைந்தர் தம்மை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்! -

ஔவையார்விளக்கம்:-
நண்பனைப் புகழ வேண்டுமானால் அவனைக் காணாதபோது மனமாரப் புகழ வேண்டுமாம்;
ஆசிரியர் என்றால் அவரை நேரிலும், மறைவிலும் எப்போதும் துதிக்கலாம்;
மனைவியைப் பஞ்சனையில் புகழ வேண்டுமாம்;
பெற்ற பிள்ளைகளைப் புகழ்வது மனதுக்குள் தானாம்;
வேலைக்காரர்களை, அவர்களது வேலைகளை முடித்த பிறகுதான் புகழவேண்டுமாம்.

நன்றி: தமிழோடு..

Ingen kommentarer: